அல்வா கொடுத்த விஸ்வாச விநியோகஸ்தர்.; திருப்பூர் சுப்ரமணியம் உடைத்த ரகசியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தாண்டு தொடக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்துடன் அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படத்தையும் மோத விட்டனர்.

இந்த இரு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

இதில் விஸ்வாசம் படத்தை சத்யஜோதி தயாரிக்க, கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் விநியோகம் செய்திருந்தது.

எனவே பேட்ட படத்தை விட விஸ்வாசம் பட அதிக வசூல் என ட்விட்டர் வட்டாரத்தில் பரபரப்பாக வதந்திகளை பரப்பினர். இதற்காகவே சில லட்சங்களையும் செலவு செய்தனர்.

உடனே ரஜினியை முந்திவிட்டார் அஜித் என ட்விட்டர் குருவிகளும் கூவத் தொடங்கியது.

இந்த நிலையில் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் ஒரு இணையத்தள பேட்டியில் விஸ்வாசம் வசூல் வதந்தியை உடைத்துள்ளார்.

அஜித் ரசிகர்கள் வேண்டுமென கேட்க, அப்படியொரு வதந்தியை பரப்பினார்களாம்.

அதாவது விஸ்வாசம் படம் ரூ. 150 கோடி வசூல் என கூறிவிட்டு ரூ.80 கோடியை தான் தயாரிப்பாளர்களிடம் கொடுத்தார்களாம்.

இந்த நிலையில் மீண்டும் வேறு வழியில்லாமல் இப்படத்தை விநியோகம் செய்த கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தற்போது புதிய ட்விட்டை போட்டுள்ளது.

அதாவது பொங்கலுக்கு திரையிடப்பட்டு தீபாவளி வரை நாம் இதை பேசிக்கொண்டிருக்கிறோம் எனினும் எத்தனை தீபாவளி வந்தாலும் விஸ்வாசம் திரைப்படத்தின் சாதனை மறந்துவிடவோ மறைத்து விடவோ முடியாது. என பதிவிட்டுள்ளனர்.

சரி விடுங்கப்பா.. வாய் வலிக்கிற வரை கத்தட்டும்.

பா. ரஞ்சித்துடன் இணையும் ஆர்யா-தினேஷ்-கலையரசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியின் கபாலி, காலா படங்களை இயக்கிய ரஞ்சித் தற்போது இந்தியில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

தமிழில் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் மூன்று கதாநாயகர்களை ஒரு படத்தில் இயக்கவுள்ளாராம்.

இதில் ஆர்யாவுடன், நடிகர் தினேஷ் மற்றும் கலையரசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

பாக்ஸிங்கை மையப்படுத்தி உருவாகும் இபபடத்தை ஸ்ரேயா ஸ்ரீ மூவி நிறுவனம் தயாரிக்கிறது.

கமல் & ரகுல் பிரித்தி சிங் நடிக்கும் காட்சிகளை படமாக்கும் ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தை விறுவிறுப்பாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இயக்கி வருகிறார் ஷங்கர்.

இதில் கமலுடன் பாபி சிம்ஹா, சித்தார்த், விவேக், பிரியா பாவனி சங்கர், காஜல் அவர்வால், வித்யூ ஜமால் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருட் செலவில் தயாரிக்கிறது.

இந்த நிலையில் சென்னை-பெங்களூர் சாலையில் உள்ள ஈவிபி பூங்காவிலும் மற்றும் தி.நகரிலும் இப்பட காட்சிளை படமாக்கியுள்ளார் ஷங்கர்.

இதில் கமலுடன் ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டதாம்.

இந்தியாவில் சில காட்சிகளை படமாக்கிவிட்டு இதன் அடுத்த கட்ட படப்பிடிப்புகாக வெளிநாடுகளுக்கு செல்லவிருக்கிறார் இந்த இந்தியன் தாத்தா.

ரஜினியை அடுத்து மோகன்லாலுக்கு ஜோடியாகும் த்ரிஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா ஆகியோருடன் நடித்து விட்டாலும் ரஜினியுடன் நடிக்கவில்லையே என ஏங்கி கிடந்தார் த்ரிஷா.

இந்தாண்டு வெளியான பேட்ட படத்தின் மூலம் அந்த ஏக்கம் தீர்ந்து விட்டது.

அதுபோல் தமிழ், தெலுங்கு சினிமாக்களில் நடித்துவிட்டாலும் மலையாளத்தில் நடிக்கவில்லையே என காத்திருந்தார்.

அதுவும் கடந்த வருடம் வெளியான ஹே ஜூடு என்கிற படத்தில் நடித்ததன் மூலம் தீர்ந்தது.

தற்போது மீண்டும் ஒரு மலையாள படத்தில் நடிக்கிறார்.

அதில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

தற்போது கார்த்தி, ஜோதிகா நடித்து வரும் படத்தை இயக்கும் ஜீத்து ஜோசப் தான் மோகன்லால் & த்ரிஷா இணையும் படத்தை இயக்கவுள்ளார்.

அருண் விஜய்யை மீண்டும் போலீசாக்கும் ஜி.என்.ஆர்.குமரவேலன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித்துடன் நடித்த என்னை அறிந்தால் படம் அருண்விஜய்க்கு ரீ எண்ட்ரி என்றே சொல்லலாம்

அதன்பின்னர் அவர் நடித்த படங்கள் அனைத்தும் விமர்சனம் மற்றும் வர்த்தக ரீதியாக பாராட்டுக்களை பெற்று வருகிறது.

குற்றம் 23, தடம், செக்கச் சிவந்த வானம் உள்ளிட்ட படங்களை இதற்கு சாட்சியாக சொல்லலாம்.

அண்மையில் வெளியான சாஹோ படமும் இவருக்கு நல்ல பெயரை தந்துள்ளது.

தற்போது பாக்ஸர், மாஃபியா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அடுத்த்தாக ஹரிதாஸ் படத்தை இயக்கிய ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கும் கிரைம் திரில்லர் படத்தில் நடிக்க போகிறாராம்.

அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஏற்கெனவே குற்றம் 23 படத்திலும் இதே வேடத்தில் நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

மீண்டும் ரஜினியை இயக்கும் முருகதாஸ்; விஸ்வாசம் சிவா என்னாச்சு?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த், நயன்தாரா, யோகிபாபு நடித்து வரும் தர்பார் படத்தை இயக்கி வருகிறார் ஏஆர். முருகதாஸ்.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதன் டிரைலர் மற்றும் பாடல்கள் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளதாக கூறப்படும் நிலையில் அடுத்த வருடம் 2020 பொங்கலுக்கு படத்தை வெளியிட உள்ளனர்.

இப்படத்தை முடித்துவிட்டு மற்றொரு படத்தை அறிவிக்க இருக்கிறாராம் ரஜினி.

இப்படத்தை சிவா இயக்கவுள்ளதாகவும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் ஏற்கெனவே செய்திகள் வெளியிட்டு இருந்தோம்.

இந்த நிலையில் சூர்யா நடிக்கவுள்ள படத்தை சிவா இயக்கவிருப்பதால் அவரால் உடனடியாக ரஜினி படத்தை இயக்க முடியாத சூழ்நிலை உள்ளதாம்.

எனவே சிவாவுக்கு பதிலாக மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

அதுபோல் அட்லியிடம் ரஜினி ஒரு கதை கேட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Again AR Murugadoss going to direct Rajini for Sun pictures

More Articles
Follows