திருமணமான நடிகர்கள் மட்டும் முத்தமிட்டு நடிக்கலாமா? சமந்தா கேள்வி

திருமணமான நடிகர்கள் மட்டும் முத்தமிட்டு நடிக்கலாமா? சமந்தா கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Samantha clarifies about Kiss scene in Rangasthalam movieசுகுமார் இயக்கத்தில் ராம்சரண்-சமந்தா நடித்துள்ள படம் ‘ரங்கஸ்தலம்’.

அண்மையில் வெளியான இந்த தெலுங்கு படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

’பாகுபலி’க்குப் பிறகு தெலுங்கில் அதிக வசூல் ஈட்டிய படம் இது என்கிறார்கள். இந்தப் படம் தமிழ், மலையாளம், இந்தி, போஜ்புரி மொழிகளில் டப் செய்து வெளியிடப்படுகிறது.

இந்தப் படத்தின் வெற்றி விழா ஐதராபாத்தில் நடந்தது. ராம் சரண் மற்றும் சமந்தாவின் அர்ப்பணிப்பையும் அனைவரும் புகழ்ந்து பேசினர்.

இந்த பட வெற்றியால் மகிழ்ச்சியான தயாரிப்பாளர் இப்பட இயக்குனருக்கு ரூ.10 லட்சம் பரிசு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் ஒரு காட்சியில் முத்தம் கொடுப்பது போல் நடித்திருந்தார் சமந்தா. இவருக்கு அண்மையில்தான் திருமணம் நடைபெற்றது என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இதுகுறித்து செய்தியாளர் கேட்ட்டபோது… “திருமணம் ஆன நடிகர்கள் முத்தக்காட்சியில் நடித்தால் மட்டும் யாரும் கேள்வி கேட்பது இல்லை. அதுவே நடிகைகள் என்றால்… ஏதேதோ கேட்கிறீர்கள்.

நான் ராம்சரண் கன்னத்தில் தான் முத்தமிட்டேன். அதை ‘கேமரா டிரிக்ஸ்’ மூலம் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிட்டது போல் மாற்றிவிட்டார்கள் என சமந்தா சமாளித்தார்.

Samantha clarifies about Kiss scene in Rangasthalam movie

தயாரிப்பாளர் விஜய்சேதுபதிக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்

தயாரிப்பாளர் விஜய்சேதுபதிக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vijay sethupathiஒரு பக்கம் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் ‘விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வருகிறார் விஜய்சேதுபதி.

இந்த நிறுவனம் சார்பில் முதன்முதலாக ‘ஆரஞ்சு மிட்டாய்’ என்ற படத்தை தயாரித்து நடித்தார்.

பிஜு விஸ்வநாத் இயக்கத்தில் வெளியான இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி அடுத்ததாக ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ என்ற படத்தை தயாரித்தார். இந்த படத்தை இயக்குநர் சுசீந்திரனிடம் உதவியாளராக பணியாற்றிய லெனின் பாரதி இயக்கியிருக்கிறார்.

இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், துளுவில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில், பார்வையாளர் மற்றும் நடுவர் குழுவின் சார்பாக சிறந்த படத்திற்கான விருதை வென்றுள்ளது.

ஒரு தயாரிப்பாளராக விஜய் சேதுபதிக்கு இந்த படம் சர்வதேச அங்கீகாரம் வாங்கிக் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவையில்லாமல் கோகுல் இயக்கும் ஜுங்கா படத்தை தயாரித்து வருகிறார் விஜய்சேதுபதி. இதில் நாயகியாக சாயிஷா நடித்து வருகிறார்.

பயங்கரமான சாமி; விக்ரமுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த படக்குழு

பயங்கரமான சாமி; விக்ரமுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

saamy squareஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா ஆகியோர் நடித்து வரும் `சாமி ஸ்கொயர்’.

இதில் விக்ரம் அப்பா, மகன் என இரு கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.

சாமி படத்தில் வில்லனாக நடித்த கோட்டா சீனிவாச ராவ்வின் மகனாக, பாபி சிம்ஹா இந்த படத்தில் 3 கெட்டப்புகளில் வில்லனாக நடித்து வருகிறார்.

தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இதன் சூட்டிங் நிறைவு கட்டத்தை எட்டிய போதிலும் திரையுலக வேலை நிறுத்த போராட்டத்தால் எல்லா படப்பிடிப்புகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விக்ரம் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக படத்தில் இருந்து மாஸான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்தை படக்குழு தெரிவித்துள்ளது.

அதில் சாமி பயங்கரமானவர் தான், ஆனால் விக்ரம் இனிமையானவர், நடைபெறும் ஸ்டிரைக்கால் அவரது ரசிகர்களுக்காக சிறப்பு விருந்து எதுவும் அளிக்க முடியவில்லை. எனவும் படக்ழுகு தெரிவித்துள்ளது.

ஸ்டிரைக் முடியும் வரை படம் தொடர்பாக டீசர், பர்ஸ்ட் லுக் எதுவும் வெளியிடக்கூடாது என தயாரிப்பாளர் சங்கம் உத்தரவிட்டுள்ளது இங்கே நினைவு கூறத்தக்கது.

 

Thameens Films‏ @ThameensFilms

#Saamy is terrific but he is very sweet.. Just for you #Chiyaan fans.. #HBDChiyaanVikram With love – Team #SaamySquare #Saamy2

பாரதிராஜா இனி நீ பச்சோந்தி ராஜா; காரணங்கள் சொல்லும் ரஜினி ரசிகர்கள்

பாரதிராஜா இனி நீ பச்சோந்தி ராஜா; காரணங்கள் சொல்லும் ரஜினி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Bharathiraja became like Chameleon says Rajinikanth fansகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது.

அப்போது நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிலர் போலீசாரை தாக்குவது போன்ற வீடியோ காட்சிகள் எடுக்கப்பட்டு அது வைரலானது.

இதை கண்டிக்கும் வகையில் ரஜினி தன் ட்விட்டரில் “வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் இருக்கும் காவலர்கள் தாக்கப்படுவது தான்” என பதிவிட்டு இருந்தார்.

எதற்கும் வாய் திறக்காத ரஜினிகாந்த், இதற்கு மட்டும் வாய் திறக்கிறாரா? என கடுமையான கண்டனங்களை பாரதிராஜா தெரிவித்திருந்தார்.

மேலும் ரஜினி தமிழர் இல்லை. அவர் தமிழர்களின் ரத்தத்தில் ராஜவாழ்க்கை வாழ்கிறார். கன்னடர்களின் தூதுவர் அவர் எனவும் விமர்சித்திருந்தார்.

பாரதிராஜாவின் இந்த அறிக்கை ரஜினி ரசிகர்களை கொதிப்படைய வைத்துள்ளது.

எனவே அவர்களும் பாரதிராஜாவை விமர்சித்து வருகின்றனர்.

பாரதிராஜா தன் மகன் மனோஜை சினிமாவில் (தாஜ்மஹால் என்ற படத்தில்) அறிமுகப்படுத்தும்போது ரஜினியை வைத்தே அந்த விழாவை நடத்தினார்.

அதுபோல் பாரதிராஜா திரைப்பட நடிப்பு பயிற்சி நிறுவனம் ஒன்றை தொடங்கும்போது அதையும் ரஜினியை வைத்தே திறக்க செய்தார்.

இப்படி தன் வாழ்க்கையில் ஒவ்வொரு முக்கியமான நிகழ்வுகளுக்கும் ரஜினி என்ற சிறந்த மனிதர் தேவைப்பட்டார். ஆனால் தற்போது ரஜினியை தரக்குறைவாக விமர்சிக்க இவருக்கு என்ன தகுதியுள்ளது.?

ரஜினிகாந்த் வேறுமாநிலத்தில் இருந்து தமிழகம் வந்ததாக கூறப்பட்டாலும் அவரை வேறு மாநிலத்தவர்கள் மதராசி என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் இங்குள்ளவர்கள்தான் அவரை கன்னடர் என்று சொல்கிறார்கள்.

ரஜினிகாந்த் தன் மனைவியை தமிழ்நாட்டில் இருந்துதான் தேர்ந்தெடுத்தார். அவரது மகள் ஐஸ்வர்யாவுக்கு தனுஷ் என்ற தமிழரை மணமுடிக்க செய்தார். அவர் நினைத்தால் அதை தடுத்து இருக்கலாம். ஆனால் தமிழனாக வாழ்ந்து காட்டி வருகிறார்.

