BREAKING ரஜினிக்கு அடுத்துதான் விஜய்; சிம்புக்கு டைம் பிரச்சினை… : சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை சேப்பாக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பல்வேறு கேள்விக்கு பதிலளித்தார்.

“ஆடை அணிவது அவரவர்களின் தனி மனித உரிமை. நம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்றிருக்கிறார். அங்கு அவர் கோட் சூட் அணிந்திருக்கிறர்.

அது ஒரு குளிர் பிரதேசம். எனவே அதற்கு ஏற்பதான் உடை அணிய வேண்டும். இதனை கிண்டல் செய்பவர் மனநோயாளிகள்.

ஆயிரம் இருந்தாலும் அவர் நம் தமிழகத்தின் முதலமைச்சர். அதனை எப்படி இழிவாக பார்க்க முடியும்.

பெருந்தலைவர் காமராஜ் ரஷ்யா செல்லும்போது வேட்டி சட்டையுடன் சென்றார். அது இன்னும் பெருமையாக இருந்தது.

பின்னர் ரஜினி, விஜய் சிம்பு குறித்த கேள்விகளை கேட்டனர்.

சினிமாவில் ரஜினிகாந்திற்கு அடுத்த நிலையில் விஜய் இருக்கிறார். அவர் தான் அடுத்த சூப்பர் ஸ்டாராக வருவார்.
யார் யாரோ அரசியலுக்கு வருகிறார்கள், விஜய் கட்சி ஆரம்பித்தால் அதை வரவேற்பேன்.

சிம்பு படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வருவதில்லை. அதுதான் அவரது பெரும் பிரச்சினையாக இருக்கிறது.” என பதிலளித்தார் சீமான்.

Seeman talks about EPS Rajini Vijay and Simbu

கவுண்டமணியை கலாய்த்த வைபவ்; சிக்ஸர் பட ரிலீசில் சிக்கல்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 1991ல் பிரபு, குஷ்பூ, கவுண்டமணி நடிப்பில் வெளியாகி தமிழ் சினிமாவையே கலக்கிய படம் சின்னத்தம்பி.

இதில் மாலை கண் நோய் உள்ளவராக கவுண்டமணி நடித்திருப்பார்.

அந்த படத்தில் ஒரு காட்சியில்.. மாலை 6 மணிக்குள் தன் வீட்டிற்கு வந்துடுவார். அப்போது தன் தந்தை போட்டோவை பார்த்து…

டேய் தகப்பா.. ராத்திரியில என்ன பாவம் நீ செஞ்சியோ… எனக்கு 6 மணிக்கு மேல கண் தெரியல என்று திட்டுவார். ஆனா ஒன்னே ஒன்னுடா.. நான் கரண்ட் பில் கட்டணதேயில்லடா என்பார் கவுண்டமணி.

அதுபோல் இன்று வெளியாகும் சிக்ஸர் படத்தில் ஒரு காட்சியில் கவுண்டமணி போட்டோவை வைத்து.. டேய் தாத்தா.. என குறிப்பிட்டு அதே டயலாக்கை வைத்து பட நாயகன் வைபவ் திட்டியிருப்பார்.

இந்த நிலையில் இன்று வெளியாகவுள்ள இந்த சிக்ஸர் படத்திற்கு கவுண்டமணி எதிர்ப்பு தெரிவித்து இப்பட தயாரிப்பாளர்களான தினேஷ் கண்ணன் மற்றும் ஸ்ரீதர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், தன்னுடைய அனுமதி பெறாமல் புகைப்படத்தையும், வசனங்களையும் தவறான முறையில் பயன்படுத்தியுள்ளனர் என்றும் அந்த காட்சியை நீக்க வற்புறுத்தியுள்ளார்.

மேலும் மன்னிப்பும் கேட்க வேண்டும் எனவும் மீறினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நோட்டீசில் தெரிவித்துள்ளனர் கவுண்டமணி.

அறிமுக இயக்குநர் சாச்சி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் வைபவ், பல்லக் லால்வாணி, சதீஷ், ராதாரவி, இளவரசு, ஸ்ரீரஞ்சனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

Goundamani send Legal notice to Sixer team to remove controversy scene

2 வாரத்திற்குள் 2 படங்கள் ரிலீஸ்; ஆச்சரியப்படுத்தும் ஆர்யா!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெளன குரு படத்தை இயக்கிய சாந்தகுமார் தற்போது இயக்கியுள்ள படம் மகாமுனி.

