ரஜினியை பாலோ செய்.; விஜய்யை மறைமுகமாக சாடிய ஆர்.வி. உதயகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜயகாந்த் நடித்த சின்ன கவுண்டர், ரஜினி நடித்த எஜமான், கமல் நடித்த சிங்காரவேலன், கார்த்தி நடித்த பொன்னுமணி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் ஆர். வி. உதயகுமார்.

தற்போது பல படங்களில் குணச்சித்திர கேரக்டர்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர்களின் மேடை பேச்சு மற்றும் படத்தில் பேசும் பன்ச் டயலாக் குறித்து அவர் பேசியுள்ளார்.

அப்போது… பேனர் வைக்க வேண்டாம் என அறிக்கை வெளியிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் நடிகர்களுக்கு வாழ்த்துகள். என்றார்.

பின்னர்… ரஜினிகாந்த் படத்தில் தான் பஞ்ச் டயலாக் பேசுவார், மேடைகளில் யதார்த்தமாக பேசுவார். மற்ற நடிகர்களும் அதனை பின்பற்ற வேண்டும், என பிகில் இசை விழாவில் விஜய் பேசியது குறித்து இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் மறைமுகமாக சாடியுள்ளார்.

ஏனென்றால் தமிழக அரசை விஜய் கடுமையாக சாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

RV Udhayakumars indirect advice to Vijay to follow Rajini formula

சூப்பர் ஹிட்டான ‘ஜீவி’ பட கதாசிரியர் பாபு தமிழ் இயக்குனராகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தர்மராஜ் பிலிம்ஸ்’ நவீன் தயாரிப்பில், அறிமுக நாயகன் யோகேஷ், குரு சோமசுந்தரம் நடிப்பில், அறிமுக இயக்குனர் பாபு தமிழ் இயக்கத்தில் ‘க்’*

தர்மராஜ் பிலிம்ஸ்’ நவீன் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் பாபு தமிழ் எழுத்து – இயக்கத்தில், அறிமுக நாயகன் யோகேஷ், குரு சோமசுந்தரம், அனிகா விக்ரமன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் பாபு தமிழ், சமீபத்தில் வெளியாகி பாராட்டுகளையும், நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ள ‘ஜீவி’ திரைப்படத்திற்கு கதை-திரைகதை-வசனம் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உளவியல் ரீதியாக சிக்கி தவிக்கும் ஒரு கால்பந்து வீரரின் வாழ்க்கையை மிகவும் தத்ரூபமாகவும், உணர்வுபூர்வமாகவும் படமாக்க இருக்கிறார் இயக்குனர் பாபு தமிழ்.

தனது முதல் பெரிய போட்டியிலேயே பலமாக காயமடைந்து விடும் ஒரு கால்பந்து வீரரின் வாழ்வில், அதன்பின் நடக்கும் சம்பவங்கள், அதன் மூலம் கிடைக்கின்ற சில நுண்ணிய தகவல்கள், தனக்கு ஏன் இப்படி நடந்தது, எதனால் இந்த கதிக்கு ஆளானோம் என அவன் ஆராய முற்படுகிறான்.

அதன் முடிவில் அவன் தனது வாழ்வை சீரமைத்துக் கொண்டானா இல்லையா என்பதை இத்திரைப்படம் முற்றிலும் புதிய கோணத்தில், ஜனரஞ்சகமாக அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் தமிழ் திரையுலகிற்கு கொண்டு வரவிருக்கிறது.

ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, ராகுல் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

அவினாஷ் கவாஸ்கர் இசை அமைக்க, சண்டை பயிற்சி ஃபயர் கார்த்திக் வசமும், கலை கல்லை தேவா வசமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தர்மராஜ் பிலிம்ஸ் சார்பில் நவீன் தயாரிக்க, அறிமுக இயக்குனர் பாபு தமிழ் இயக்கத்தில், உருவாகும் ‘க்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்க இருக்கிறது.

