தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நாளுக்கு நாள், இந்தியாவில் கொலை குற்றங்கள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கூட சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையில் ஸ்வாதி என்ற இளம் பெண் கொலை செய்யப்பட்டார்.
தப்பித்து சென்ற அந்தக் கொலைக்காரன் ராம்குமாரை நேற்று இரவு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இதுபோன்ற குற்றங்களை தடுக்க நடிகர் சரத்குமார் ஒரு புதிய இளைஞர் படையை அமைக்க இருக்கிறாராம்.
அதுகுறித்து தன் முகநூல் பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது…
“மரம் வெட்டுபவன் குலம் நாசம் என்பார்கள், ஆனால் சக மனிதனை வெட்டுவதை வேடிக்கை பார்க்கும் அளவிற்கு மனித குலம் குரூரமானதாக ஆகிவிட்டதா?
மனித இனத்தை நல் வழியில் எடுத்து செல்ல மீண்டும் ஒரு கண்ணனோ, ஏசுவோ, புத்தரோ, காந்தியோ பிறக்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறோமா?
ஒரு சம்பவத்தை பற்றி பேசி தாம் நல்லவர் என்று பறை சாற்றிக்கொள்ளும் வகையில் சிலர் சில கருத்துக்களை உதிர்த்து வருகின்றனர்.
பலருக்கும் இது பொழுது போக்கு போல் ஆகிவிட்டது. பேசுபவர்கள் அனைவரும் இப்படிப்பட்டவர் என சொல்ல முடியாது.
இது போன்ற குற்றங்களுக்கு வாய் வார்த்தைகளால் தீர்வு சொல்வதை விட செயலில் இறங்கினால்தான் கொடுமைகளை தடுக்க முடியும்
ஸ்வாதியை கொலை செய்த கொலையாளி உருவாகுவற்கு அது போன்ற எண்ணங்கள் உருவாகுவது இந்த சமுதாயத்தில் இருந்துதான்.
இந்த சமுதாயத்தை உருவாக்குவதில் நமக்கும் பங்கு இருக்கிறது.
இதற்கு விடை காணும் முயற்சியாக 100 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க இருக்கிறேன்.
அவர்களை தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும், தன்னை பாதுகாத்து கொள்பவர்களாகவும் உருவாக்குவேன்.
பின்னர் இது போன்ற கொடுமைகளை கண் எதிரே நிகழாமல் தடுப்பவர்களாகவும் உருவாக்குவேன்.
என்னுடைய இந்த முயற்சிக்கு ஆதரவு அளிப்பவர்களும், இது போன்ற பணிகளுக்கு விருப்பம் உள்ளவர்களும் என்னை தொடர்பு கொள்ளலாம்.
அரசியல் சாயம் இல்லாத மக்கள் பணியாற்றிட விரும்பும் மக்களை வேண்டி அழைக்கிறேன்.”
என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.