ஆர்யாவுடன் மகிமா நம்பியார் இந்துஜா, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஆர்யா நடித்துள்ள இப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் வெளியானது.

இந்த காட்சிகளை பார்த்தவர்கள் பாராட்டி வருகின்றனர்.

செப்டம்பர் 6ல் வெளியாகவுள்ள இந்த படத்திற்கு சென்சார்போர்டு யு/ஏ வழங்கியுள்ளது.

இந்த படம் வெளியாகி 2வது வாரத்திற்குள் ஆர்யாவின் அடுத்த படம் ரிலீசாகவுள்ளது.

சூர்யாவுடன் ஆர்யா இணைந்துள்ள காப்பான் படம் செப்டம்பர் 20ல் திரைக்கு வருகிறது.

இந்த இரண்டு படங்களுக்கும் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.

Within 2 weeks Arya plans to release 2 movies

விலையில்லா விருந்தகம்.; வியக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் படங்கள் ரிலீசாகும் சமயத்தில் இவரது ரசிகர்கள் வித்தியாசமாக எதையாவது செய்து மக்களை கவர்ந்து விடுகின்றனர்.

மேலும் அவ்வப்போது மக்களுக்கும் நற்பணிகளை செய்து வருகின்றனர்.

தற்போது இவர்கள் உருவாக்கியுள்ள புதிய திட்டம் தான் விலையில்லா விருந்தகம்.

தினமும் காலை 7:35 முதல் 8:35 மணி வரை, ஓட்டலில் விலையில்லாமல் காலை உணவை உண்ணலாம்.

வருகிற ஒரு வருடத்திற்கு இது போல செய்யவுள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

சென்னை, மதுரை, கடலூர், சேலம், நாமக்கல், புதுக்கோட்டை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இதை செய்துள்ளனர்.

இவர்களின் இந்த சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Vilayilla Viruthangam Free food scheme by Vijay fans

ரசிகைகளை கவர அஜித் திட்டம்.; விஜய்யை மிஞ்சுவாரா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் அடிக்கடி உச்சரிக்கப்படும் வார்த்தைகளில் முக்கியமானது தல தளபதி.

இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் மற்றும் ரசிகைகள் அதிகம்.

இதில் விஜய்க்கு பெண் ரசிகைகள் அதிகம். தமிழ் நாடு மட்டுமில்லாது கேரளாவிலும் இவருக்கு ரசிகைகள் அதிகளவில் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய 2 படங்களிலும் அஜித்துக்கு ரசிகைகள் கிடைத்துள்ளனர்.

இந்த இரண்டு படங்களும் குடும்பம் மற்றும் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டதால் அஜித்தின் மகளுக்கும் பிடித்திருந்ததாம்.

எனவே இனி வரும் படங்களில் ரசிகைகளை கவர, அதற்கேற்ப காட்சிகளை வைக்க இயக்குனர்களிடம் சொல்லியிருக்கிறாராம் தல.

ஒருவேளை ரசிகைகள் வட்டத்தில் தளபதியை மிஞ்ச திட்டம் போட்டு இருக்காரோ? என்னவோ…

Ajith plans to beat Vijay in attracting girl fans

வெற்றிமாறனை தந்த தனுஷுக்கு கோடி நன்றி.. : தாணு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் அசுரன் .இப்படத்தை வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி S தாணு தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது,

“ஒரு படத்தில் இருந்து இன்னொரு படத்திற்கான ரிலீஸ் டேட் இந்தப்படம் தான் சீக்கிரம் வருகிறது. அதற்கு முக்கியமான காரணம் தாணு சார். இந்தப்படம் பூமணி எழுதிய வெக்கை நாவலில் இருந்து எடுத்தாளப்பட்டது.

வடசென்னை முடித்ததும் வடசென்னை 2 பண்ணலாமா என்று நினைத்தேன். பின் நானும் தனுஷும் இந்தப்படத்தை துவங்க முடிவு செய்தோம்.

நாம எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு விசயத்தை நடத்திட முடியாது. அது தானாவே அமையும். இந்தப்படத்திற்கு அப்படி எல்லாம் அமைந்தது. பசுபதி கூட வொர்க் பண்ணணும்னு பல படங்களில் நினைத்தேன் தற்போதுதான் முடிந்தது. முதலில் இப்படத்தில் நான் முடிவுசெய்த நடிகர் கருணாஸ் மகன் கென் தான்.

ஒரு இன்ஸ்பெக்டர் கேரக்டருக்கு பாலாஜி சக்திவேல் சார் நடிக்க முதலில் மறுத்தார். பின் சிறப்பாக நடித்துக்கொடுத்தார். நரேன் ஒரு ஸ்ட்ராங்கான ரோல் செய்துள்ளார்.

