சரத்குமாரின் உறவினர் ஹீரோவாக நடிக்கும் கோகோ மாக்கோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சரத்குமார் உறவினர் ராம்குமார் கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கு வித்தியாசமாக ‘கோகோ மாக்கோ’ என்று பெயரிட்டுள்ளனர்.

ராம்குமார் ஏற்கெனவே ‘இந்த நிலை மாறும்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

‘ரூப் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் கிரி, அருண்காந்த் இருவரும் இணைந்து தயாரிக்கும் ‘கோகோ மாகோ’ படத்தில் ராம்குமாருடன் தனுஷா நாயகியாக நடித்துள்ளார்.

இவர்களுடன் ஒய்.ஜி.மகேந்திரன், சாம்ஸ், சந்தானபாரதி, டெல்லி கணேஷ், பாண்டு முதலானோரும் நடிக்கிறார்கள்.

இந்த படத்தை இதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான அருண் காந்த் இயக்குவதோடு இசை அமைக்கவும் செய்கிறார்.

ஒளிப்பதிவை சுகுமாரன் சுந்தர் கவனிக்கிறார்.

இப்பட பூஜையை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.

நானும் ஆன்மீகவாதிதான்… காசு மேலே காசு இசை வெளியீட்டு விழாவில் பாரதிராஜா பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று பிரசாத் லேப் தியேட்டரில் “காசு மேலே காசு” இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன், P.வாசு, பாண்டியராஜன், தரணி, நடிகர் விவேக், மயில்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா பேசியதாவது..

ஒரு படத்தில் ஹீரோவாக நடிப்பது ஈஸி ஆனால் காமெடியனாக நடிப்பதற்கு ஹார்சிய உணர்வு நிறைய வேண்டும். ஹார்சிய உணர்வு அதிகம் மிக்கவன் மயில்சாமி அதைவிட இதயம் சுத்தமானவன். மக்களை மகிழ்விப்பதில் மன்னன். எனக்கு ஹார்சிய உணர்வு கொஞ்சம் கூட இல்லை. ஆனால் இந்த படத்தின் அழைப்பிதழ் பார்த்ததும் விழுந்து விழுந்து சிரிச்சேன். இந்தப்படத்தின் பாடல்களை பார்த்தேன் நிச்சயம் இந்தப்படம் வெற்றிப்படமாக அமையும்.

நம் நிலம் களவாடப்படுகிறது, மொழி களவாடப்படுகிறது, கொஞ்சம் விட்டால் இந்த இனமே களவாடப்படும் முழித்துக்கொள். டைனோசர் இனம் அழியக்காரணம் அதனிடம் எதிர்ப்பு சக்தி இல்லாதது தான். தமிழனுக்கு ருத்ரம் இப்போது அதிகமாக தேவைப்படுகிறது.

நானும் ஆன்மீகவாதி தான். முருகன் என்பவன் ஆறுபடை வீடுகளை ஆண்ட சாதாரண மனிதன் பின்னாளில் நாம் தான் கடவுள் ஆக்கிட்டோம்.

இந்து, கிறிஸ்தவர், முஸ்லீம் நீ யாராகவோ இரு ஆனால் ஆட்சியில் இருக்கும் அஞ்சு வருசம் P.M, C.M ரெண்டு பேருமே காமன் மேனாக இருக்க வேண்டும் என்று ஆளுகின்ற கட்சிகளுக்கு ஏதோ உணர்த்துவதைப்போல பேசினார்.

கதாநாயகன் ஷாருக், நாயகி காயத்ரி படத்தில் இன்னொரு ஹீரோவாக மயில்சாமி நடிக்கிறார். இவர்களுடன் கஞ்சா கருப்பு, கோவை சரளா, நளினி, மதுமிதா, லொள்ளுசபா சாமிநாதன் ஆகியோர் நடித்த முழு நீள காமெடி படம் “காசு மேலே காசு”

இசை பாண்டியன், கேமரா சுரேஷ்தேவன், பாடல்கள் கருப்பையா, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் கே.எஸ்.பழனி.

தயாரிப்பு
P.ஹரிஹரன்
B.உதயகுமார்
P.ராதாகிருஷ்ணன்.
எக்ஸ்குயூட்டிவ் புரொட்யூசர் A.சுதாகர்

சூர்யாவின் நிலைமையை கண்டு மயங்கி விழுந்த பிரபல நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர், காமெடி நடிகர், தயாரிப்பாளர், குணச்சித்திர நடிகர் என பன் முகம் கொண்டவர் மனோபாலா.

இவரின் சமீபத்திய பேட்டியில் சூர்யாவுடன் நடித்த அனுபவம் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்.

இவர் விக்ரம் தேசிய விருது பெற்ற பிதாமகன் படத்தில் சூர்யாவின் நண்பராக நடித்திருந்தார்.

