தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதல் இயக்குநராக முனைவர் இரா.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இத் தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ட்விட்டரில் பதிவிட்டு மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.
அந்த ட்வீட்டில் ஆட்சியாளர்களின் பெயரோடு நடிகர் ரஜினிகாந்த்தையும் அமைச்சர் டேக் போட்டு பதிவு செய்திருந்தார்.
அதேபோல், மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து நடிகர் ரஜினியும் கடிதம் எழுதியிருக்கிறார்.
அந்தக் கடிதத்தை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
அதில், நாட்டில் உள்ள எல்லா மொழிகளின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என ரஜினி குறிப்பிட்டு இருந்தார்.
தமிழ் மொழியை மேலும் வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ரஜினிகாந்த் பாராட்டியிருந்தார்.
இந்த விவகாரம் ரஜினி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் மற்றவர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியது..
இந்தநிலையில், மத்திய அமைச்சர் நடிகர் ரஜினியை டேக் செய்தது குறித்தும் பல்வேறு கேள்விகளை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து சீமான், “சென்னை தரமணியில் அமைந்துள்ள மத்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் முதல் இயக்குநராக ஆர்.சந்திரசேகரன் என்பவரை நியமனம் செய்திருக்கும் மத்திய அரசின் செயல் பெரும் ஐயத்தைத் தோற்றுவிக்கிறது.
நீண்ட நெடுநாள்களாகச் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கு இயக்குநரை நியமிக்க வேண்டும் எனும் கோரிக்கை கிடப்பில் இருந்தவேளையில், தற்போது நடைபெற்றிருக்கும் நியமனம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், அதன் பின்புலத்தில் நடந்தேறிய அரசியல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது’’ என தெரிவித்துள்ளார்..