உலகிலேயே முதன்முறையாக கொரோனா தடுப்பு மருந்துக்கு ரஷ்யா அனுமதி

உலகிலேயே முதன்முறையாக கொரோனா தடுப்பு மருந்துக்கு ரஷ்யா அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

corona vaccineஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலர் உயிரிழந்து வருகின்றனர்.

இதை தடுக்க உலக மருத்துவர்களே திணறி வருகின்றனர்.

பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் உள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு ஒழுங்குமுறை அனுமதியை ரஷ்யா வழங்கி உள்ளதாக அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் இதுவரை 890,799 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 14973 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவே கொரோனாவுக்கான உலகின் முதல் தடுப்பு மருந்து என்றும், தேவையான அனைத்து பரிசோதனைகளும் முடிந்துவிட்டதாக புதின் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்துள்ளார்.

மேலும் தனது மகளுக்கு முன்பே இந்த தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

எப்போ யார வச்சு என்ன மாதிரி படம் பண்ணனும் தெரிந்தவர் சுவாமிநாதன்.; சிம்பு இரங்கல்

எப்போ யார வச்சு என்ன மாதிரி படம் பண்ணனும் தெரிந்தவர் சுவாமிநாதன்.; சிம்பு இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu with producer ML swaminathanலட்சுமி மூவி மேக்கர்ஸ் பட தயாரிப்பு நிறுவனத்தில் ஒருவர் சுவாமிநாதன்.

இவர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார்.

இவரின் மறைவுக்கு நடிகர் சிம்பு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்….

தயாரிப்பாளர் திரு. எல் எம். எம் சுவாமி நாதன் எனக்கு மிக நெருக்கமானவர். மென்மையான மனிதர். புத்திசாலி.

எந்த நேரத்தில் யாரை வைத்து என்ன மாதிரி படம் பண்ண வேண்டும் என்பதில் தெளிவானவர்.

நட்புக்கு இலக்கணமானவர். சிலம்பாட்டம் பட களத்தில் என்னை பத்திரமாகப் பார்த்துக் கொண்டவர்.

இலங்கையில் படப்பிடிப்பு நடைபெற்றது. எனது தேவைகளையறிந்து சகோதரனைப் போல் நடத்தி படப்பிடிப்பையும் முடித்து வந்தார்.

நிறைய நினைவலைகள் உள்ளன. ஆனால் இப்படியொரு சில நாட்களில் விடைபெற்றுச் செல்வாரென தெரியாது.

மருத்துவமனை சென்று பார்த்து ஆறுதல்கூட சொல்லமுடியாத ஒரு நோயோடு போராடியிருக்கிறார் என்பது வேதனைக்குரியது.

அஸ்வின் மற்றும் அசோக் அவர்களுக்கு என்றும், எந்தகாலத்திலும் நாங்கள் உறுதுணையாக இருப்போம்.

குடும்பத்தின் மீது அக்கறை கொண்ட ஒரு அமைதியான மனிதனை இழந்திருப்பதில் வருத்தமடைகிறேன்.

அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், சுற்றத்திற்கும், திரையுலகினருக்கும் என் ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மரணமடைந்த அவரின் ஆன்மா இறைவன் மடியில் இளைப்பாறட்டும். வேண்டிக் கொள்கிறேன்.

– சிலம்பரசன் TR

மகேஷ் பாபு விடுத்த Green India Challenge..; செய்து காட்டிய தளபதி விஜய்.!

மகேஷ் பாபு விடுத்த Green India Challenge..; செய்து காட்டிய தளபதி விஜய்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijayநல்ல விஷயத்தை பிரபலமாக்க பல பிரபலங்கள், தங்களுக்குள் மாறி மாறி ஒருவரை டேக் செய்து சவால்விடுவது வழக்கம்.

வீட்டை சுத்தம் செய்வது, சமைப்பது, யோகா செய்வது உள்ளிட்டவற்றை செய்து அந்த வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிடுவீர்கள்.

பின்னர் தன் நண்பர்கள் & சக நடிகருக்கு சவால் விடுவார்கள்.

இதனையடுத்து மற்ற நடிகர் அந்த சவாலை ஏற்பாரா? என ரசிகர்கள் காத்திருப்பார்கள்.

அதுபோல தற்போது #GreenIndiaChallenge என்ற சவால் பிரபலமாகி வருகிறது. ஒருவர் மரக்கன்றை நட்டு படம் எடுத்து வெளியிட்டு மற்ற மூவருக்கு சவால்விட வேண்டும்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு அவரது பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றை வைக்கும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில், ‘எனது பிறந்தநாளைக் கொண்டாட இதைவிட சிறந்த வழி இருக்க முடியாது. இந்த #GreenIndiaChallenge சவாலை ஜூனியர் என்.டி.ஆர், விஜய், ஸ்ருதிஹாசன் ஆகியோருக்கு விடுக்கிறேன் என்றார்.

அந்த செய்தியை நம் தளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் மகேஷ் பாபுவின் சவாலை ஏற்று மரக்கன்றை நட்டார் விஜய். அந்த படங்களை தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் தளபதி.

