சூர்யா நடிக்க வேண்டிய கேரக்டரில் சசிகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொம்பன் மற்றும் மருது ஆகிய படங்களை தொடர்ந்து முத்தையா இயக்கவுள்ள படத்தில் சூர்யா நடிப்பார் என கூறப்பட்டது.
ஆனால் மற்ற படங்களில் நடிக்க கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.
எனவே சூர்யாவுக்காக எழுதிய கதையில் சசிகுமாரை நடிக்க வைத்துவிட்டாராம் முத்தையா.
கொடி வீரன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் மஹிமா நம்பியார், சனுஷா, பால சரவணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இதன் சூட்டிங் நேற்றுமுதல் தொடங்கியது.

படத்தின் நாயகன் சசிகுமாரே இப்படத்தை தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷுக்கு காத்திராமல் பிரபுதேவாவுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எவருமே எதிர்பாராத சமயத்தில், தான் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்கவுள்ளதை அறிவித்தார் தனுஷ்.

இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது.

இந்த அறிவிப்பு வந்து பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் மற்ற படங்களை முடித்துக் கொடுத்தார் தனுஷ்.

இதன் படப்பிடிப்பு அக்டோபரில்தான் துவங்கும் என தகவல்கள் வந்தன.

எனவே தனுஷ் வரும்வரை அவருக்கு காத்திராமல் பிரபுதேவா நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்கவிருக்கிறாராம் கார்த்திக் சுப்புராஜ்.

இதில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமானார் கன்னட நடிகை சம்யுக்தா ஹெக்டே.

ஆனால் கால்ஷீட் பிரச்சினையாலும் சில கன்னட அமைப்புகள் பிரச்சினையாலும் இவர் விலக, தற்பேது புதிய நாயகியை தேடிக் கொண்டிருக்கிறாராம் கார்த்திக் சுப்புராஜ்.

லைக்கா நிறுவன ஆஸ்பத்திரியை திறந்து வைத்தார் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கி, ரஜினி நடிப்பில் உருவாகிவரும் 2.0 படத்தை ரூ. 400 கோடி செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதனிடையில் இலங்கை தமிழர்களுக்கு கட்டப்பட்டுள்ள வீடுகளை இலவசமாக கொடுக்க நினைத்த லைக்கா நிறுவனம், ரஜினியை இலங்கைக்கு அழைத்தனர்.

ஆனால் ரஜினி இலங்கை செல்லக்கூடாது என தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் நெருக்கடி கொடுக்கவே ரஜினி செல்லவில்லை.

தற்போது சென்னையில் லைக்கா நிறுவனர் சுபாஸ்கரன் அவர்களால் கட்டப்பட்டுள்ள ‘வெஸ்ட் மின்ஸ்டர்’ என்ற ஆஸ்பத்திரியை ரஜினிகாந்த் திறந்து வைத்துள்ளார்.

சென்னை ஜெமினி மேம்பாலம் அருகே கிட்டதட்ட ரூ.125 கோடி செலவில் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விழாவில் ரஜினி பேசியதாவது…

“சுபாஷ்கரனை எனக்கு இரண்டு ஆண்டுகளாகத்தான் தெரியும். ஆனால் ஒரு நாற்பது ஆண்டுகள் பழகிய மாதிரி நெருக்கமாகிவிட்டார்.

நல்ல மனிதர், மனிதாபிமானி. அவர் இந்த மருத்துவமனையை சேவை நோக்கத்தில் திறந்திருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகள்” என்றார்.

சிவகார்த்திகேயன் படத்திலிருந்து விலகும் சமந்தா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரெமோ படத்தை முடித்தவுடன் அதிரடியாக இரண்டு படங்களை ஒப்புக் கொண்டார் சிவகார்த்திகேயன்.

ஒரு படத்தை மோகன்ராஜா இயக்க, அதில் நயன்தாராவுடன் நடித்து வருகிறார்.