ஆனால் தமிழ் தமிழன் என்று வாய் கிழிய பேசும் பாரதிராஜா தன் மகன் மனோஜ்க்கு மருமகளாக கேரளத்து நடிகை நந்தனாவைதான் மண முடிக்க செய்தார். அப்போது அவரது தமிழ் பற்று என்ன ஆனது?

இப்படி பச்சோந்தி போல மாறிவரும் பாரதிராஜா இனி பச்சோந்தி ராஜா என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Director Bharathiraja became like Chameleon says Rajinikanth fans

manoj nandhana

மீண்டும் நடிக்க வருவார் கேப்டன் விஜயகாந்த்; பிரேமலதா உறுதி

மீண்டும் நடிக்க வருவார் கேப்டன் விஜயகாந்த்; பிரேமலதா உறுதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Captain Vijayakanth will come again to act in movies says Premalathaவிஜயகாந்த் திரையுலகத்திற்கு வந்து 40 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளது.

தற்போது அரசியல் பணிகளில் தீவிரமாக பணியாற்றி வருவதால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் கலையுலகில் 40 ஆண்டுகளை கடந்துள்ள விஜயகாந்த்துக்கு அவரது தேசிய முற்போக்கு திராவிட கட்சி சார்பில் பாராட்டு விழா நடந்தது.

அந்த விழாவில் இயக்குனர்கள் எஸ்.ஏ. சந்திரசேகர், ஆர்.கே.செல்வமணி, சத்யராஜ், கலைப்புலி தாணு உள்ளிட்ட பல திரையுல பிரபலங்கள் கலந்துக் கொண்டு வாழ்த்தினர்.

அப்போது பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குனர்கள் எஸ்.ஏ. சந்திரசேகர், ஆர்.கே.செல்வமணி ஆகியோர் விஜயகாந்த் மீண்டும் நடிக்க வரவேண்டும். அவருடன் நாங்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

அதன்பின்னர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா பேசும்போது… தற்போது சினிமா உலகம் கடுமையான பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.

அழிவை நோக்கி போய் கொண்டிருக்கிறது. தன்னை வாழவைத்த சினிமாவை அவர் அழிய விடமாட்டார். எனவே மீண்டும் அவர் சினிமாவில் நடிப்பார்” என உறுதியளித்து பேசினார்.

Captain Vijayakanth will come again to act in movies says Premalatha

பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த டார்ச் லைட் எடுக்கும் அந்நியன் நாயகி

பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த டார்ச் லைட் எடுக்கும் அந்நியன் நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Sadha act as Prostitute in Torch light movieநடிகை சதா தன்னை நாயகியாக வைத்து ‘டார்ச் லைட் ‘ என்கிற படத்தை தயாரிக்கிறார்.

டார்ச் லைட் என்ற படத்தில் பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார் அந்நியன் பட நாயகி சதா.

பெண்களுக்கான விழிப்புணர்வுப் படமாக ‘டார்ச் லைட்’ படம் உருவாகி வருகிறது.

இப்படத்தை இயக்குபவர் விஜய்யை வைத்து ‘தமிழன் ‘படத்தை இயக்கிய அப்துல் மஜீத்.

கான்பிடன்ட் பிலிம் கேஃப் நிறுவனம் ஆர்.கே ட்ரீம் வேர்ல்டு, ஒயிட் ஸ்க்ரீன் எண்டர்டெய்ன்மெண்ட் ஆகியவற்றுடன் இணைந்து தயாரிக்கிறது.

இப்படம் வறுமையால் பாலியல் தொழிலுக்கு வந்த பெண்கள் பற்றிப் பேசுகிறது. நெடுஞ்சாலைகளில் டார்ச் லைட்டுடன் நின்று கொண்டு லாரி ஓட்டுநர்களிடம் பாலியல் தொழில் செய்த பெண்கள் பற்றிய கதை இது.

பெண்களைப் போதைப் பொருளாக்கி அவர்களை தங்கள் இச்சையைத் தீர்க்கும் ஒரு நுகர்பொருளாக்கிடும் சமூக அவலத்தையும் அதன் பின்னணியில் இயங்கும் இழிவான ஆண்களையும் இப்படம் தோலுரிக்கிறது.

