மீண்டும் சசிகுமார்-சமுத்திரக்கனி இணையும் நாடோடிகள் 2

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2009ஆம் ஆண்டில் பரபரப்பாக பேசப்பட்ட படம் நாடோடிகள்.

மைக்கேல் ராயப்பன் தயாரித்த இப்படத்தை சமுத்திரக்கனி இயக்க, சசிகுமார், விஜய் வசந்த், பரணி, அனன்யா, அபிநயா நடித்திருந்தனர்.

மாபெரும் வெற்றிப் பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது 9 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகவுள்ளது.

இப்படத்தை சசிகுமார் தயாரித்து இயக்கி நடிக்கவுள்ளாராம். இதில் முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறாராம்.

விரைவில் இப்படம் குறித்த மற்ற தகவல்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Samuthirakani and Sasikumar to join hands for Nadodigal 2

ரஜினி-கமலை தொடர்ந்து நேரடி அரசியலில் பாக்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவது ஒன்றும் புதிதல்ல. எனவே அது பற்றி நாம் விரிவாக பாரக்க வேண்டிய அவசியமில்லை.

அண்மையில் நாங்கள் அரசியலுக்கு வருவது உறுதி என ரஜினியும் கமலும் அறிவித்துவிட்டனர்.

இவர்களைத் தொடர்ந்து நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் அவர்களும் முழு நேர அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார்.

எம்ஜிஆரின் கலை உலக வாரிசாக அறிவிக்கப்பட்டவர் நடிகர் பாக்யராஜ்.

எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற போது, தமிழகம் முழுவதும் அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்தவர் பாக்யராஜ்.

எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு ஜானகி அணியை ஆதரித்தார். அதன் பின்னர், அவரே தனிக்கட்சி தொடங்கினார்.

சில ஆண்டுகளுக்கு பின்னர் திமுகவில் சேர்ந்தார்.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போது அவர் கூறியதாவது..

“lநேரடி அரசியல் குறித்து முடிவு எடுக்கும் வாய்ப்பு வந்துவிட்டது. ஒருமாதத்திற்குள் முடிவைச் சொல்லுவேன்.

யாருக்கு ஆதரவு, ஏன் ஆதரவு என்றெல்லாம் அப்போது தெரியும். கொஞ்சம் பொறுத்திருங்கள்” என்று தெரிவித்தார் பாக்யராஜ்.

Actor cum Director K Bhagyaraj entering into Politics soon

பிப்ரவரியில் 2 படங்களுடன் களமிறங்கும் ஜீவா-நிக்கிகல்ராணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் காளீஸ் இயக்கத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி, அனைகா சோடி, ராஜேந்திர பிரசாத், கோவிந்த் பத்மசூர்யா, சுஹாசினி, ஆர்.ஜே.பாலாஜி, மனோபாலா, மீரா கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் கீ.

மைக்கேல் ராயப்பன் தயாரித்து வரும் இப்படத்திற்கு சென்சாரில் ‘U’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

விஷால் சந்திரசேகர் இசையமைக்க, ஒளிப்பதிவை அபிநந்தன் ராமானுஜம் மேற்கொண்டுள்ளார்.

142 நிமிடங்கள் ஓடும் இப்படத்தை பிப்ரவரி 9-ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளனர் என்பதை பார்த்தோம்.

இதே மாத்த்தில் ஜீவா நடித்துள்ள மற்றொரு படமான கலகலப்பு 2 படம் வெளியாகவுள்ளது.

சுந்தர் சி. இயக்கியுள்ள இப்படத்தில் ஜீவா உடன் ஜெய், மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரீன் தெரசா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்

அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பாக நடிகை குஷ்பூ இப்படத்தை தயாரித்துள்ளார்.

சூர்யா-தனுஷ் மீது லைட் கோபத்தில் சாய்பல்லவி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் தமிழக ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் சாய்பல்லவி.

இவரின் அழகிய நடிப்பால் அந்த மலர் டீச்சர் கேரக்டர் படு பாப்புலராக பேசப்பட்டது.

