ரசிகர்கள் கிண்டலை தவிர்க்க ஜுலிக்கு சமுத்திரக்கனி அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிவு மறைவு இல்லாத நடவடிக்கையால் ரசிகர்களிடையே ஓவர் பாப்புலர் ஆனார் ஓவியா.

ஆனால் இவருக்கு நேர் எதிராக நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றவர் ஜல்லிக்கட்டு போராட்ட புகழ் ஜுலி.

இவர் தற்போது எங்கு சென்றாலும், எந்த நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டாலும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் கலந்துக்கொண்ட ஒரு நிகழ்ச்சியில் இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனியும் கலந்துக்கொண்டார்.

அப்போது ஜுலியை சந்தித்த அவர், என்ன கிண்டல் செய்தாலும், நீ எதையும் பொருட்படுத்தாமல் இருந்துவிடு. நாளடைவில் அவர்களே அதை மறந்துவிடுவார்கள் என்று அட்வைஸ் கூறியுள்ளார்.

Samuthirakani advice to Bigg Boss fame Julie

சிங்கம் சிங்கிளாத்தான் வரும்; ரஜினி டயலாக்கை கலாய்த்த சந்தானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் முதன்முறையாக நடித்த படம் சிவாஜி தி பாஸ்.

இப்படத்தில் ஒரு காட்சியில் போஸ்வெங்கட் ரஜினியை பார்த்து தனியா வந்து மாட்டிக்கிட்டியே என்பார்.

அதற்கு ரஜினி தன் ஸ்டைலில்… கண்ணா.. பன்னிங்கதான் கூட்டமா வரும். சிங்கம் சிங்கிளதான் வரும் என்பார்.

இந்த பன்ச் டயலாக் செம ஹிட்டாது.

இந்நிலையில் சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம் சக்க போடு போடு ராஜா.

சிம்பு இசையமைத்துள்ள இப்படத்தை விடிவி கணேஷ் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் இன்று சற்றுமுன் வெளியானது.

இதில்… ஒரு சண்டைகாட்சியில் சிவாஜி பட காட்சியைப் போல், சிங்கிளா வந்து மாட்டிக்கிட்டியே என்பார் ஒருவர்.

அவரை அடித்துவிட்டு சந்தானம் பன்ச் டயலாக் பேசுவார்.

பன்ச் டயலாக் பேசிட்டு அடிப்பது அப்போ. இப்போ பன்ச் டயலாக் பேசுவறன அடிக்கிறது இப்போ என்று பேசுவது போல் உள்ளது.

இது ரஜினி டயலாக்கை கலாய்ப்பது போல் உள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Santhanam made fun of Rajini punch dialogue

மெர்சல் வழக்கு எதிரொலி; 2600 இணையதளங்களுக்கு கோர்ட் தடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீதேனாண்டாள் பிலம்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள மெர்சல் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்படம் வருகிற அக். 18ல் உலகமெங்கும் வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்…

மெர்சல் படத்திற்கு கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளோம். புதுப்படங்களை திருட்டுத்தனமாக இணையத்தளங்களில் வெளியிடுவதால் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.

எனவே மெர்சல் படத்தை திருட்டுத்தனமாக வெயியிடும் இணையத்தளங்களை தடை செய்ய கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த அனிதா சுமந்த் தீர்ப்பில் கூறியதாவது…

மெர்சல் படத்தை திருட்டுத்தனமாக வெளியிடுவதற்கு 2600 இணையத்தள சேசை நிறுவனங்களுக்கு தடை விதித்தார்.

மேலும் இது தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

மெர்சல் படத்தில் விஜய் சொல்லும் மெசேஜ் பற்றி அட்லி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெறி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் தன் படத்தை இயக்கும் வாய்ப்பை அட்லிக்கு கொடுத்தார் விஜய்.

இவர்கள் கூட்டணியில் உருவாகியுள்ள மெர்சல் படம் தீபாவளி விருந்தாக அமையும்.

இந்நிலையில் மெர்சல் படம் என்ன மாதிரியானது என்பதை அட்லி தெரிவித்துள்ளார்.

விஜய்யை எந்தளவு லவ் பண்ண முடியுமோ? அப்படி ஒரு படம்தான் மெர்சல்.

‘தளபதி’ என்ற கேரடக்டரில் வரும் கிராமத்து தலைவர் விஜய் கேரக்டர் இதுவரை பார்க்காத விஜய் எனலாம்.

இதுவரை அவரது படங்களில் இல்லாத கதைக்களம் இதில் இருக்கும்.

இதில் மக்களுக்கான விழிப்புணர்வு மெசேஜ் ஒன்றும் உள்ளது.

விஜய் ரசிகர்களுக்கு மெர்சல் படம் தீபாவளி விருந்தாக அமையும்” என தெரிவித்துள்ளார்.

விஜய்-அட்லி 3வது முறையாக இந்த படத்தில் இணைவார்களா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள மெர்சல் படம் வருகிற அக். 18ஆம் தேதி தீபாவளி வெளியீடாக வரவிருக்கிறது.

இப்படம் குறித்து பேசும்போது ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்க வேண்டும் என்பது என் கனவுகளில் ஒன்று குறிப்பிட்டு இருந்தார்.

தயாரிப்பாளரும் பட்ஜெட்டும் அதற்கான நட்சத்திரங்களும் அமைந்தால் அந்த வரலாறை திரையில் கொண்டுவருவேன் என தெரிவித்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன் பொன்னியின் செல்வன் படத்தில் விஜய் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

பின்னர் சில காரணங்களால் அந்தப்படம் கைவிடப்பட்டது.

ஒருவேளை பொன்னியின் செல்வன் படத்தை அட்லி இயக்கும் சூழ்நிலை வந்தால் விஜய் நிச்சயம் ஒப்புக் கொள்வார் என்று நம்பலாம்.

காரணம் இருவருக்குமான கெமிஸ்ட்ரி நாம் அறிந்த ஒன்றுதான்.

For third time Vijay and Atlee may join for new project

மெர்சல் பட 3 நாயகிகளில் பவர்புல் யார்.? அட்லியே ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜா ராணி மற்றும் தெறி படங்களை இயக்கியவர் அட்லி.

முதல் படத்தில் நயன்தாரா, நஸ்ரியாவும், தெறி படத்தில் சமந்தா மற்றும் எமி ஜாக்சன் என இரண்டு நாயகிகள் இருந்தனர்.

தற்போது இயக்கியுள்ள மெர்சல் படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் என 3 நாயகிகள் உள்ளனர்.

இதில் யாருடைய கேரக்டர் பவர்புல்லாக இருக்கும் என அட்லி தன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பாட்டுக்காக வந்து போகும் கேரக்டர்களில் 3 நாயகிகளும் நடிக்கவில்லை.

ஆனால் நித்யா கேரக்டர் முக்கியத்துவம் பெறும். அது அவருக்கு பொருந்திவிட்டது என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

Atlee talks about Mersal heroines

More Articles
Follows