முதன்முறையாக இணையும் ஜூனியர் என்டிஆர் & சைஃப் அலிகான்.; ரிலீஸ் தேதி கன்ஃபார்ம்

முதன்முறையாக இணையும் ஜூனியர் என்டிஆர் & சைஃப் அலிகான்.; ரிலீஸ் தேதி கன்ஃபார்ம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் அதிகாரப்பூர்வமாக ‘என்டிஆர் 30’ படக்குழுவில் இணைந்துள்ளார்.

மேலும் நாயகன் ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார். கொரட்டாலா சிவா இயக்கி வரும் இந்தப் படம் மூலம் ஜூனியர் என்டிஆர் மற்றும் சைஃப் அலிகான் இருவரும் முதல் முறையாக இணைந்து நடிக்கின்றனர்.

’NTR 30’ திரைப்படம் தெலுங்கு மொழியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஆக்‌ஷன்- ட்ராமா திரைப்படம். இதில் சைஃப் அலிகான், ஜூனியர் என்டிஆர் உடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அற்புதமான கதைக்களம் மற்றும் திறமையான நடிகர்களுடன் இந்தப் படம் ரசிகர்களுக்கு ஒரு காட்சி விருந்தைக் கொடுக்கும் என்பது உறுதி.

’என்டிஆர் 30’ படப்பிடிப்புத் தளத்தில் இருந்து படக்குழு சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள புகைப்படம் மூலம் நடிகர் சைஃப் அலிகானை அதிகாரப்பூர்வமாக தங்கள் அணிக்கு வரவேற்று உள்ளனர்.

கடந்த மாதம் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடந்த பூஜைக்குப் பிறகு ’NTR 30’ படத்தின் படப்பிடிப்புத் தொடங்கியது. இந்த படம் மூலம் நடிகை ஜான்வி கபூர் தெலுங்கில் அறிமுகமாகிறார்.

யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் இணைந்து ‘என்டிஆர் 30’ படத்தைத் தயாரிக்கிறது மற்றும் நந்தமுரி கல்யாண் ராம் படத்தை வழங்குகிறார்.

மேலும், ஏப்ரல் 5, 2024 அன்று படம் பான் இந்திய அளவில் வெளியாகிறது.

*தொழில்நுட்பக்குழு விவரம்:*

வழங்குபவர்: நந்தமுரி கல்யாண் ராம்,
பேனர்கள்: என்டிஆர் ஆர்ட்ஸ், யுவ சுதா ஆர்ட்ஸ்,
தயாரிப்பாளர்கள்: ஹரிகிருஷ்ணா.கே, மிக்கிலினேனி சுதாகர்,
எழுதி இயக்குபவர்: கொரட்டாலா சிவா,
இசை: அனிருத் ரவிச்சந்திரன்,
ஒளிப்பதிவு: ரத்னவேலு,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: சாபு சிரில்,
VFX: யுகந்தர்

ஜூனியர் என்டிஆர் - சைஃப் அலிகான்

Saif Ali Khan joins cast of Jr NTR’s next movie

38 வருடங்கள்.. 15 மொழிகள்.. 25000+ பாடல்கள்.; பாடகர் மனோ டாக்டரானார்.!

38 வருடங்கள்.. 15 மொழிகள்.. 25000+ பாடல்கள்.; பாடகர் மனோ டாக்டரானார்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

80s மற்றும் 90s காலகட்டங்களில் பாடகர், நடிகர், டப்பிங் கலைஞர், தொகுப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கியவர் மனோ.

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, துலு, அசாமிஸ் என 15 இந்திய மொழிகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி அசத்தியிருக்கிறார்.

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனின் தெலுங்கு படங்களுக்கு மனோ தான் டப்பிங் செய்வார்.

இளையராஜாவின் மனம் கவர்ந்த பின்னணி பாடகர் ஆகவும் இருந்து வந்தார் மனோ.

இளையராஜா இசையில் மட்டும் 500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

இந்நிலையில், மனோ இசைத்துறையில் 38 ஆண்டுகள் நிறைவு செய்தார் மற்றும் ரிச்மண்ட் கேப்ரியல் பல்கலைக்கழகத்தால் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இந்த செய்தியை பாடகர் ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார். அவர் எழுதிய படத்தைப் பதிவிட்டு, “ஒரு பாடகர் மற்றும் இசையமைப்பாளராக இந்திய இசைத் துறையில் 38 வருடங்கள் மற்றும் 15 இந்திய மொழிகளில் 25,000 க்கும் மேற்பட்ட பாடல்களை முடித்ததற்காக ரிச்மண்ட் கேப்ரியல் பல்கலைக்கழகத்தால் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. என்னை ஆதரித்த அனைவருக்கும், எப்பொழுதும் பணிவும், மரியாதையும், மிகுந்த அன்பும்.” என்றார்.