எனவே இவரின் நேரடி தமிழ் படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.

ஆனால் தெலுங்கு சினிமா பக்கம் சென்று அங்குள்ள ரசிகர்களை கவர்ந்தார்.

இதனிடையில் லைகா தயாரிப்பில் கரு என்ற தமிழ் படத்தில் நடித்தார். அந்த படம் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் திடீரென தனுஷ் உடன் மாரி2 மற்றும் சூர்யா உடன் செல்வராகவன் படம் என கமிட் ஆனார்.

ஒரே நேரத்தில் இரண்டு முன்னணி நட்சத்திரங்களுடன் நடிப்பதால் மிக உற்சாகத்தில் இருந்தாராம்.

ஆனால் இவர் கமிட்டான பிறகு தனுஷ் படத்தில் வரலட்சுமி இணைய, சூர்யா படத்தில் ரகுல் பிரித்தி சிங் இணைந்துவிட்டார்.

எனவே தன் கேரக்டருக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுமோ? என லைட்டான கோபத்தில் இருக்கிறாராம் இந்த மலர் டீச்சர்.

நான் செஞ்ச வேலைக்கு ரஜினி செம கடுப்பாயிருப்பார்..: சாந்தனு பாக்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலேசியா நாட்டில் நடிகர் சங்கத்தின் நட்சத்திர கலைவிழாவை முடித்துவிட்டு சென்னை திரும்பி வந்துக் கொண்டிருக்கின்றனர் தமிழக கலைஞர்கள்.

இதில் பங்கேற்ற பெரும்பாலான நடிகர், நடிகைகள் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

மேலும் சிலர் ரஜினி விமானத்தில் அமர்ந்திருக்கும்போது வரிசையாக நின்று படம் எடுத்து தங்கள் இணைய பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த வரிசையை முதலில் ஆரம்பித்து வைத்தவர் நடிகர் சாந்தனு பாக்யராஜ்தானாம்.

அவருக்கு ஆதவ் கண்ணதாசன் நன்றி சொல்ல, அட.. இந்த செயலுக்கு ரஜினி சார் என் மேல செம கடுப்புல இருப்பார் என ட்வீட் செய்துள்ளார்.

ஆனால் இறுதிவரை அவர் போட்டோ எடுக்கவில்லை என்பதையும் பதிவிட்டுள்ளார்.

Shanthnu Buddy‏Verified account @imKBRshanthnu

Shanthnu Buddy Retweeted Aadhav Kannadhasan

I’m sure @superstarrajini sir is going have mahaaaaa kaduppu on me for starting that pic que

Aadhav Kannadhasan‏Verified account @aadhavkk

@imKBRshanthnu Thank you sonuuu for this and for starting the big queue

Shanthnu Buddy‏Verified account @imKBRshanthnu 8m8 minutes ago

Shanthnu Buddy Retweeted KALEESHWARAN

எல்லாருக்கும் வழி அமைச்சு குடுத்து கடைசீல நா போட்டோ எடுக்கவே இல்லையே

மெரினா புரட்சி பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2016ஆம் ஆண்டு இதே ஜனவரி மாதம் உலகையே திரும்பி பார்க்க வைத்தனர் நம் தமிழக இளைஞர்கள்.

அறவழியில் எந்தவொரு தலைமையில் இல்லாமல் ஜல்லிக்கட்டு மெரினா புரட்சியை நடத்தி சரித்திரத்தில் இடம்பெற்றனர்.

தற்போது ஓராண்டு நிறைவான நிலையில் இந்த புரட்சியை திரைப்படமாக்க இருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.

தன் பசங்க புரொடக்சன்ஸ் சார்பாக இந்த படத்தை தயாரிக்கிறார்.

எம்எஸ். ராஜ் என்பவர் இயக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, அல்லுருபியன் இசையமைக்கிறார்.

விரைவில் இதன் ட்ரைலர் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இதன் பர்ஸ்ட் லுக்கை சிவகார்த்திகேயன், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.

Sivakarthikeyan revealed Pandirajs Marina Puratchi first look

More Articles
Follows