1980களில் வாழ்ந்த கடல் அரசனின் வாழ்வியலைச் சொல்லும் ‘கோட்டை முனி’

1980களில் வாழ்ந்த கடல் அரசனின் வாழ்வியலைச் சொல்லும் ‘கோட்டை முனி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ட்ரீம் லைட் பிக்சர்ஸ் (பி) லிமிடெட் சார்பாக சிங்கப்பூர் N. ஹபீப் மிகுந்த பொருட்செலவில் மிகப் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் ‘கோட்டைமுனி’.

புதுமுக இயக்குனரான ந.இளைய பிரபாகரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார்.

1980 காலகட்டத்தில் இராமேஸ்வரம், தனுஷ் கோடி பகுதிகளில் கடல் அரசனாக நிஜத்தில் வாழ்ந்த கோட்டைமுனி என்பவரின் வாழ்க்கையில், இலங்கை தனுஷ் கோடி பகுதிக்கு இடையே கடலில் நடந்த கடத்தல் சம்பவங்களை மையப்படுத்தி கேங்க்ஸ்டர் படமாக ‘கோட்டைமுனி’ திரைப்படம் உருவாகிறது.

இதில் கோட்டை முனியாக முற்றிலும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் R.K.சுரேஷ் நடிக்கிறார்.

நீண்ட நெடுநாளைக்குப் பிறகு முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில்
வத்திக்குச்சி, காலா படத்தில் நடித்த திலீபன் முக்கிய கதாப்பாத்திரம்
ஏற்றிருக்கிறார்.

மேலும் சைத்தான் படப் புகழ் அருந்ததி நாயர் கதை நாயகியாக நடிக்க,
ஷரவணசக்தி, ராஜசிம்மன், நிழல்கள் ரவி, சச்சு, தாமு, முத்துராமன், முத்துக்காளை, திருமுருகன் உள்ளிபட பலர் நடிக்கின்றனர்.

கடலும் கடல் சார்ந்த பகுதிகளில் நடக்கும் கதை என்பதால், இதன் படப்பிடிப்பு இராமேஸ்வரம், வேதாரண்யம், நாகப்பட்டிணம் ஆகிய கடற்கரைப் பகுதியில் நடக்க இருக்கிறது.

தமிழ் சினிமாவில் இதுவரை கண்டிராத அளவிற்கு ஆழ்கடல் சண்டைக் காட்சிகளை புதிய தொழில்நுட்பத்துடன் வித்தியாசமான முறையில் படமாக்குவதற்கு படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

ஒளிப்பதிவு: A.M.M. கார்த்திகேயன், இசை: M.S.பாண்டியன், கலை: SK, படத்தொகுப்பு: நெல்சன் ஆண்டனி, நடனம்: சிவராக் சங்கர், பாடல்கள்: ப.கருப்பையா, சண்டைக் காட்சிகள் : டைகர் ஜான்மார்க்,
மக்கள் தொடர்பு: S.ப்ரியா, தயாரிப்பு நிர்வாகம்: K.S.வெங்கடேஷ்

அடுத்த ஆண்டு 2022 கோடை விடுமுறையில் ‘கோட்டை முனி’ திரையில் வெளியிடப்படும்.

RK Suresh in next film is titled Kottai Muni

3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்ற பிரதமர் மோடிக்கு கார்த்தி நன்றி

3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்ற பிரதமர் மோடிக்கு கார்த்தி நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2020ல்.. அதிரடியாக அறிவிக்கப்பட்ட 3 வேளாண் சட்டங்கள்…

(1). வேளாண் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் மசோதா, 2020

(2). விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைக்கான விவசாயிகள் ஒப்பந்த மசோதா 2020

(3). அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா 2020 மத்திய அரசு வேளாண் துறை தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றியது.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த ஓராண்டாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று நவம்பர் 19 நாட்டு மக்களிடையே உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.

அவரது உரையில்…

நாட்டு நலனுக்காக வேளாண் துறையில் பல்வேறு சீர்திருத்தம் கொண்டு வந்தோம். விவசாயிகளின் நலனுக்காக புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.

