சலூன் & ப்யூட்டி பார்லர்ஸ் திறக்க அரசு அனுமதி; இந்த கண்டிசன்ஸ் படிங்க

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொது முடக்கம் வருகிற மே 31ஆம் தேதி வரை அமலில் உள்ளது.

இருந்த போதிலும் சில விதிமுறைகள் மற்றும் தளர்வுகளுடன் வணிக நிறுவனங்கள் திறக்க மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில் சென்னையை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் நாளை மே 24 முதல் சலூன் கடைகள், அழகு நிலையங்கள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை சலூன் கடைகள் திறக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிமனித இடைவெளி, முகக்கவசம், சானிடைசர் பயன்படுத்துதல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும் என சலூன் கடைக்காரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மாண்புமிகு அம்மா அவர்களின்‌ அரசு, தமிழ்நாட்டில்‌ கொரோனா வைரஸ்‌ நோய்த்தொற்று தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. மேலும்‌, கொரோனா வைரஸ்‌ நோய்த்‌ தொற்றின்‌ தாக்கத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில்‌ எடுத்து வருகிறது.

தற்போது, பொதுமக்களின்‌ வாழ்வாதாரத்தை கருத்தில்‌ கொண்டு, நோய்‌ பரவலை தடுக்க முன்னெச்சரிக்கைக்கென சில பாதுகாப்பு வழிமுறைகளுடன்‌ தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.

ஏற்கனவே ஊரக பகுதிகளில்‌ முடி திருத்தும்‌ நிலையங்கள்‌ 19.5.2020 அன்று முதல்‌ இயங்குவதற்கு நான்‌ அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தேன்‌.

தற்போது முடி திருத்தும்‌ மற்றும்‌ அழகு நிலைய தொழிலாளர்களின்‌ கோரிக்கையை மாண்புமிகு அம்மாவின்‌ அரசு கனிவுடன்‌ பரிசீலித்து, பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளைத்‌ தவிர, இதர மாநகராட்சிகள்‌, நகராட்சிகள்‌ பேரூராட்சிகளில்‌ முடி திருத்தும்‌ மற்றும்‌ அழகு நிலையங்கள்‌ 24.5.2020 அன்று முதல்‌ (தினமும்‌ காலை 7 மணி முதல்‌ மாலை 7 மணி வரை மட்டும்‌) இயங்குவதற்கு
அனுமதிக்கப்படுகிறது.

எனினும்‌, தடை செய்யப்பட்ட பகுதிகளில்‌ உள்ள முடிதிருத்தும்‌ மற்றும்‌ அழகு நிலையங்கள்‌ இயங்க அனுமதி கிடையாது. தடை செய்யப்பட்ட பகுதிகளிலிருந்து பணிக்கு வருகின்ற முடிதிருத்தும்‌ மற்றும்‌ அழகு நிலைய தொழிலாளர்களை பணியமர்த்தக்‌ கூடாது.

ஏற்கனவே ஊரக பகுதிகளில்‌ முடி திருத்தும்‌ நிலையங்கள்‌ 19.5.2020 அன்று முதல்‌ இயங்குவதற்கு அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ள நிலையில்‌, பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட ஊரக பகுதிகளைத்‌ தவிர தமிழ்நாட்டின்‌ அனைத்து ஊரக பகுதிகளில்‌ தற்போது அழகு நிலையங்களும்‌ 24.5.2020 முதல்‌ (தினமும்‌ காலை 7 மணி முதல்‌ மாலை 7 மணி வரை மட்டும்‌) இயங்குவதற்கு அனுமதித்து உத்தரவிடப்படுகிறது.

இந்த முடிதிருத்தும்‌ மற்றும்‌ அழகு நிலையங்களில்‌ பணிபுரியும்‌ பணியாளர்கள்‌ மற்றும்‌ வாடிக்கையாளர்கள்‌ சமூக இடைவெளியினை கண்டிப்பாக பின்பற்றவேண்டும்‌.

இந்நிலையங்களில்‌ பணியாற்றுகின்ற பணியாளர்களுக்கோ அல்லது வருகின்ற வாடிக்கையாளர்களுக்கோ காய்ச்சல்‌, சளி, இருமல்‌ போன்ற அறிகுறிகள்‌ இருந்தால்‌ அவர்களை இந்நிலையங்களுக்குள்ளே அனுமதிக்கக்கூடாது.

வாடிக்கையாளர்கள்‌ அனைவருக்கும்‌ கிருமிநாசினி கண்டிப்பாக வழங்குவதையும்‌, முககவசங்கள்‌ அணிவதை உறுதி செய்யுமாறும்‌, கடையின்‌ உரிமையாளர்‌ முடி திருத்தும்‌ மற்றும்‌ அழகு நிலையங்களில்‌ ஒரு நாளைக்கு ஐந்து முறை கிருமி நாசினியை தெளிக்குமாறும்‌, வாடிக்கையாளர்களும்‌, பணியாளர்களும்‌ அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவதை உறுதி செய்யுமாறும்‌ நான்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌. குளிர்சாதன வசதி இருப்பின்‌ அதை கண்டிப்பாக உபயோகப்படுத்தக்கூடாது.

