தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கத்தார் நாட்டின் தலைநகர் தோஹா மாநிலத்தில் ஆசிய சாம்பியன்ஷிப் தடகளப் போட்டிகள் நடைபெற்றது.
இதில் 800 மீ ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளவர் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.
மிகவும் ஏழ்மையில் நிலையில் இருந்து இந்த சாதனையை புரிந்த இவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கோமதி மாரிமுத்துவிற்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளார் நடிகர் ரோபோ சங்கர்.
இது தொடர்பாக ஒரு வீடியோவும் வெளியிட்டுள்ளார். அதில்…
தமிழ் பெண் கோமதி மாரிமுத்து ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்றிருக்கிறார். ஒரு தமிழனாக, ஒரு இந்தியனாக இது மகிழ்ச்சியை தருகிறது.
நான் கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்து தன்னம்பிக்கையோடு உழைத்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். என்னைப் போல் கோமதியும், இந்த உயரத்தை பிடித்திருக்கிறார்.
எனவே என்னால் முடிந்த சிறு பரிசாக ஒரு லட்சம் ரூபாய் வழங்குகிறேன்.
நம் எல்லைச் சாமிகளான ராணுவ வீரர்கள் நாட்டுக்காக தியாகம் செய்தபோது குறிப்பாக தமிழ்நாட்டு வீரர்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்தேன்.
அப்போது அவர்கள் நம்மோடு இல்லையே என்ற வருத்தம் மனசுக்குள் இருந்தது.
ஆனால் கோமதிக்கு மன நிறைவோடும், மகிழ்ச்சியோடும் கொடுக்கிறேன். அவர் இன்னும் பல விருதுகளை வெல்ல வேண்டும் என வாழ்த்துகிறேன்.
Robo Shankar announces 1 lakh cash reward for Gomathi Marimuthu