கபாலி விளம்பரங்களில் ஏன் ரித்விகா இல்லை தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி ரிலீஸ் தேதியை நெருங்கி வருவதால், விளம்பரப் பணிகளைத் துரிதப்படுத்தி வருகிறது படக்குழு.

இதுவரை விளம்பரம் மற்றும் இதர போஸ்டர்களில் ரஜினியுடன் வில்லன்கள், ராதிகா ஆப்தே, ஜான் விஜய், நாசர், தினேஷ், தன்ஷிகா உள்ளிட்டோரின் படங்கள் இடம் பெற்று இருந்தன.

ஆனால் இப்படத்தில் முக்கியமான கேரக்டர் ஏற்றுள்ளதாக கூறப்படும் ரித்விகாவின் படங்களே இடம் பெறவில்லை.

இதுகுறித்து படக்குழு தெரிவித்துள்ளதாவது…

“கபாலியை திரையில் பார்க்கும் போது ரித்விகா கேரக்டர் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும்.

படப்பிடிப்பின் போதே ரஞ்சித்திடம் “என்னப்பா.. இந்தப் பொண்ணு இந்தளவு சூப்பரா பெர்மான்ஸ் பன்னுது” என்று ரஜினியே ஆச்சர்யப்பட்டாராம்.

அந்த சஸ்பென்ஸை உடைக்க வேண்டாம் என்பதால்தான் விளம்பரங்களில் ரித்விகாவின் படங்கள் இடம் பெறவில்லையாம்.

ரசிகர்களிடம் இருந்து எஸ்கேப் ஆக விஜய் போட்ட ப்ளான்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வருகிற ஜூன் 22ஆம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்த நாள் வருகிறது.

இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தற்போதே அவரது ரசிகர்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

ஆனால் பிறந்த நாள் அன்று, விஜய் சென்னையில் இருக்கமாட்டார் என தகவல்கள் கிடைத்துள்ளன.

பிறந்த நாள் கொண்டாட்டங்களால் ஏற்படும் சில அரசியல் சலசலப்புக்கு விஜய் இடம் கொடுக்க விரும்பவில்லையாம்.

எனவே அன்றைய தினம் ரசிகர்களை சந்திக்காமல், விஜய் 60 படத்தின் சூட்டிங்கில் இருந்துவிடலாமா? என யோசிக்கிறாராம்.

அன்றைய தினத்தில் படக்குழுவினருக்கு மட்டும் ஸ்பெஷல் பார்ட்டி கொடுத்து முடித்து கொள்ளலாம் என திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

முத்தின கத்திரிக்கா முன்னோட்டம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட சுந்தர் சி., நாளடைவில் நாயகனாக மாறினார்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு, மீண்டும் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வந்தார்.

தற்போது தன் உதவி இயக்குனர் வேங்கட் ராகவன் இயக்கியுள்ள ‘முத்தின கத்தரிக்கா’ படத்தில் நாயகனாக மாறி இப்படத்தை தயாரித்துள்ளார்.

இது மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த ‘வெள்ளி மூங்கா’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

ஆனால் தமிழுக்கு ஏற்றவாறு, காமெடி, அரசியல் நையாண்டி என அனைத்தும் கலந்த கலவையாக கொடுத்துள்ளனர்.

கவர்ச்சியிலும் அழகிலும் நம்மை கலங்கடித்த பூனம் பாஜ்வா இதில் நாயகியாக நடித்துள்ளார்.

இவர் போதா குறைக்கு பூனம் பாஜ்வாவின் அம்மாவாக ‘ஜெமினி’ புகழ் கிரண் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் சதீஷ், விடிவி கணேஷ், சிங்கம்புலி, சிங்கப்பூர் தீபன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இதில் விடிவி கணேஷ் காமெடி கலந்த வில்லத்தனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.

சுந்தர்சி -குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

வருகிற ஜீன் 17ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகிறது. அன்று இப்படத்தின் திரைவிமர்சனத்தை பார்ப்போம்.

பைபிளை பாலோ செய்யும் ரஜினிகாந்த்-அஜித்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரம்போ என்ற படத்தில் அறிமுகமானாலும் சினிமா பாதையில் மற்ற வில்லன்களை ஓரங்கட்டி வருபவர் ஜான் விஜய்.

ரஜினியுடன் கபாலி மற்றும் அஜித்துடன் பில்லா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்தாண்டில் மட்டும் இவரது நடிப்பில் ஒரு டஜன் படங்கள் வெளியாகக் கூடும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் ரஜினி மற்றும் அஜித் பற்றி இவர் கூறியதாவது….

“இருவருமே பெரிய நடிகர்களாக இருந்தாலும் மிகவும் எளிமையான மனிதர்கள்.

“எவன் ஒருவன் தன்னை தாழ்த்திக்கொள்கிறானோ அவன் மென்மேலும் உயர்த்தப்படுவான்” என பைபிளில் (Bible) கூறப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரும் இதை தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்து வருவதால், இந்த உயரத்தை அடைந்துள்ளனர்’ என கூறினார்.

டபுள் ஹீரோ; டபுள் வில்லன்… கலக்கும் ஜெயம் ரவி-அரவிந்த்சாமி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ரோமியோ ஜூலியட்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து லக்ஷ்மன் இயக்கத்தில் மீண்டும் ஜெயம் ரவி, ஹன்சிகா இணைந்து நடித்து வருகின்றனர்.

‘போகன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் தனி ஒருவன் அரவிந்த் சாமியும் இணைந்துள்ளார்.

இவர்களுடன் வி.டி.வி.கணேஷ், ஆடுகளம் நரேன், அஸ்வின் உள்ளிட்டோர் நடிக்க, இமான் இசையமைக்கிறார்.

பிரபு தேவா ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இயக்குனர் லக்ஷ்மன் பேசியதாவது..

காக்கி சட்டைக்கு கௌரவம் சேர்க்கும் படமாக இப்படம் அமையும்.

இதில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி ஆகிய இருவருமே ஹீரோவாகவும் அவர்களே வில்லன்களாகவும் நடித்துள்ளனர்.

இருவருக்கும் ஒரே மாதிரியான வேடம் என்றாலும், இரு மாறுபட்ட குணாதிசயங்களை அவர்களின் கேரக்டர்கள் கொண்டு இருக்கும்” என்றார்.

என் ‘அப்பா’…. பேச முடியாமல் தவிக்கும் அபிநயா (வீடியோ)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமுத்திரக்கனி, தம்பி ராமையா நடிப்பில் உருவாகியுள்ள அப்பா என்ற படம் விரைவில் வெளியாகவுள்ளது.

எனவே தற்போது இப்படத்தின் புரோமோசன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் திரையுலகின் பிரபலங்கள் பலரும் தங்கள் அப்பா பற்றி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அண்மையில் மோகன்லால், சூர்யா, ஏஆர் முருகதாஸ், கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்டோர் தங்கள் அப்பா பற்றி கருத்து தெரிவித்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில் நாடோடிகள் அபிநயா தனது அப்பாவை பற்றி பேசியுள்ளார்.

அவரால் வாய் திறந்த பேச முடியாது என்பதால் அவர்களின் உணர்வுகளை தனது மொழியில் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோ காட்சியை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் நிச்சயம் நீங்கள் கலங்கி போவீர்கள் என்பது மட்டும் உண்மை.

அந்த வீடியோ இதோ உங்களுக்காக…

More Articles
Follows