மேலும்‌, முடி திருத்தும்‌ மற்றும்‌ அழகு நிலையங்களை இயக்குவதற்கான விரிவான வழிமுறைகளை தனியாக வழங்கப்படும்‌.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Salons beauty parlours can function from 24th May except in containment zones

வேண்டாம் விபரீதம்.; விமான சேவையை நிறுத்த மோடிக்கு எடப்பாடி கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா பொது முடக்கம் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு 50 நாட்களை கடந்துவிட்டது.

தற்போது சில தளர்வுகளுடன் வணிக நிறுவனங்களை திறக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

வருகிற ஜீன் 1ஆம் தேதி முதல் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.

நாடு முழுவதும் மே 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்படும் என விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதற்காக அனைத்து விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களும் தயாராக இருக்கும்படி தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வரும் 25ஆம் தேதி தமிழகத்தில் விமான சேவை தொடங்க வேண்டாம் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

கொரோனா பாதிப்பு இன்னும் தமிழகத்தில் அதிகமாக இருப்பதால், ஜூன் மாதத்திற்கு பிறகு விமான சேவையை தொடங்கலாம் என முதல்வர் அதில் கேட்டு கொண்டுள்ளார்.

மே 25 முதல் சென்னை, கோவையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டதும் இங்கே கவனிக்கத்தக்கது.

2 மாதங்கள் வெளிநாட்டில் சிக்கிய பிருத்விராஜ் கேரளா திரும்பினார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் கனா கண்டேன், மொழி, சத்தம் போடாதே, வெள்ளித்திரை, அபியும் நானும், நினைத்தாலே இனிக்கும், ராவணன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் மலையாள நடிகர் பிருத்விராஜ்.

இவர் அண்மையில் மோகன்லாலை வைத்து லூசிபர் என்ற படத்தையும் இயக்கியிருந்தார்.

இவர் பிளஸ்ஸி இயக்கும் ஆடுஜீவிதம் படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த மார்ச் மாதம் ஜோர்டான் நாட்டுக்கு சென்றிருந்தார்.

அதன்பின்னர் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா பொது முடக்கம் அமலுக்கு வந்தது.

இதனால் பிருத்விராஜால் இந்தியா திரும்ப முடியவில்லை.

ஜோர்டான் நாட்டில் ஒரு தீவில் சிக்கினாலும் அங்கு படப்பிடிப்பை நடத்தி வந்தார்.

சூட்டிங் முடிந்தவுடன் எங்கும் செல்லமுடியாமல் தவித்து வந்தார்.

இந்த நிலையில் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு வந்தே பாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

அதன்படி பிருத்விராஜ் படக்குழுவினர் உள்ளிட்ட 57 பேரும் இந்தியா அழைத்து வரப்பட்டனர். இன்று காலை கேரளாவில் உள்ள கொச்சியை அவர்கள் வந்தடைந்தனர்.

லூசிபர் ரீமேக்.; சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் விஜய்-தனுஷ் பட நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சந்தோஷ் சுப்ரமணியம், வேலாயுதம், சச்சின், உத்தமபுத்திரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழக ரசிகர்களை கவர்ந்தவர் ஜெனிலியா.

கடந்த 2012ல் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார்.

தற்போது சினிமாவில் ரீ எண்ட்ரீ கொடுக்கவிருக்கிறாராம்.

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான லூசிபர் படத்தை தெலுங்கில் உருவாக்கவுள்ளனர்.

நடிகர் பிருத்விராஜ் இயக்கிய இந்த படத்தில் மோகன்லால் நாயகனாக நடித்திருந்தார். நாயகியாக மஞ்சு வாரியர் நடித்திருந்தார்.

இந்த நிலையில் இதன் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நாயகனாக நடிக்க அவருக்குதான் ஜெனிலியா ஜோடியாக நடிக்கிறாராம்.

சாஹோ பட இயக்குனர் சுஜித் இந்த படத்தை இயக்க உள்ளார்.

தமிழ்சினிமாவின் மிகப்பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுனமான 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ தங்கள் நிறுவனத்தின் படங்களின் புதிய அப்டேட்களை தெரிவித்துள்ளது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்சினிமாவின் மிகப்பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுனமான 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ தங்கள் நிறுவனத்தின் படங்களின் புதிய அப்டேட்களை தெரிவித்துள்ளது

இந்தியளவில் அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் படமான விஜய் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் ஆரம்பமாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தின் புதிய அப்டேட் சினிமா ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்துள்ளது.

