ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த்சாமி ஜோடியாக ரெஜினா

ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த்சாமி ஜோடியாக ரெஜினா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

regina and arvind swamyஎன்னமோ நடக்குது அச்சமின்றி படங்களை இயக்கியவர் ராஜபாண்டி.

இவர் அடுத்ததாக இயக்கும் படத்தில் அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கிறார்.

நாயகியாக ரெஜினா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்தப் படத்தின் கதையை கேட்டு ஏற்கனவே அரவிந்த்சாமி பாராட்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கதையை கேட்ட ரெஜினாவும் தனது கதாபாத்திரம் வித்தியாசமாக சித்தரிக்கப் பட்டுள்ளதாகவும் தனக்கு இது நல்ல பெயரை பெற்றுத் தரும் என்று இயக்குனருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்..

அடுத்த மாதம் படப்பிடிப்பு சென்னையில் துவங்க உள்ளது.

ஏ.வி.எம் ஸ்டூடியோவில் பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப் பட்டு படப்பிடிப்பு நடக்க உள்ளது.

சிவகார்த்திகேயன் மகளும் சினிமாவுக்கு வந்துட்டார்; அப்பா தயாரிப்பில் அறிமுகம்!

சிவகார்த்திகேயன் மகளும் சினிமாவுக்கு வந்துட்டார்; அப்பா தயாரிப்பில் அறிமுகம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan with aaradhanaaஎஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அறிமுகமாகும் படம் `கனா’.

நடிகர், பாடகர் அருண்ராஜா காமராஜ் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்க அவருக்கு அப்பாவாக சத்யராஜ் நடித்திருக்கிறார்.

இசை மற்றும் டீசர் வருகிற ஆகஸ்ட் 23-ஆம் தேதி (நாளை) வெளியாக இருக்கிறது.

திபு நிணன் தாமஸ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்தில் வாயாடி பெத்த புள்ள என்ற பாடலை சிவகார்த்திகேயன், அவரது மகள் ஆராதனா மற்றும் வைக்கம் விஜயலட்சுமி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

இதன் மூலம் ஆராதனா தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகிறார்.

மெர்சல் படத்தால் சர்வதேச விருது பட்டியலில் விஜய் பெயர்

மெர்சல் படத்தால் சர்வதேச விருது பட்டியலில் விஜய் பெயர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay at IARA awardsஅட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமாக இது உருவானது.

3 விஜய் நடித்திருந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் நடித்திருந்தனர்.

இந்நிலையில், ஐஏஆர்ஏ என்ற சர்வதேச விருதுக்கு நடிகர் விஜய் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மெர்சல் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் மற்றும் சர்வதேச சிறந்த நடிகர் என இரு பிரிவுகளில் விஜய் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார். அதற்காக இணையதளத்தில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

தற்போது அந்த பிரிவுக்கான இறுதிப் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதில் விஜய், கென்னத் ஓகோலி, டைம் ஹசன், ஜோஷுவா ஜேக்‌ஷன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இவர்கள் அனைவரும் இறுதிச்சுற்றுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது அந்த நிறுவனம்.

விரைவில் விருது அறிவிக்கப்படவுள்ளது. எனவே காத்திருப்போம்.

பாரதிராஜா இயக்கும் ஜெயா படத்தில் எம்ஜிஆராக கமல் / மோகன்லால்..?

பாரதிராஜா இயக்கும் ஜெயா படத்தில் எம்ஜிஆராக கமல் / மோகன்லால்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal and mohan lalமறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறை படமாக்குவதாக ஏற்கனவே 2 தயாரிப்பாளர்கள் அறிவித்து இருந்தனர். இப்போது இன்னொரு தயாரிப்பாளரும் களத்தில் இறங்கி உள்ளார். முதலில்

ஜெயல்லிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்க போவதாக விஜய் அறிவித்தார்.

இந்த படத்தை விஷ்ணுவர்தன் இந்தூரி தயாரிப்பதாக கூறப்பட்டது.

இவர் என்.டி.ராமராவ் வாழ்க்கை கதையையும் படமாக்கி வருகிறார். இந்திய கிரிக்கெட் அணி 1983-ம் ஆண்டு உலக கிரிக்கெட் கோப்பையை வென்றதை மையமாக வைத்து 83 வேல்டு கப் என்ற படத்தையும் தயாரிக்கிறார்.