பெரும்பாலான காட்சிகளை சென்னையிலும், சில குறிப்பிட்ட சிறப்பு காட்சிகளை வெளிநாட்டிலும் படமாக்கப்படவுள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப கலைஞர்களும்:

யோகேஷ் (அறிமுகம்)
அனிகா விக்ரமன்
குரு சோமசுந்தரம்
ஆடுகளம் நரேன் மற்றும் பலர்
தயாரிப்பு: தர்மராஜ் பிலிம்ஸ்’ நவீன்
கதை-திரைகதை வசனம் இயக்கம்: பாபு தமிழ்
நிர்வாக தயாரிப்பு: பினு ராம்
ஒளிப்பதிவு: ராதாகிருஷ்ணன்
படத்தொகுப்பு: ராகுல்
இசை: அவினாஷ் கவாஸ்கர்
கலை: கல்லை தேவா
சண்டை பயிற்சி: ஃபயர் கார்த்திக்
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

Babu Tamizhs directorial IKK starring Yogesh and Guru Somasundaram

‘மிக மிக அவசரம்’ படத்தை வெளியிடும் லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது ‘மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்துள்ளதுடன் இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்.

கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளனர்.

இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார்.

புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை, ஆகிய படங்களின் இயக்குநர் ஜெகன்நாத் இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இஷான் தேவ் இசையமைத்துள்ள இந்தப்படத்திற்கு பாலபரணி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

முதன்முறையாக இயக்குநராக மாறியுள்ள சுரேஷ் காமாட்சி, காவலர்களின் வலியை அறிந்து இந்த ‘மிக மிக அவசரம் ‘படத்தின் கதையை செதுக்கியுள்ளார்.

காவலர்களுக்கும் மனிதாபிமானம், மண் மீதான பற்று, மக்கள் போராட்டம் இவைகளில் அக்கறை உண்டு என்பதை படத்தில் வரும் காட்சிகளும் வசனங்களும் அழகாக பேசியிருக்கிறது.

அதிலும் பெண்காவலர்கள் ’மிக மிக அவசரம்’ படத்தைப் பார்த்தால் ஒருசொட்டு கண்ணீருடன், இந்த படம் உண்மையைத்தான் பேசியிருக்கிறது என அங்கீகரிப்பார்கள்.

அதற்கேற்றபடி காவல்துறை உயர் அதிகாரிகளே இப்படத்தை பெண் காவலர்களுக்கு திரையிட்டுக் காட்டச் செய்தார்கள்.. அந்த விதமாக காவல்துறையில் பணியாற்றும் சகோதரிகளுக்கும் இந்தப் படத்தை சமர்ப்பணம் செய்ய உள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

திரையுலகில் உள்ள சில பிரபலங்களும் விநியோகஸ்தர்களும் படம் பார்த்துவிட்டு, இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதை மட்டுமல்ல, பெண்களின் வலியை அப்படியே ஒவ்வொருவரின் மனதிற்கும் கடத்துகின்ற படமாகவும் இது உருவாகி இருக்கின்றது.. நிச்சயமாக தாய்க்குலங்களை தியேட்டருக்கு கூட்டம் கூட்டமாக வரவழைக்கப் போகும் படமாக இது இருக்கும் என பாராட்டியுள்ளார்கள்..

அந்தவகையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ’மிக மிக அவசரம்’ வரும் அக்-11ஆம் தேதி திரைக்கு வருகிறது..

நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை வெளியிட்டு வரும் லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் மிகப் பிரம்மாண்டமாக படத்தை வெளியிடுகிறார்.

Libra Productions bagged theatrical rights of Miga Miga Avasaram

 

‘சத்யா’ கூட்டணியில் நடிகை நந்திதாவை இணைத்த தனஞ்செயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் என்று பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் பிரபல நடிகை நந்திதா ஸ்வேதா, சிபிராஜ், நாசர், சம்பத் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தை ‘சைத்தான்’, ‘சத்யா’ புகழ் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் மற்றும் விநியோகஸ்தர்களின் டாக்டர் ஜி.தனஞ்சயன் மற்றும் லலிதா தனஞ்சயன் ஆகியோர் இந்த சஸ்பென்ஸ்-த்ரில்லர் படத்தை தயாரிக்கிறார்கள்.

இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா நடிக்க ஒப்பந்தமானதைக் குறித்து பேசிய கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் தயாரிப்பாளர் ஜி தனஞ்செயன் கூறுகையில்…

“இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரங்களைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப பன்முகத் திறமையை வெளிப்படுத்தி, அனைவரிடமும் பாராட்டுக்களை குவிப்பதில் வல்லவர். அவரது ஈடுபாடு இப்படத்திற்கு கூடுதல் வலுசேர்க்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

நானும், இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி நடிகைகளின் பட்டியலை வைத்துக் கொண்டு, நாட்டமுள்ள நடிகைகளால்தான், அவர் தனது பாத்திரத்தை வடிவமைத்துக் கொள்ள முடியும். இந்த அம்சத்தில், நந்திதா ஸ்வேதாவின் செயல்திறன் மற்றும் தமிழ் பேசும் பண்புகளைக் கண்டு அவர்தான் சரியான தேர்வாக இருப்பார் என்று உணர்ந்தோம்.

கிரியேட்டிவ் என்டர்டெயினர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் நந்திதாவுடன் இணைந்து பணியாற்றுவதற்கான சிறந்த தருணத்தை எதிர்பார்க்கிறோம். ”

இப்படம் செய்தி வந்தவுடனேயே மக்களை வெகுவாக ஈர்த்துள்ளது, ஏனெனில் இயக்குனர் பிரதீப் மற்றும் சிபிராஜ் ஆகியோரின் சமீபத்திய வெற்றி பெற்ற படமான ‘சத்யா’ படத்திற்குப் பிறகு இப்படத்தில் ஒன்றாக இணைகிறார்கள்.

இப்படத்தில் நாசர், சம்பத் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். சைமன் கே கிங்கின் இசையும், ஜான் மகேந்திரனின் வசனங்களும் ஏற்கனவே இந்த படத்திற்கு கூடுதல் தூணாக மாறிவிட்டன.

இந்த படத்தின் படப்பிடிப்பு 2019 நவம்பரில் தொடங்கி 2020 ஜனவரியில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்படும், அதைத் தொடர்ந்து உலகளாவிய திரையரங்கில் மார்ச் 2020 இல் வெளியிடப்படும்.

Nandita Swetha gets on board for Director Pradeep Sibiraj film

பல இன்னல்கள் கடந்து ‘TPTK’ படத்தை ரிலீஸ் செய்கிறோம் – கயல் ‘சந்திரமெளலி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் சுதர் இயக்கத்தில் ‘2 Movie Buff ‘ நிறுவனம் சார்பில் ரகுநாதன் PS தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’.

இப்படத்தில், கயல்’ சந்திரமௌலி, சாட்னா டைட்டஸ், ராதாகிருஷ்ணன் பார்த்திபன்,
சாம்ஸ், டேணியல் ஆணி போப், அர்ஜெய் ஆகியோர் நடித்துள்ளனர்.

SDC பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் இப்படத்தை வெளியிடுகிறது.

இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய கயல் சந்திரமெளலி, ‘கயல் படத்திற்கு பிறகு நான் அதிகமாக எதிர்பார்க்கும் படம் எதுவென்று கேட்டால் அது ‘ திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ தான். அது எனக்கு எப்படி ஒரு அறிமுக படமாக கிடைத்ததோ, அதேபோல் என் அண்ணனுக்கு தயாரிப்பில் இது முதல் படம்.

எதை மூடி காண்பிக்கணுமோ அதை மூடி தான் காட்டணும், எதை மறைக்க வேண்டுமோ அதை மறைத்து தான் ஆக வேண்டும், எதை காண்பிக்க வேண்டுமோ அதை மட்டுமே காண்பிக்க வேண்டும்.

பல இன்னல்களை தாண்டி, பல தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை ரிலீஸ் செய்து வருகின்றனர்.

திட்டம் போட்டு ஒரு கும்பல் உலக கோப்பையை திருட நினைக்கிறது. அந்த திட்டம் நிறைவேறியதா இல்லையா என்பதே படத்தின் கதை..