சிறு விவசாயிகளை முன்னேற்றவே அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவே இந்த சட்டங்கள் கொண்டு வந்துள்ளோம். அனைத்து விவசாயிகள் சங்கத்தினருடன் ஆலோசித்த பிறகே இந்த சட்டம் கொண்டு வந்தோம்.

ஆனால் சட்டம் தொடர்பாக தவறான தகவல் பரப்பி விடப்பட்டது. இது குறித்து புரிய வைக்க பல முயற்சிகள் எடுத்தோம். இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

ஆனாலும் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும் பெறுகிறோம். வரவிருக்கும் பார்லிமெண்ட் கூட்டத்தொடரில் இந்த சட்ட திரும்ப பெறும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் போராட்டத்தை கைவிடுங்கள்.

என பேசினார் பிரதமர் மோடி.

பிரதமரின் இந்த அறிவிப்புக்கு விவசாயிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறன்றனர்.

இந்நிலையில் நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

”மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக நம் பிரதமர் அறிவித்திருப்பது, தங்கள் உயிரை ஈந்து போராடிய எளிய வேளாண் மக்களின் ஒருவருட இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி. போராடியவர்களுக்கும் புரிந்துகொண்ட அரசுக்கும் அன்பும் நன்றியும்”.

இவ்வாறு கார்த்தி பதிவிட்டுள்ளார்.

Actor Karthi thanked prime minister modi

விஜயகாந்த் பாணியில் தீவிரவாதிகளுடன் மோதும் விஜய்

விஜயகாந்த் பாணியில் தீவிரவாதிகளுடன் மோதும் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜயகாந்த் நடித்த போலீஸ் படங்களை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்கமுடியாது.

கேப்டன் பிரபாகரன், சத்ரியன், சேதுபதி ஐபிஎஸ், புலன் விசாரணை உள்ளிட்ட பல படங்களில் போலீசாக நடித்ததாலே அவரது பெயருடன் ‘கேப்டன்’ என்ற வார்த்தையும் ஒட்டிக் கொண்டது.

இவரது படங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அதிகளவில் காணப்படுவார்கள். அவர்களை எட்டி எட்டி உதைத்து பிடித்து தண்டனை கொடுப்பதில் வல்லவர் இந்த கேப்டன்.

தற்போது விஜயகாந்த் பாணியில் வரவிருக்கிறார் விஜய்.,

நெல்சன் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இந்த படத்தில் ராணுவ அதிகாரியாக நடிக்கிறாராம் தளபதி விஜய்.

அதன்படி காஷ்மீர் தீவிரவாதிகளுடன் அவர் மோதுவதாக காட்சிகள் உள்ளதாம்.

காஷ்மீரில் இதற்கான காட்சியை படமாக்க முடியாத காரணத்தினால் தான் தற்போது ஜார்ஜியா நாட்டில் படமாக்கவிருக்கிறார்களாம்.

‘பீஸ்ட்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்களில் கூட துப்பாக்கி குண்டுகள்.. ராணுவ விமானங்கள் இருந்தன.

முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி படத்திலும் ராணுவ அதிகாரியாக விஜய் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thalapathy Vijay role in beast leaked ?

பண மோசடியில் ஏமாற்றப்பட்ட சினேகா-பிரசன்னா ஜோடி போலீசில் புகார்

பண மோசடியில் ஏமாற்றப்பட்ட சினேகா-பிரசன்னா ஜோடி போலீசில் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் பிரசன்னா மற்றும் நடிகை சினேகா இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர்கள்.

இவர்கள் தற்போது சென்னையில் தங்கள் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர்.

இவர்கள் எம்.எஸ்.கவுரி சிமெண்ட் அண்ட் மினரல் சிமென்ட் கம்பெனியில் ரூபாய் 25 லட்சத்தை முதலீடு செய்து தொழில் செய்து வருகின்றனர்.