அதில் அவர்… படத்தில் சூர்யா இறப்பதாக ஒரு காட்சி.

அன்று எனக்கு உடல்நிலை சரியில்லை. நான் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தேன.

இருந்தபோதிலும் சூட்டிங் சென்றேன்.

அப்போது என் அருகே உள்ள சாக்கு மூட்டையில் சூர்யா இருக்கிறார் என்பது எனக்கு தெரியாது.

அப்போது அவரின் அடிபட்ட முகத்தை பார்த்து நான் பயந்து அப்படியே ஷாக்காகி விட்டேன். பின் என்னையறியாமல் மயங்கி விழுந்துவிட்டேன் என தெரிவித்துள்ளார்.

பாலாவின் நாச்சியார் படத்தை திரையிட மறுத்த தியேட்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள படம் நாச்சியார்.

இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டீசர் வெளியானது முதலே இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

பெரிய எதிர்பார்ப்பில் உள்ள இந்த படம் தமிழ்நாடு முழுவதும் அதிக்கமான தியேட்டர்களில் வெளியாகிறது.

இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல தியேட்டரான GK சினிமாஸில் இந்த படம் வெளியாகாது என அதன் உரிமையாளர் அறிவித்துள்ளார்.

தன் விநியோகஸ்ரின் ஒப்பந்தம் பற்றிய பிரச்சினை நீடிப்பதால் இந்த படத்தை திரையிட முடியாது என தெரிவித்துள்ளனர்.

We regret to inform that #Naachiyaar will not be screened in our premises due to non-agreement in terms between distributor and us!

— Ruban Mathivanan (@GKcinemas)

முதன்முறையாக சந்தானம் படத்தின் 2ஆம் பாக படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லொள்ளு சபா’ புகழ் ராம்பாலா இயக்கத்தில் சந்தானம், மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற படம்

‘தில்லுக்கு துட்டு’.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளனர்.

இதன் முதல்பாகத்தை ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்து இருந்தது.

ஆனால் இரண்டாம் பாகத்தை இயக்குனர் ராம் பாலா சொந்தமாக தயாரிக்கவிருக்கிறாராம்.

ராம்பாலா இப்போது ‘கயல்’ சந்திரன் நடிப்பில் ‘டாவு’ படத்தை இயக்குகிறார்.

சந்தானம் ‘சர்வர் சுந்தரம்’, ‘ஓடி ஓடி உழைக்கணும்’, ‘மன்னவன் வந்தானடி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் தங்கள் படங்களை முடித்துவிட்டு விரைவில் தில்லுக்கு துட்டு 2ஆம் பாகத்தில் இணைவார்கள் என தெரிய வந்துள்ளது.

நாயகனாக நடிக்க தொடங்கிய பின் ‘தில்லுக்கு துட்டு’ தான் சந்தானம் நடிக்கும் முதல் இரண்டாம் பாகப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

விமல்-வரலட்சுமி ஜோடிக்கு கன்னி ராசி ஒர்க் அவுட் ஆகுமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தயாரிப்பில், எஸ்.முத்துக்குமரன் இயக்கும் இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக, வரலட்சுமி நடித்து வருகிறார்.

பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து, கதைக்களத்தை அமைத்திருக்கிறார் இயக்குநர் எஸ்.முத்துக்குமரன். இப்படத்திற்கான ஒளிப்பதிவு பணிகளை எஸ்.செல்வகுமார் மேற்கொள்ள, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். ராஜா முகமது எடிட்டிங் பணியை மேற்கொள்கிறார்.

இப்படத்தின் பாடல்களை யுகபாரதி எழுத, கலா மற்றும் விஜி நடனம் அமைக்கின்றனர்.

இப்படம் குறித்து பேசிய இயக்குநர் “படத்தில் கதாநாயகன் விமல் குடும்பத்தினர் அனைவருக்கும் கன்னிராசி. எல்லோருமே காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால் விமல், பெற்றோர்கள் நிச்சயிக்கும் பெண்ணைத் தான் திருமணம் செய்து கொள்வது என்ற லட்சியத்துடன் இருக்கிறார். இந்த நிலையில் விமல் வீட்டின் எதிர் வீட்டிற்கு வரலட்சுமி குடும்பத்தினர் குடி வருகிறார்கள். இரண்டு குடும்பத்தினரூம் சந்தித்து கொள்ளும் என்ன நடக்கிறது என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்கள். இப்படத்தில் விமலும், வரலட்சுமியும் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர். படம் முழுவதுமே விமலும், வரலட்சுமியும் செய்கின்ற காதல் காட்சிகளும், காமெடி காட்சிகளும் மக்களின் பேராதரவைப் பெறுவது நிச்சயம்.” என்கிறார் இயக்குநர்.

கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரிப்பில் நட்சத்திரப் பட்டாளங்களுடன் கூடிய மற்றொரு படம் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது

More Articles
Follows