தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
பொருளாளராக தனது மனைவி ஷோபாவை நியமித்தார்.
இந்த கட்சிக்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தார் விஜய்.
அவரின் அறிக்கையில்… ‘‘எனக்கும் அந்த கட்சிக்கும் சம்பந்தம் கிடையாது. என் ரசிகர்கள் யாரும் அந்த கட்சியில் சேரக் கூடாது’’ என்றார்.
மறுநாளே பொருளாளர் பொறுப்பில் இருந்து ஷோபா விலகினார்.
சில தினங்களில் எஸ்ஏசி நியமித்த அனைத்து நிர்வாகிகளையும் நீக்கிவிட்டு, புதிய நிர்வாகிகளை நியமித்தார்.
இதனால் கட்சி தொடர்பான பணிகளை நிறுத்தினார் எஸ்ஏசி.
தற்போது 3 மாதங்களில் விஜய் ரசிகர் மன்ற அதிருப்தி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ள எஸ்ஏசி.
அதன்படி மீண்டும் புதிய கட்சி தொடங்க உள்ளார்.
இந்த ஆலோசனைக்கு பிறகு உடனடியாக 20 மாவட்ட பொறுப்பாளர்களையும் நியமித்துள்ளார்.
இந்த முறை கட்சி பெயர் மாற்றப்படலாம் எனத் தெரிகிறது.
அதாவது… ‘எஸ்.ஏ.சந்திரசேகர் மக்கள் கட்சி’ அல்லது‘அப்பா எஸ்ஏசி மக்கள் இயக்கம்’என்பது கட்சிப் பெயராக இருக்கலாம் என கூறப்படுகிறது.
பொங்கல் தினத்தில் ஜனவரி 14ல் புதிய கட்சி ஆரம்பம் என தகவல்கள் வந்துள்ளன.
SAC to start political party on pongal ?