மேலும், மனோ முனைவர் பட்டம் பெற்ற பிறகு, நிகழ்ச்சியில் பேசும் போது, ​​தனக்கு இசையில் ஆர்வம் இருப்பதாகவும், 14 வயதில் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாத்துக்கு உதவி செய்ததாகவும் மனோ தெரிவித்தார். மனோ டப்பிங் கலைஞராகவும் இருந்து வருகிறார்.

மனோ

Singer Mano honoured with a doctorate

மார்க் பண்ணி வச்சிக்கோங்க.; ‘மார்க் ஆண்டனி’-யின் சூட்டிங் அப்டேட்

மார்க் பண்ணி வச்சிக்கோங்க.; ‘மார்க் ஆண்டனி’-யின் சூட்டிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் ‘மார்க் ஆண்டனி’.

இப்படத்தில் நாயகியாக ரித்து வர்மா நடிக்க, வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்க, தெலுங்கு நடிகர் சுனில் வர்மா மற்றும் நிழல்கள் ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், எஸ்.ஜே.சூர்யா இப்படத்தின் தனது பகுதி படப்பிடிப்புகளை முடித்துள்ளார்.

மேலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகும் இந்தப் படம், பான் இந்தியா படமாக வெளியிட திட்டமாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

SJ Suryah’s portions in ‘Mark Antony’ wrapped up

ரஜினி ரசிகர்கள் டென்ஷன்.; எனர்ஜி அப்டேட் கொடுத்த நெல்சன்

ரஜினி ரசிகர்கள் டென்ஷன்.; எனர்ஜி அப்டேட் கொடுத்த நெல்சன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சுனில், தமன்னா, விநாயகன், ரம்யா கிருஷ்ணன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தில் ரஜினி ஜெயில் வார்டனாக நடிக்கிறார்.

இந்நிலையில், ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பை நடிகர் ரஜினிகாந்த் நிறைவு செய்து விட்டதாக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தெரிவித்து உள்ளார்.

சமீபத்தில், நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இதனை தெரிவித்துள்ளார்.

‘ஜெயிலர்’ படத்தின் அப்டேட் நீண்ட நாட்களாக வெளியாகவில்லை. இதனால் ரஜினி ரசிகர்கள் அப்செட்டில் இருந்தனர்.

மேலும், தற்போது இயக்குநர் நெல்சனின் அப்டேட்டால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Rajinikanth completes shooting for ‘Jailer’Confirms Nelson

நண்பேன்டா மொமெண்ட் : சந்தானத்தை இயக்கும் பிரபல காமெடி நடிகர்

நண்பேன்டா மொமெண்ட் : சந்தானத்தை இயக்கும் பிரபல காமெடி நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லொள்ளு சபா நாட்களில் இருந்தே நண்பர்களுக்கு வாய்ப்புகள் கொடுப்பதில் பெயர் பெற்றவர் சந்தானம். அவரது படங்களில் சுவாமிநாதன், ஈஸ்டர், சேசு, மாறன், மனோகர் ஆகியோர் நடித்துள்ளனர். அதேபோன்று சந்தானம் தற்போது நெருங்கிய நண்பரும் நகைச்சுவை நடிகருமான சுகுமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

‘காதல்’ படத்தில் பரத்தின் நண்பனாக சுகுமார் நடித்திருந்தார்.

சுகுமார் இயக்கிய முந்தைய இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் சரியாகப் போகவில்லை என்றாலும், சந்தானத்துடனான அவரது காம்போ அவருக்கு ஒரு திருப்புமுனையை வழங்கக்கூடும் என எதிர்பார்க்கபடுகிறது.

Kadhal Sukumar to direct long time friend Santhanam’s new movie

இந்தியன் 2 படம் குறித்து ஹாட் அப்டேட் வெளியிட்ட இயக்குனர் ஷங்கர் !

இந்தியன் 2 படம் குறித்து ஹாட் அப்டேட் வெளியிட்ட இயக்குனர் ஷங்கர் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் ஷங்கர், கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பை தைவான் மற்றும் ஜோகன்னஸ்பர்க்கில் இடைவிடாது நடத்தி வருகிறார்.

அவர் இப்போது உலகநாயகனுடன் கைகுலுக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து “இந்த பவர் பேக் அட்டவணைக்கு நன்றி கமல்ஹாசன் சார்.

மே மாதம் மீண்டும் சந்திப்போம்! ‘இந்தியன் 2’ லிருந்து ‘கேம் சேஞ்சர்’ க்கு கிளைமாக்ஸ் க்காக மாறுகிறேன் என பதிவிட்டுள்ளார்.

ஷங்கர் தனது இரண்டு படங்கள் குறித்த ஹாட் அப்டேட்களை கொடுத்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Shankar gives hot official updates on ‘Indian 2’

More Articles
Follows