தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஞ்சித் இயக்கும் ரஜினியின் காலா சூட்டிங் இரண்டு வாரங்களாக மும்பையில் நடைபெற்று வருகிறது.
இதனிடையில் மகாராஷ்ட்ர மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா ரஜினியை சந்தித்து பேசினார் என்பதை நாம் பார்த்தோம்.
இது தொடர்பான படங்களும் வெளியாகி அரசியல் உலகில் பரபரப்பாக பேசப்பட்டது.
மரியாதை நிமித்தமாக ரஜினியை சந்தித்ததாக முதல்வர் மனைவி தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் காலா படத்தில் அம்ருதா ஒரு பாடலை பாடக்கூடும் என மும்பை வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
இதுதொடர்பாகதான் ரஜினியை சந்தித்து பேசியதாகவும் சொல்லப்படுகிறது.
பாட்டு, மாடலிங், சினிமா என ஆர்வம் கொண்டவராம் அம்ருதா.
மேலும் பெண் சிசு கொலை தொடர்பாக விழிப்புணர்வு பாடல் ஒன்றையும் அண்மையில் பாடியிருந்தாராம்.
Secret behind Amruta wife of Maharastra Chief Minister Devendra Fadnavis and Rajini meet