தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அப்போது முதலமைச்சரின் கொரோனா பேரிடர் நிதிக்கு, சீமான் நிதியளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது…
“எனது தந்தை இறப்பின் போது இரங்கல் அறிக்கை வெளியிட்டார். அதுவே ஆறுதலாக இருந்தது. அவர் அதோடு விட்டிருக்கலாம்.
ஆனால், அவர் போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறி என்னை நெகிழ வைத்துவிட்டார்.
பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை பற்றி முதல்வரிடம் வலியுறுத்தினோம்.
7 பேர் விடுதலை முடிவில் உறுதியாக இருப்பதாக பேசினார்.
பிளஸ் 2 தேர்வு குறித்தும் பேசினோம்.
மாணவர்களின் உயிரே முக்கியம். இந்த ஒரு வருடம் தேர்வு எழுதாவிட்டால் ஒன்றும் ஆகாது என்ற என்னுடைய கருத்தையும் தெரிவித்தேன்.
இவ்வாறு சீமான் பேசினார்.
புதிய அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்ற செய்தியாளர்கள் கேட்டதற்கு…` ஆட்சி நல்லா இருக்கு. கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
துறை அதிகாரிகள் நல்லா வேகமா இயங்குறாங்க. மருத்துவத் துறையில அண்ணன் மா.சுப்ரமணியன் சிறப்பா இயங்குறாரு ” என்றார் சீமான்.
Seeman praises MK Stalin and Ma Subramanian
