மணிரத்னம் படத்தில் ஆர்.ஜே. பாலாஜி.. கபாலியுடன் எப்படி கம்பேர்..?

மணிரத்னம் படத்தில் ஆர்.ஜே. பாலாஜி.. கபாலியுடன் எப்படி கம்பேர்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mani ratnam and RJ Balajiவானொலி (அட அதாங்க ரேடியோ) என்றாலும் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர் ஆர்ஜே பாலாஜி.

இவர் தற்போது சினிமாவில் காமெடி செய்து கலக்கி வருகிறார்.

சமீபத்தில் நடைபெற்ற சைமா விருது விழாவில் சிறந்த காமெடியன் விருதை நானும் ரௌடிதான் படத்திற்காக பெற்றார்.

இந்நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் ஆர்ஜே. பாலாஜி.

இதுகுறித்து அவர் கூறியதாவது…

“முதலில் இதற்கான வாய்ப்பு வந்தபோது நான் நிஜம் என நினைக்கவில்லை. பின்பு சென்னை வந்தபின் மணிரத்னம் சாரை சந்தித்தேன்.

அவர் என்னிடம் அரை மணி நேரம் கதை சொன்னார். பின்பு அவருடன் செல்ஃபி எடுத்துகொண்டேன்.

நாயகன், தளபதி, அஞ்சலி உள்ளிட்ட மணிரத்னம் படங்களை பார்த்து வளர்ந்தவன் நான். இன்று அவர் படத்தில் நான் நடிக்கிறேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

இது எப்படி இருக்கிறது என்றால் நாம் கபாலி படத்திற்கு முதல் நாள் முதல் காட்சிக்கு போக நினைக்கலாம். ஆனால் கபாலியாக மாற நினைக்க முடியாது.

என்னைப் போன்ற நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒருவனுக்கு இதுபோன்ற வாய்ப்பு கிடைத்தது அப்படிதான் உள்ளது.

இது கனவு நிஜமானதாக நினைக்கவில்லை. அதுக்கும் மேல இது.” என்றார்.

தம்பி கார்த்திக்காக சிங்கத்திற்கு தடை போட்ட சூர்யா..!

தம்பி கார்த்திக்காக சிங்கத்திற்கு தடை போட்ட சூர்யா..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karthi and suriyaகோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடித்துள்ள படம் காஷ்மோரா.

சமீபத்தில் இதன் சூட்டிங் நிறைவுபெற்றது.

எனவே நேற்று முதல் பூஜையுடன் இப்படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளனர்.

மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சிங்கம்-3’ படத்தையும் தீபாவளிக்கு வெளியிட இருந்தனர்.

ஆனால் தன் தம்பி கார்த்தியின் படமும் தன் படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆனால், லாபம் பாதிக்ககப்படும் என்பதால் ‘சிங்கம்-3’ படத்துக்கு தடை போட்டு விட்டாராம் சூர்யா.

அண்ணன்டா…

‘முதன் முறையாக நட்சத்திரத்தை இயக்குகிறேன்…’ – கமல்ஹாசன்.

‘முதன் முறையாக நட்சத்திரத்தை இயக்குகிறேன்…’ – கமல்ஹாசன்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasan latest stillsலைகா நிறுவனத்துடன் இணைந்து கமல் தயாரித்து வரும் படம் ‘சபாஷ் நாயுடு’.

ராஜீவ் குமார் இயக்கிவந்த இப்படத்தை கமலே தற்போது இயக்கி நடித்தும் முடித்துள்ளார்.

இவருடன் ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன், பிரம்மானந்தம் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தில் தன் மகள் ஸ்ருதியை இயக்கிய அனுபவம் பற்றி சமீபத்திய பேட்டியில் கமல் கூறியதாவது…

”இதற்கு முன் நான் நடிகர்களை மட்டுமே இயக்கியுள்ளேன்.

ஒரு நட்சத்திரத்தை நான் இயக்கியதில்லை. ஸ்ருதி ஒரு நடிகை மட்டுமின்றி நட்சத்திரமும் ஆவார். எனவே எனக்கு இது புதிய அனுபவம்தான்.