சினிமா ரசிகர்கள் மீது மட்டுமே முழு நம்பிக்கை வைத்து இப்படத்தை வரும் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி வெளியிடுகிறோம்.’ என்று கூறினார்.

எழுத்து & இயக்கம் – சுதர், ஒளிப்பதிவு – I.மார்டின் ஜோ, இசை – அஷ்வத்,

அசோக் செல்வன், ரித்விகா சிங் இணையும் ஓ மை கடவுளே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஓ மை கடவுளே’ என்பது சினிமா ரசிகர்களிடையே நன்கு பிரபலமான வாசகம். வெற்றிப்படமொன்றின் பாடலுக்கு இடையே வரும் இந்த வசனம் இப்போதும் பல சந்தர்பங்களிலும், பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது ஓ மை கடவுளே என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது.

அழகு நாயகன் அசோக் செல்வனும் ரித்விகா சிங்கும் பிரதான வேடங்களில் நடிக்கும் இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். நாளைய இயக்குநர் போட்டியின் இறுதிச் சுற்றுவரை வந்தவர் இவர் என்பது குறிப்படத்தக்கது. அசோக் செல்வனும் அபிநயா செல்வமும் இணைந்து துவக்கியிருக்கும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ், இப்படத்தை ஆக்ஸஸ் பிலிம் ஃபாக்டரி ஜி.டில்லிபாபுவுடன் சேர்ந்து தயாரிக்கிறது.

மணமக்கள் கோலத்தில் அசோக் செல்வனும் ரித்விகா சிங்கும் சாதரண கண்ணாடி டம்ளரில் டீ சாப்பிடுவதுபோல் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே, ரசிகர்களிடம் படம் குறித்த ஆர்வத்தை பெரிய அளவில் ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து தயாரிப்பாளர் அபிநயா செல்வம் கூறும்போது, “ஓரு கனவு நிறைவேறும் மகத்தான தருணமாக இதை நான் உணர்கிறேன். மரகத நாணயம், இரவுக்கு ஆயிரம் கண்கள், ராட்சசன் போன்ற வெற்றிப் படங்களுக்கு தூணாக துணை நின்ற, ஆக்ஸஸ் பிலிம்ஸ் டில்லிபாபு சார், எங்களது கனவு நனவாக ஆதார சக்தியாக அமைந்திருப்பதை பெருமையுடனும் பெருமகிழ்வுடனும் பகிர்ந்து கொள்கிறோம். அவர் இந்தப் படத்தில் பங்கு கொண்டிருப்பது எங்களுக்கு மிகப் பெரிய உந்து சக்தியாக இருக்கிறது. பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு, படப்பிடிப்பு நிறைவடையும் நிலைக்கு வந்திருக்கிறது.

காதல் எப்படி சாகாவரம் பெற்றதோ அதுபோல், காதல் கலந்த நகைச்சுவைப் படங்கள் உலகெங்கும் உள்ள சினிமா ரசிகர்களிடம் எப்போதும் வரவேற்பு பெறும் படங்களாகத்தான் இருக்கும். ஓ மை கடவுளே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பாரத்துவிட்டு திரையலகைச் சேர்ந்தவர்களும், ஊடக நண்பர்களும் வெகுவாக பாராட்டினார்கள். இது எங்களுக்கு மிகப் பெரிய ஊக்கமாக அமைந்தது. அறிமுக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தன் முழுத் திறமையும் வெளிப்படும் வகையில் மிக அழகாக செதுக்கி தன் முதல் படத்தை உருவாக்கியிருக்கிறார்” என்றார் அபிநயா செல்வம்.

‘மேயாத மான்’ மற்றும் ‘எல்.கே.ஜி.’ படங்களுக்கு ஓளிப்பதிவு இயக்குநராகப் பணியாற்றிய விது அய்யன்னா ‘ஓ மை கடவுளே’ படத்துக்கு ஓளிப்பதிவு செய்ய, லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார்.

More Articles
Follows