மேலும் நடிப்பிற்காக எந்தத் தோற்றத்தையும் தனக்குள் கொண்டு வரும் சியான் விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படம் 90 நாட்கள் ஷுட்டிங் நிறைவுற்றுள்ளது. அஜய் ஞானமுத்து எழுதி இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 25% மட்டுமே பாக்கி இருக்கிறது

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிக்கும் ‘துக்ளக் தர்பார்’ படத்தின் ஷுட்டிங் 35 நாட்கள் நடைபெற்றுள்ளது. விறுவிறுப்பான கதை அம்சம் உள்ள இப்படம் சிறப்பாக வளர்ந்து வருகிறது

மேலும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் இளைஞர்களின் ஆதர்ச இயக்குநரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் ஆக்ஸ்ட் மாதம் துவங்க இருக்கிறது. விஜய்சேதுபதி நயன்தாரா விக்னேஷ் சிவன் ஏற்கெனவே வெற்றிக்கூட்டணி என்பதால் இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் முக்கியமான படமாக இருக்கிறது.

கொரோனாவின் தாக்கம் குறைந்து தளர்வு வந்ததும் இப்படங்களின் அடுத்தக்கட்ட பாய்ச்சல் இருக்கும் என்று நம்பலாம்.

திருமணமான த்ரிஷாவை துரத்தும் அஜித் & சிம்பு & விஜய்சேதுபதி.; நெட்டிசன்கள் ட்ரோல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2010ல் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தொடர்ச்சியாக கொரோனா லாக் டவுனில் 12 நிமிடக் குறும்படத்தை இயக்கியுள்ளார் கெளதம் மேனன்.

இந்த குறும்படத்திற்கு கார்த்திக் டயல் செய்த எண் என்று பெயரிட்டுள்ளனர்.

இதிலும் சிம்பு த்ரிஷா நடித்துள்ளனர். இசை ஏஆர். ரஹ்மான். இதை இன்று இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

லாக் டவுனில் சென்னையில் சிம்புவும் கேரளாவிலும் த்ரிஷாவும் மாட்டிக் கொண்டது போலவும் உள்ளது. அவரவர் வீடுகளில் இருந்து செல்போனில் பேசும் படியாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கதைப்படி த்ரிஷாவுக்கு திருமணம் ஆகிவிட்டது. அவருக்கு ட்வின்ஸ் குழந்தைகள் உள்ளது. த்ரிஷா பெயர் ஜெஸ்ஸி. இவரது கணவர் பெயர் ராய்.

தன் அடுத்த படத்திற்கு கதை எழுத முயற்சிக்கும் சிம்பு திடீரென தன் பழைய காதலை நினைத்து த்ரிஷாவுக்கு போன் செய்கிறார்.

நீ வேண்டும்.. உன் கால்ல வாழனும் என்கிறார் சிம்பு. நீ என்னுடைய மூன்றாவது குழந்தை என்கிறார் த்ரிஷா.

சிறிய உரையாடலுக்கு பிறகு த்ரிஷாவின் பேச்சை கேட்டு குஷியான சிம்பு மீண்டும் கதை எழுதுகிறார்.

சில வருடங்களுக்கு முன் வெளியான என்னை அறிந்தால் படத்தில் த்ரிஷாவுக்கு கணவர் இருக்கமாட்டார். குழந்தை இருக்கும். அப்போதும் த்ரிஷாவை காதலிப்பார் அஜித். ஒரு கட்டத்தில் த்ரிஷா இறந்த பின் அந்த குழந்தையை அஜித் வளர்ப்பார். பின்னர் அனுஷ்கா வருவார் என்பது எல்லாம் தங்களுக்கு நினைவிருக்கலாம்.

அதுபோல் ஓரிரு வருடங்களுக்கு முன் வெளியான 96 படத்தில் ஜானு என்ற கேரக்டரில் த்ரிஷா நடித்திருப்பார். ராம் என்ற கேரக்டரில் விஜய்சேதுபதி நடித்திருப்பார்.

அந்த கதைப்படி த்ரிஷாவுக்கும் திருமணம் ஆகியிருக்கும்.

விஜய்சேதுபதிக்கு திருமணம் ஆகியிருக்காது. ஆனால் தன் பழைய காதலியை நினைத்து உருகுவார். இவர்கள் சந்திப்பதுபோல் கதை இருக்கும்.

இந்த படங்களில் த்ரிஷாவை மையப்படுத்தியே காட்சிகள் இருக்கும்.

தற்போது இந்த 3 பட காட்சிகளை வைத்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இது பற்றிய மீம்ஸ்கள் இன்று இணையத்தில் அதிகளவில் காணப்படுகிறது.

Simbu Trishas Karthik Dial Seytha Yenn memes goes viral

 

 

More Articles
Follows