‘தசாவதாரம்’ படத்தில் நடித்த போது அதில் பேசிய அமெரிக்க உச்சரிப்புகளுக்கு ஸ்ருதிதான் காரணம்” என்றார்.

‘ரஜினி – நயன்தாரா தான் என் பேவரைட்டு…’ ‘அட்ரா மச்சான் விசிலு’ நைனா சர்வார்

‘ரஜினி – நயன்தாரா தான் என் பேவரைட்டு…’ ‘அட்ரா மச்சான் விசிலு’ நைனா சர்வார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress naina sarwarதிரைவண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அட்ரா மச்சான் விசிலு. சிவா, நைனா சர்வார், பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் ஜூலை 7-ம் தேதி வெளியாகிறது.
கன்னடத்தில் பிரபலமான நைனா சர்வாருக்கு இதுதான் முதல் தமிழ் படம்.

இந்நிலையில், தனது சினிமா அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்ட போது கூறியதாவது… “நான் பி காம் ஃபைனல் இயர் படித்துக் கொண்டிருக்கிறேன். சொந்த ஊரு பெங்களூரு.

இப்படத்தில் எனக்கு நகைச்சுவையுடன் கூடிய பப்ளியான கேரக்டர். உடனே ஒப்புக் கொண்டேன். ஹீரோ சிவாவுடன் நடிக்கும்போது கன்வீனியன்டாக இருந்தது. தமிழைப் புரிந்து கொள்வேன். ஆனால் பேச தெரியாது.

நானும் இயக்குனரும் சிவா மூலம்தான் பேசிக் கொள்வோம். இப்படத்தில் பவர் ஸ்டாருடன் எனக்கு காட்சிகள் கிடையாது. அவருடன் ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தால் தயக்கம் இல்லாமல் நடிப்பேன்.

என் பேவரைட் ஹீரோ எவர்கிரீன் ஒன் அன்ட் ஒன்லி ரஜினி சார்தான். ஹீரோயின் நயன்தாராதான்” என்றார்.

ரெமோ ஆன்ட்டி பற்றிய தன் மகள் கேள்விக்கு பதில் சொல்லாத சிவகார்த்திகேயன்…!

ரெமோ ஆன்ட்டி பற்றிய தன் மகள் கேள்விக்கு பதில் சொல்லாத சிவகார்த்திகேயன்…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

remo movie stillsநடிகர் சிவகார்த்திகேயன் தன் உறவுக்கார பெண் ஆர்த்தியை 2010ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்.

தற்போது இத்தம்பதியருக்கு ஆராதனா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படம் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது.

அதுவும் பெண் வேடம் குறித்து பாசிட்டிவ்வான விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இதனிடையில் ஒரு தெலுங்கு சேனலுக்கு பேட்டியளித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

அதில் ஆங்கிலத்திலேயே பேசி அசத்தியிருக்கிறார்.

அதில்… ‘என் மகளுக்கு ரெமோ டீசர் மிகவும் பிடித்துவிட்டது. அடிக்கடி பார்ப்பாள்.

அந்த அம்பு பட்டவுடன் நீங்க ரெமோ ஆன்ட்டியாக மாறிடுவீங்களாப்பா? என் கேட்பாள்.

எனக்கு என்ன பதில் என்ன சொல்வதென்றே தெரியாது’ என என்று தெரிவித்துள்ளார்.

நயன்தாராவின் அடுத்த படத்தலைப்பு வெளியானது..!

நயன்தாராவின் அடுத்த படத்தலைப்பு வெளியானது..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress nayantharaமாயா என்ற த்ரில்லர் படத்தை தொடர்ந்து மீண்டும் அதே போன்ற ஒரு படத்தில் நடிக்கிறார் நயன்தாரா.

இப்படத்தை இயக்குனர் சற்குணம் தயாரிக்கிறார்.

தாஸ் இயக்கும் இப்படத்திற்கு தினேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் இப்படத்திற்கு டோரா (#Dora) என பெயரிடப்பட்டுள்ளது.

இத்தகவலை அனிருத் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நயன்தாரா நடிப்பில் காஷ்மோரா, திருநாள், இருமுகன் ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

More Articles
Follows