கஷ்டங்களில் இருந்து மீண்டு எப்படி வரக்கூடிய ஒரு கேரக்டர் மஞ்சுவாரியாருக்கு. படத்தில் உள்ள எல்லா கதாபாத்திரங்களும் சிறப்பாக இருக்கும்..தனுஷ் எந்த கேரக்டரில் நடித்தாலும் மெனக்கெடுவார். இந்தப்படத்திற்காக அதிக மெனக்கெடலை எடுத்துக்கொண்டார். தேரிக்காடு சூட்டிங் ஸ்பாட்டில் பைட் சீக்வென்ஸுக்காக ரொம்ப சிரமப்பட வேண்டிய இருந்தது. ஆனால் அதை அசால்டாக செய்தார்.

இந்தப்படம் எல்லோரிடமும் இருந்து எடுத்துக்கொண்ட கமிட்மெண்ட் அதிகம். முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார். என்னிடம் கதையே கேட்கவில்லை. சொன்ன நேரத்தில் சரியாக வருவார். இயக்குநர் ஏ.வெங்கடேஷ் அவர்களும் ஒரு கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளார்.

இப்படத்தில் ஒவ்வொரு நடிகர்களும் அவர்களின் அதிகபட்ச நடிப்பை கொடுத்தது எங்களின் வரம். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் எப்போதுமே நான் நினைப்பதை அப்படியே செய்து கொடுப்பார்.

என் கிரியேட்டிவிட்டியை எந்த இடத்திலும் தடை செய்யவே மாட்டார். நானும் ஜிவி பிரகாஷும் வொர்க் பண்ணும் போது ரொம்ப ஜாலியாக இருக்கும். இந்தப்படத்திற்காக நாங்க நிறைய ஸ்டெடி பண்ணோம். படத்தில் ஆர்.ஆர் ரொம்ப புதுசா இருக்கும். ஆர்ட் டைரக்டர் நான் போதும் என்று சொன்னாலும் அதைவிட அதிகமாக செய்து தருவார்.

என் கூட எடிட் வேலை செய்வது ரொம்ப சிரமம். என் எடிட்டர் அதைப்புரிந்து வேலை செய்தார். அதைப்போல தான் ஸ்டண்ட் மாஸ்டரும். எனக்கு இருக்கக் கூடிய மிகப்பெரிய ஷீல்ட் தனுஷ்”.

தயாரிப்பாளர் தாணு பேசியதாவது,

“தனுஷ் சொன்னதும் இந்தப்படத்தை உடனே துவங்கினேன். வியக்கத் தகுந்த இயக்குநர் வெற்றிமாறன். ஒருநாள் வெற்றிமாறன் போன் பண்ணி தனுஷ் இன்று ரொம்ப சிறப்பா நடிச்சிருக்கார் என்று சொல்வார்.

மறுநாள் தனுஷ் போன்பண்ணி, ” சார் வெற்றிமாறன் போல ஒரு இயக்குநரை நீங்கள் பார்க்கவே முடியாது என்பார். ஒரு தயாரிப்பாளருக்கு இதைவிட என்ன சந்தோசம் என்ன வேண்டும். வெற்றிமாறனை எனக்குத் தந்த தனுஷுக்கு கோடானகோடி நன்றி”என்றார்

இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பேசியதாவது,

“இந்த வாய்ப்பைத் தந்த தாணு சார் ,வெற்றிமாறன் சார் ,தனுஷ் சார் அனைவருக்கும் நன்றி. ஒரு மண் சார்ந்த படத்தில் வேலை செய்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப்படத்தில் உழைத்த அனைவரும் பெரிய அளவில் உழைத்துள்ளார்கள் “என்றார்

மஞ்சுவாரியர் பேசியதாவது,

“இந்தப்படம் எனக்கு ரொம்ப ஸ்பெசல். முதலில் படம் இப்படி ஒரு பவர்புல் டீமோட களம் இறங்குறது சந்தோஷமா இருக்கிறது. வெற்றிமாறன் படம் என்றால் ரசிகர்கள் காத்திருப்பார்கள்.

தனுஷின் ரசிகை நான். இவர்கள் அனைவரோடும் வேலை செய்தது நிஜமாகவே சந்தோஷமாக இருக்கிறது. இந்தப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.

Producer Thaanu express his thanks to Dhanush for Asuran Vetrimaaran

More Articles
Follows