ஜெயலலிதா வாழ்க்கை கதை படப்பிடிப்பு அவரது பிறந்த நாளான பிப்ரவரி 24-ந் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இவரை அடுத்து ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கப்போவதாக பெண் இயக்குனர் பிரியதர்ஷினியும் அறிவித்தார். இவர் டைரக்டர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

தற்போது வரலட்சுமியின் சக்தி என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இவர்களை அடுத்து 3வதாக பிரபல டைரக்டர் பாரதிராஜா அவர்களும் ஜெயலலிதா வாழ்க்கையை இயக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்த படத்தை மும்பையை சேர்ந்த ஆதித்யா பரத்வாஜ் தயாரிக்கிறாராம்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “ஜெயலலிதா வாழ்க்கையை பாரதிராஜா இயக்கத்தில் படமாக்க ஒரு வருடத்துக்கு முன்பிருந்தே திரைக்கதையை உருவாக்கி வருகிறோம்.

இதற்கு தற்காலிகமாக புரட்சித்தலைவி என்று தலைப்பு வைத்துள்ளோம். அந்த தலைப்போடு அம்மா என்ற பெயரையும் சேர்க்கும்படி சிலர் கூறியுள்ளனர்.

இளையராஜாவிடம் இசையமைக்க பேசி உள்ளோம். ஜெயலலிதா வேடத்துக்கு ஐஸ்வர்யாராய், அனுஷ்கா ஆகியோரில் ஒருவரை பரிசீலிக்கிறோம்.

எம்.ஜி.ஆர் வேடத்துக்கு கமல்ஹாசன், மோகன்லால் ஆகியோரிடம் பேசி வருகிறோம்” என்றார்.

இது ஒரு புறமிருக்க மற்ற ஜெயலலிதா வேடத்தில் நடிக்க பலத்து போட்டி உருவாகியுள்ளதாம்.

நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, வித்யாபாலன் ஆகியோரின் பெயர்கள் முன்னிலையில் உள்ளது எனவும் தகவல்கள் கூறுகின்றன.

மீண்டும் இணையும் வாய்ப்பை ரஜினியால் பெற்ற சிம்ரன்-த்ரிஷா

மீண்டும் இணையும் வாய்ப்பை ரஜினியால் பெற்ற சிம்ரன்-த்ரிஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simran and trishaஎந்திரன் படத்திற்கு பிறகு மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க, அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தை மிகவும் கட்டு கோப்பாக எந்த ஒரு தகவலும் கசியாமல் வட இந்தியாவில் படமாக்கி வருகிறார் டைரக்டர்.

இந்த படத்தில் ரஜினியுடன் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், நவாசுதீன் சித்திக், மேகா ஆகாஷ், முனிஷ் காந்த், சனத் ரெட்டி, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

லேட்டஸ்ட்டாக த்ரிஷாவும் இந்த படத்தில் இணைந்துள்ளார் என்பதை அறிவித்து விட்டனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளாக சிம்ரன், த்ரிஷா முன்பே வலம் வந்தாலும் அவர்கள் தற்போதுதான் ரஜினி படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

இதற்கு முன்பு அதாவது 18 வருடங்களுக்கு முன்பு ஜோடி என்ற படத்தில் பிரசாந்துடன் சிம்ரன், த்ரிஷா இணைந்து நடித்திருந்தனர்.

நாயகியாக ஆவதற்கு முன்பு இந்த படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்திருந்தார் த்ரிஷா.

தற்போது இவர்கள் மீண்டும் இணையும் வாய்ப்பை ரஜினி பெற்று தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காமிக்ஸ் புத்தகத்தில் சிவகார்த்திகேயன்; பெருமை தேடித்தரும் பொன்ராம்

காமிக்ஸ் புத்தகத்தில் சிவகார்த்திகேயன்; பெருமை தேடித்தரும் பொன்ராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan and ponramதமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணியில் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் பொன்ராம் கூட்டணியை தவிர்க்க முடியாது.

இவர்கள் இணைந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் ஆகிய இரண்டும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

தற்போது 3வது படமாக சீமராஜா உருவாகியுள்ளது.

இந்த படம் வருகிற செப்டம்பர் 13ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகிறது.

இந்நிலையில் மெகா ஹிட்டான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் கதையை காமிக்ஸ் புத்தகமாக எழுதப்போகிறாராம் டைரக்டர் பொன்ராம்.

இது இன்றைய இளம் நடிகர்களில் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய பெருமை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

Director ponram to write comics book based on sivakarthikeyan’s varuthapadatha valibar sangam movie .

More Articles
Follows