தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
முருகதாஸ் இயக்கிய சர்கார் பட கதை திருட்டு விவகாரம் நாம் அறிந்த ஒன்றுதான்.
அந்த கதை வருண் என்பவருக்கு சொந்தமானது என எழுத்தாளர் சங்கத் தலைவர் பாக்யராஜ் உறுதியளிக்க இது சர்ச்சையானது.
எனவே விஜய் ரசிகர்கள் பாக்யராஜை விமர்ச்சிக்க தொடங்கினர்.
இந்த விவகாரம் கோர்ட் வரை சென்றது.
இறுதியாக வருண் உடன் முருகதாஸ் சமரசம் செய்துக் கொண்டார்.
சர்கார் படம் தீபாவளிக்கு வெளியாகிறது.
இந்நிலையில் இந்த விவகாரத்திற்கு பிறகு இன்று தன் பதவியை பாக்யராஜ் ராஜினாமா செய்துள்ளார்.
சர்க்கார் பட கதை விவகாரத்தில் நான் கெஞ்சியும் இயக்குனர் முருகதாஸ் உடன்படவில்லை.
இதன் காரணமாகவே சன் பிக்சர்ஸ் போன்ற பெரிய தயாரிப்பாளரின் படத்தின் கதையை பற்றி வெளியே சொல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன்.
தேர்தலில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்படாமல் நேரடியாக நான் தேர்வானதுதான் நான் சந்தித்த அசௌகரியங்களுக்கு காரணமாக நினைக்கிறேன்.
எனக்கு நேர்ந்த அசௌகரியங்களை பற்றி சங்க நலன்கருதி வெளியிட விரும்பவில்லை.” இவ்வாறு இயக்குனர் கே பாக்யராஜ் அறிக்கை தெரிவித்து ராஜினாமா செய்துள்ளார்.