தற்போது வேலைக்காரன் என்று பெயரிடப்பட்ட இதன் சூட்டிங் மலேசியாவில் நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து மற்றொரு படத்தை பொன்ராம் இயக்க அதில் சமந்தா உடன் நடிக்கவிருந்தார்.

ஆனால் அதன் சூட்டிங் இதுவரை தொடங்கவில்லை.
அதற்குள் சமந்தா வீட்டில் திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற துவங்கவுள்ளது.

சமந்தாவை நிச்சயம் செய்த நாக சைதன்யாவும் அக்டோபர் மாதத்திற்குள் திருமணத்தை முடிக்க திட்டமிட்டுள்ளாராம்.

எனவே சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கும் போது கால்ஷீட் குளறுபடி ஏற்பட வாய்ப்புள்ளதால் அதிலிருந்து சமந்தா விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

கான்ஸ் பட விழாவில் சங்கமித்ரா… ஸ்ருதிஹாசன் ‘குஷி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீதேனாண்ட்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், சங்கமித்ரா என்ற பெயரிடப்பட்ட படத்தை சுந்தர் சி மிகப்பிரம்மாண்டமான இயக்கவிருக்கிறார்.

8ஆம் நூற்றாண்டில் நடைபெறுவதாக உள்ள இந்த கதையில் ஜெயம் ரவி மற்றும் ஆர்யா இருவரும் நடிக்கின்றனர். இசை ஏஆர். ரஹ்மான்.

இந்தப் படத்தில் வீரமும், தீரமும் நிறைந்த வீர மங்கையாக நாயகி ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.

இதற்காக அவர் லண்டனில் தங்கியிருந்து விஷேச பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என்பதை பார்த்தோம்.

இந்நிலையில், வரும் மே 18ஆம் தேதி நடைபெறும் சர்வதேச 70வது கான்ஸ் திரைப்பட விழாவின் துவக்க நாளில், ‘சங்கமித்ரா’ திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் இப்படக்குழுவினர், தயாரிப்பாளர்கள் நாராயணன் ராமசாமி, ஹேமா ருக்மணி புரொடெக்‌ஷன் டிசைனர் சாபு சிரில் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

“கான்ஸ் திரைப்பட விழாவில் ‘சங்கமித்ரா’ அறிவிப்பு வெளியாவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

Shruti Hassan Is Going To Cannes 2017 With Sangamithra

அல்லு அர்ஜூன் நடிக்க, ரூ. 500 கோடி செலவில் ராமாயணம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு படம் ஹிட்டானால் அதுவே டிரெண்டாகி தயாராகவுள்ள மற்ற படங்களும் அதே போல் உருவாகும்.

அதுபோன்ற டிரெண்ட்டை தற்போது பாகுபலி உருவாக்கியுள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல.

சரித்திர கால கதையில் உருவான இது பெற்றி பெறவே, மகாபாரதம் கதை மோகன்லால் நடிப்பில் ரூ. 1000 கோடியில் உருவாகவுள்ளது என்பதை பார்த்தோம்.

மேலும் சுந்தர் சி இயக்கத்தில் சங்கமித்ரா படமும் மிகப்பிரம்மாண்டாக உருவாகவுள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்போது ராமாயண இதிகாசத்தை ரூ. 500 கோடியில் படமாக தயாரிக்க 3 தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளனர்.

தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு என்று 3 மொழிகளில் உருவாகும் இப்படத்தை அல்லு அரவிந்த், மது மந்தீனா மற்றும் நமீத் மல்கோத்ரா ஆகியோர் தயாரிக்கவுள்ளனர்.

அதுவும் இப்படத்தை 3டி தொழில்நுட்பத்தில் தயாரித்து 3 பாகங்களாக வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இதில் அல்லு அர்ஜீன் நாயகனாக நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தற்போது இதற்கான பணிகள் தொடங்கிவிட்டதாம்.

ராஜமௌலியின் மகதீரா படத்தை தயாரித்தவர் அல்லு அரவிந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

Allu Arjun in the 500 crore project Ramayana which will have 3 Parts with 3 Producers

More Articles
Follows