தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சுகுமார் இயக்கத்தில் ராம்சரண்-சமந்தா நடித்துள்ள படம் ‘ரங்கஸ்தலம்’.
அண்மையில் வெளியான இந்த தெலுங்கு படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
’பாகுபலி’க்குப் பிறகு தெலுங்கில் அதிக வசூல் ஈட்டிய படம் இது என்கிறார்கள். இந்தப் படம் தமிழ், மலையாளம், இந்தி, போஜ்புரி மொழிகளில் டப் செய்து வெளியிடப்படுகிறது.
இந்தப் படத்தின் வெற்றி விழா ஐதராபாத்தில் நடந்தது. ராம் சரண் மற்றும் சமந்தாவின் அர்ப்பணிப்பையும் அனைவரும் புகழ்ந்து பேசினர்.
இந்த பட வெற்றியால் மகிழ்ச்சியான தயாரிப்பாளர் இப்பட இயக்குனருக்கு ரூ.10 லட்சம் பரிசு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் ஒரு காட்சியில் முத்தம் கொடுப்பது போல் நடித்திருந்தார் சமந்தா. இவருக்கு அண்மையில்தான் திருமணம் நடைபெற்றது என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
இதுகுறித்து செய்தியாளர் கேட்ட்டபோது… “திருமணம் ஆன நடிகர்கள் முத்தக்காட்சியில் நடித்தால் மட்டும் யாரும் கேள்வி கேட்பது இல்லை. அதுவே நடிகைகள் என்றால்… ஏதேதோ கேட்கிறீர்கள்.
நான் ராம்சரண் கன்னத்தில் தான் முத்தமிட்டேன். அதை ‘கேமரா டிரிக்ஸ்’ மூலம் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிட்டது போல் மாற்றிவிட்டார்கள் என சமந்தா சமாளித்தார்.
Samantha clarifies about Kiss scene in Rangasthalam movie