சந்தியா மற்றும் சிவராஜ் கவுரி ஆகிய இருவரும் இந்த தொகையை பெற்றுக் கொண்டு மாதந்தோறும் 1,80,000 ரூபாய் தருவதாக ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் கடந்த 6-7 மாதங்களாக மாதந்தோறும் வரும் தொகையை தராமல் அவர்கள் ஏமாற்றி வருவதாக தெரிவித்துள்ளனர்.

சினேகா பிரசன்னா கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதற்கு சம்பந்தப்பட்டவர்கள் மிரட்டல் விடுத்து வருகிறார்ளாம்.

எனவே கானத்தூர் காவல் நிலையத்தில் சினேகா பிரசன்னா தம்பதியினர் புகார் அளித்துள்ளனர்.

இந்த நட்சத்திர ஜோடி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது காவல் துறை.

Sneha and Prasanna file police complaint against two businessmen

ஹிந்தி நடிகருடன் நயன்தாராவை ‘கனெக்ட்’ செய்த விக்னேஷ் சிவன்

ஹிந்தி நடிகருடன் நயன்தாராவை ‘கனெக்ட்’ செய்த விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நயன்தாரா மற்றும் அவரது காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து அண்மைக்காலமாக படத்தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியான ‘நெற்றிக்கண்’ படம் இவர்களின் படைப்பு தான்.

அதனைத் தொடர்ந்து ‘கூழாங்கல்’, ‘ராக்கி’ உள்ளிட்ட படங்களின் வெளியீட்டு உரிமைகளயும் இவர்கள் கைப்பற்றியுள்ளனர்.

இவர்களின் ரௌடி பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கவுள்ள புதிய பட அறிவிப்பினை நேற்று நவம்பர் 18 நயன்தாரா பிறந்தநாளில் அறிவித்துள்ளனர்.

இவர்களின் புதிய படத்திற்கு கனெக்ட் என டைட்டில் வைத்து இரு போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.

ஏற்கெனவே நயன்தாரா நடித்த திகில் படமான ‘மாயா’ (2015) படத்தை இயக்கியவர் அஸ்வின் சரவணன் தான் இந்த படத்தை இயக்கவுள்ளார்.

மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவு செய்ய பிரித்வி சந்திரசேகர் இசையமைக்கிறார்.

ராஜா ராணி படத்தில் இணைந்து நடித்த சத்யராஜ் இதிலும் நயன்தாராவுடன் இணைந்து நடிக்கிறார். அவரின் கேரக்டர் குறித்த தகவல் வெளியாகவில்லை.

முக்கிய வேடத்தில் பிரபல சீனியர் ஹிந்தி நடிகர் அனுபம் கெர் நடிக்கவுள்ளார்.

நேற்று விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை சமந்தாவுடன் தன் பிறந்தநாளை கொண்டாடினார் நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது.

Famous bollywood actor joins Nayanthara’s connect

சிவகார்த்திகேயனுக்கு ஓகே சொல்வாரா ஆந்திரா ஹாட் அழகி..?

சிவகார்த்திகேயனுக்கு ஓகே சொல்வாரா ஆந்திரா ஹாட் அழகி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடித்து ஒரு மாதத்திற்கு முன்பு தியேட்டர்களில் ரிலீசான ‘டாக்டர்’ படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து அட்லியின் உதவி இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கும் டான் படத்தில் நடித்து வருகிறார் எஸ்கே.

இந்த படத்திற்கும் அனிருத் தான் இசையமைத்து வருகிறார்.

இதில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, முனீஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட், சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், புகழ் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

டான் படத்தின் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகியது.

இந்த படத்தை முடித்துவிட்டு ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் என்பவர் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன் என்பதை பார்த்தோம்.

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு தற்போது நாயகி வேட்டை நடந்து வருகிறது.

இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

குறுகிய காலத்திலேயே தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ராஷ்மிகா. இவர் தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்க ராஷ்மிகா ஓகே சொல்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

Telugu top heroine joins Sivakarthikeyan’s next ?

More Articles
Follows