தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நாகை, காரைக்கால், மயிலாடுதுறையில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாம்.
தஞ்சை, திருவாரூர், சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு அனைத்து அம்மா உணவகங்களில் உணவு தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நாளை நவம்பர் 25 (புதன்கிழமை) தமிழகம் முழுவதுமுள்ள அரசு அலுவலகங்களுக்கு பொது விடுமுறை என எடப்பாடி அறிவித்துள்ளார்.
நிவர் புயல் கரையை கடக்கும் நேரத்தில் மட்டும் பாதிப்பு இருக்கக் கூடிய பகுதிகளில் பெட்ரோல் பங்க்குகள் புயல் கரையை கடக்கும் வரை மூடப்படும் என தமிழ்நாடு பெட்ரோல் வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தேவையான அளவு பெட்ரோல் இருப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
மேலும் நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் நாளை நவம்பர் 25 கரையைக் கடக்க உள்ளதால் புதுச்சேரியில் இன்று இரவு 9 மணி முதல் 26-ந்தேதி காலை 6 மணிவரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் புதுச்சேரியை தொடர்ந்து காரைக்காலிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாளை நவ 25 காலை 10 மணி முதல் 26 தேதி அதிகாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்.
Section 144 imposed in Pondy and Karaikal