தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்திய நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கில் கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் போலீஸ் தாக்குதலால் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் மரணமடைந்தனர்.
இந்த செய்தி இந்தியா முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
ஆனால் அவர்களை தாக்கிய போலீசை சஸ்பெண்ட் செய்தும் ஆயுதப்படைக்கும் மாற்றி உள்ளது காவல்துறை.
மேலும் தமிழக அரசு அந்த குடும்பத்திற்கு நிதியுதவியும் அளித்துள்ளது.
ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் இறப்புக்கு காரணமான போலீஸார் மீது கொலை வழக்கு பதிவுசெய்து கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது-
#JusticeForJayarajAndFenix என்கிற ஹேஷ்டேகில் கோலிவுட் பிரபலங்கள் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.
ஆனால் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ், விஜய் சேதுபதி என உச்ச நட்சத்திரங்கள் எந்த கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை.
நீங்கள் எப்போது மெளனத்தைக் கலைக்கப்போகிறீர்கள்” என இவர்களின் ரசிகர்களே கேட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் குறித்து மற்றொரு புகாரும் எழுந்துள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு காவிரி பிரச்சினையின் போது சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படக்கூடாது என்ற போராட்டங்கள் நடைபெற்றது.
அப்போது போலீஸை ஒரு ஜிம் பாய் தாக்கிய வீடியோ வெளியானது.
அதை ரஜினி கண்டித்து ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
அதில், ”வன்முறையின் உச்சக்கட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவதுதான். இத்தகைய வன்முறை கலாசாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களைத் தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்” என்று பதிவிட்டு இருந்தார் ரஜினிகாந்த்.
தற்போது போலீஸின் கொடூரமான தாக்குதலால் இரண்டு உயிர்கள் போய்விட்டது.
போலீசை தாக்கியவர்களை கண்டித்த ரஜினி, இரு அப்பாவிகள் கொல்லப்பட்டதாக சொல்லப்படும் நிலையில் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்யவில்லையே என கேட்டு வருகின்றனர்.