தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மானேஜராக இருந்தவர் சங்கர்ராமன்.
இவர் கடந்த 2004ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் கோயில் அலுவலகத்திலே வைத்து கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக, காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி உள்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆனால் அதன்பின்னர் அவர்கள் நிரபராதிகள் என விடுதலை ஆகிவிட்டார்கள்.
அப்படி என்றால் அந்த சங்கர்ராமனை யார் கொலை செய்தார்கள்? என்ற விடை யாருக்குமே தெரியாது. (இதுதான் இந்திய சட்டத்தின் நிலை..)
இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து, ’ஆச்சார்யா அரெஸ்ட்’ என்ற பெயரில் ஒரு புதிய படம் ஒன்று உருவாகவுள்ளது.
இத்ற்கு துணைத் தலைப்பாக அதாங்க டேக் லைனாக, ‘ஒவ்வொரு இந்துவுக்கும் அவமானம்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகிறது.
கன்னட இயக்குனர் ஸ்ரீனிவாஸ் ராஜூ இயக்க, சங்கராச்சாரியராக அனுபம் கெர் நடிக்கிறாராம்.
மன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு படத்திலும் மன்மோகன் சிங்காக அனுபம் கெர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sankararaman murder case movie news Anupam Kher in Shankaracharya character