Attachments

BREAKING தம்பி தங்கைக்கு சூர்யாவின் அன்பான அட்வைஸ்; மீரா மிதுனுக்கு மறைமுக பதிலடி

BREAKING தம்பி தங்கைக்கு சூர்யாவின் அன்பான அட்வைஸ்; மீரா மிதுனுக்கு மறைமுக பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya reaction towards Meera Mithuns controversial speechகடந்த சில நாட்களாகவே திரையுலகில் உள்ள பல நடிகர், நடிகைகள் கடுமையாக கேவலமாக விமர்சித்து வருகிறார் நடிகை மீரா மிதுன்.

சூர்யாவுக்கு ஆக்டிங் என்றால் என்னவென்றே தெரியாது. அவருக்கு நடிக்கவே தெரியாது என வசைபாடி இருந்தார். மேலும் விஜய் தந்தை

இதனால் விஜய், சூர்யா ரசிகர்கள் அவரை கண்டபடி திட்டி வருகின்றனர்.

இதனையடுத்து நேற்று மீரா மிதுனுக்கு தன் கண்டனத்தை தெரிவித்திருந்தார் பாரதிராஜா.

மேலும் இதனை கண்டுக் கொள்ளாத நடிகர்கள் சங்கத்தையும் கண்டித்து இருந்தார்.

இந்த நிலையில் இது தொடர்பாக நடிகர் சூர்யா தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

அவரின் ட்விட்டர் பதிவில்…

எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் திருமிகு. பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்..

இத்துடன் கடந்த 2018 ஜனவரி மாதம் 20ஆம் தேதி அவர் பதிவிட்ட ட்விட்டர் பதிவையும் பகிர்ந்துள்ளார்.

தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற #AnbaanaFans

Suriya reaction towards Meera Mithuns controversial speech

BREAKING டிசம்பர் வரை பள்ளி-கல்லூரிகள் மூடல் – மத்திய உயர் கல்வித்துறை செயலாளர்

BREAKING டிசம்பர் வரை பள்ளி-கல்லூரிகள் மூடல் – மத்திய உயர் கல்வித்துறை செயலாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Schools and Colleges will not be opened till December 2020கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதியோடு மூடப்பட்டது.

இதனையடுத்து பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.

தற்போது கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு 5 மாதங்கள் ஆன நிலையில் பள்ளிகள் திறப்பது எப்போது என கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில், மனிதவள மேம்பாட்டிற்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

அதில் பங்கேற்ற மத்திய உயர்கல்வித்துறை செயலர் அமித் காரே, “கல்லூரி இறுதித் தேர்வுகள் திட்டமிட்டபடி இந்தாண்டு இறுதிக்குள் நடத்தப்படும். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

கொரோனா தொற்றின் அடிப்படையில் பள்ளி, கல்லூரிகளை டிசம்பர் மாதம் வரை திறக்கும் வாய்ப்பு குறைவு என மத்திய அரசு மதிப்பீடு செய்திருந்தாலும் zero academic year அறிவிக்கப்படாது.

டிசம்பர் மாதம் வரை ஆன்லைன், சமூக ரேடியோ, தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பு அடுத்த 15 நாட்களுக்குள் வெளியாகும்.

மத்திய அரசின் சமீபத்திய தரவுகளின்படி, 416 கேந்திரிய வித்யாலயாக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்குள் இருக்கின்றன. இதன் அடிப்படையிலே பள்ளிகளைத் டிசம்பர் மாதம் வரை திறக்க வேண்டாம் என்ற பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதே நிலையில் மாநில பள்ளிகளைப் பொறுத்தவரையில், கொரோனாவின் தீவிரத்தைப் பொறுத்து, கல்வியாண்டு தொடங்கப்படும் போது அந்தந்த மாநில அரசுகளே இறுதி முடிவு எடுக்கலாம் என மனிதவள மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Schools and Colleges will not be opened till December 2020

வனிதாவிடம் 1.25 கோடி கேட்கும் லட்சுமி.; லட்சுமியிடம் 2.50 கோடி கேட்கும் வனிதா

வனிதாவிடம் 1.25 கோடி கேட்கும் லட்சுமி.; லட்சுமியிடம் 2.50 கோடி கேட்கும் வனிதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vanitha vijayakumar lakshmi rama krishnanகொரோனா ஊரடங்கு சமயத்தில் தன் வீட்டிலேயே மிக எளிமையாக பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்துக் கொண்டார் நடிகை வனிதா.

அது தொடர்பான வீடியோக்களையும் படங்களை இணையத்தில் வனிதா வெளியிட அதுவே சர்ச்சையானது.

மேலும் பீட்டர் பாலின் முதல் மனைவி இது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்க இந்த விவகாரம் விஸ்வரூபம் பெற்றது.

இதனையடுத்து வனிதாவை பலரும் விமர்சிக்க தொடங்கினர். முக்கியமாக நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி உள்ளிட்டவர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இதற்கு அடிக்கடி தக்க பதிலடியும் கொடுத்து வந்தார் வனிதா.

நீ பேருக்கு ஒரு புருசன் வச்சிருக்க.. எத்தனை பேரு கூட நீ இருந்தன்னேன்னு எனக்கு தெரியாதா? என நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனை வனிதா சரமாரியாக விமர்சித்தார்.

இதனையடுத்து தன்னை தரக்குறைவாக பேசியதாகக் குறிப்பிட்டு, வனிதா விஜயகுமார் மீது ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு லட்சுமி ராமகிருஷ்ணன் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில் தற்போது வனிதாவும் லட்சுமியிடம் இரண்டரை கோடி ரூபாய் இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

More Articles
Follows