தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2016 சட்டன்றத் தேர்தல் சமயத்தின் போது, ரூ. 570 கோடிக்கும் அதிகமான தொகை 3 கண்டென்யர்கள் லாரியில் சிக்கியது.
ஒரு பக்கம் இது வங்கிக்கு சொந்தமான பணம் என கூறப்பட்டது.
அவை யாருக்கு சொந்தமான பணம்? என்பது மர்மமாகவே உள்ளது. ஆனால் பணம் சேர வேண்டிய இடத்திற்கு சேர்ந்து விட்டதாகவும் தகவல்கள் வந்தன.
ஆக இது ஒரு அரசியல் விளையாட்டு என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
இந்நிலையில் இது போன்ற ஒரு காட்சி தற்போது விஜய் நடித்து வரும் சர்கார் படத்தில் இடம் பெறுவதாக கூறப்படுகிறது.
அந்த கோடிக்கணக்கான பணம் உள்ள லாரியை மடக்குவாராம் விஜய்.
இதனால் அரசியல்வாதிக்கும் அவருக்கும் பெரிய பிரச்சினை உருவாகும் எனவும் தெரிகிறது.
அதன்பின்னர் மக்கள் மத்தியில் அந்த உண்மையை விஜய் உடைப்பார் என தகவல்கள் தெரிவிக்கிறது.
ஆக சர்கார் படம் அரசியல் சரவெடியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
Sarkar movie will reveal real Political stunts of Tamilnadu