இது ஒரு பீரியட் பிலிம். 90களில் நடக்கும் கதையாக இந்தப் படம் உருவாகிறது. படத்தின் கதையைக் கேட்ட நடிகைகள் பலரும் நடிக்கத் தயங்கியிருக்கிறார்கள்.

நடிகை சதா மட்டும் தைரியமாக நடிக்கச் சம்மதித்துள்ளார்.

படம் பற்றி இயக்குநர் அப்துல் மஜீத் பேசும் போது, ” நான் முதலில் இயக்கிய “தமிழன்” படம் ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படை சட்ட அறிவு அவசியம் தேவை என்று கூறியது. அது பரவலான பாராட்டு பெற்றது மட்டுமல்ல பெரிய வெற்றியும் பெற்றது.

அதன் பிறகு சில சிறிய படங்கள் இயக்கினேன். ஆனால் டார்ச் லைட் டுக்கான விஷயம் மனதில் பதிந்த போது இது என் லட்சியப் படமாகத் தெரிந்தது. நிச்சயமாக இப்படிப்பட்ட சமூக அவலத்தைச் சொல்லி பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தோன்றியது.

வறுமையைப் பயன்படுத்தி பெண்ணினத்தை இந்தச் சமூகம் எப்படிப் படுகுழியில் தள்ளி அவர்களின் வாழ்க்கையைப் பாழாக்குகிறது என்பதைச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன் .

இந்தக் கதை சார்ந்து பலர் உண்மைச் சாட்சியங்களாகப் உள்ளனர். அப்படிப்பட்ட பலரையும் சந்தித்து வீடியோவில் பேசி பதிவு செய்து இருந்தேன்.

நான் பல நடிகைகளிடம் இந்தக் கதையைக் கூறிய போது பாலியல் தொழிலாளியாக நடிக்க வேண்டுமே என்று பலரும் மறுத்து விட்டனர். இப்படி 40 பேரிடம் சொல்லியிருப்பேன்.

கடைசியில் சதாவிடம் கூறினேன். கதையைக் கேட்டு முடித்ததும் கண்ணீர் விட்டார். வீடியோப் பதிவுகளை எல்லாம் பார்த்து விட்டுக் கலங்கினார். தான் நடிக்கச் சம்மதம் என்றார்.

இப்படம் சதா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இருக்கும். நிச்சயம் அவருக்கு பெரிய பெயரைப் பெற்றுத் தரும். அதே போல நடிகை ரித்விகாவும் கதை கேட்டு கலங்கிக் கண்ணீர் விட்டார். நிச்சயம் இப்படம் சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தும். பெண்களின் கண்ணீர்க் கதைகள் பெண்களிடம் போய்ச் சேர வேண்டும்.

அப்போதுதான் அவர்கள் விழிப்புணர்வு பெறுவார்கள்.” என்கிறார் மஜீத்.

படத்தின் பிரதான பாத்திரத்தை சதா ஏற்க ரித்விகா, புதுமுகம் உதயா, இயக்குநர் வெங்கடேஷ், சுஜாதா ரங்கநாதன் மற்றும் பலர் பிற பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்துக்காக திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவில்பட்டி, குற்றாலம், சென்னை போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

இது 90களில் நடக்கும் கதை என்பதால் பலவற்றைக் கவனிக்க வேண்டியிருந்ததாம்.

அப்போது இருந்த இரு வழிப் பாதைகள் எல்லாம் இப்போது நான்கு வழிப்பாதைகளாக மாறி விட்டன. எனவே சிரமப்பட்டு இடங்களைத் தேடிக் கண்டுபிடித்துப் படமாக்கியுள்ளனர். செல்போன், டிவி எல்லாம் இல்லாமல் படமாக்க வேண்டியிருந்ததாம்.

டார்ச் லைட் படத்துக்கு ஒளிப்பதிவு – சக்திவேல், இசை – ஜேவி, பாடல்கள்- வைரமுத்து, எடிட்டிங் -மாரீஸ், கலை -சேகர், நடனம் – சிவராகவ், ஷெரீப்.

தயாரிப்பு அப்துல் மஜீத்,
எம். அந்தோனி எட்வர்ட், ரங்கநாதன் ராஜு, கண்ணன் பாஸ்கர்.

Actress Sadha act as Prostitute in Torch light movie

sadha in torch light movie

More Articles
Follows