மாஸ் என சொல்லப்பட்ட ‘மாஸ்டர்’ படம் லாஸ்..; அமேசான் ரிலீஸ் காரணம் இதுதானா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகமெங்கும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் போதே விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் (ஜனவரி 29-ம் தேதி) அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாகவுள்ளது.

மாஸ்டர் படம் 140 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

உலகமெங்கும் இருக்கும் ரசிகர்கள் மாஸ்டரை அமேசான் ப்ரைமில் பார்க்க முடியும் என்பது மகிழ்ச்சி என அமேசான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார் விஜய்.

தியேட்டரில் ரிலீஸ் செய்ய வாய்ப்பு கிடைக்காத பகுதிகளில் இருக்கும் ரசிகர்கள் மாஸ்டரை பார்க்க முடியும்” எனவும் தெரிவித்துள்ளார் இயக்குநர் லோகேஷ்.

இந்த படம் வெளியான 10 நாட்களில் வசூல் 200 கோடி ரூபாயை கடந்து விட்டது என கூறப்படுகிறது.

ஒருவேளை படம் வசூல் வேட்டை செய்வது உண்மை என்றால் 16 நாட்களில் ஓடிடியில் ரிலீஸ் செய்ய என்ன காரணம்?

திரையரங்கு உரிமையாளர்கள் முறையாக வசூல் கணக்கை காட்டாமல் தில்லு முல்லு செய்திருப்பதால் ஏற்பட்ட இழப்பே காரணம் எனவும் சொல்லப்படுகிறது.

தியேட்டர்களில் (அரசுக்கு தெரியாமல்) முறைகேடாக 100% இருக்கைகள் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் திரையரங்கு நிர்வாகத்தினரோ 50% மட்டுமே ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டதாக கூறி தயாரிப்பாளருக்கு கணக்கு காட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் தியேட்டரிலேயே 500, 800, 1000 ரூபாய் வரை டிக்கெட் விற்ற நிலையில் தயாரிப்பாளருக்கு சாதாரண டிக்கெட் கட்டணம் மட்டுமே கணக்கு காட்டப்பட்டுள்ளதாம்.

அதன்படி மாஸ்டர் தயாரிப்பாளருக்கு வரவேண்டிய பங்கு தொகையில் ரூ 50 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போது வரை திரையரங்கு பங்கு தொகை 65 கோடி ரூபாய் மட்டுமே என்று கூறப்படுகிறது.

அமேசானில் ஓடிடி வெளியாவதால் மாஸ்டர் தயாரிப்பாளருக்கு கூடுதலாக 20 கோடி ரூபாய் வரை கிடைக்கும் எனவும் தெரிகிறது.

Reason behind Master OTT release quickly

‘பத்து தல’ சிலம்பரசனுக்கு வில்லனாகும் கௌதம் மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில்லுனு ஒரு காதல் பட இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் முஃப்தி ரீமேக் தமிழில் உருவாகி வருகிறது.

ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார்

‘பத்து தல’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், டீஜே அருணாச்சலம், மனுஷ்யபுத்திரன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்பட பர்ஸ்ட் லுக் செம வைரலாகி அனைத்து தரப்பு மக்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இப்பட வில்லன் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

‘பத்து தல’ திரைப்படத்தில் சிம்புவுக்கு வில்லனாக கவுதம் மேனன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்து அசத்தியிருந்த கவுதம் மேனன் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது..

சிம்பு – கவுதம் மேனன் கூட்டணியில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Gautham Menon plays baddie in STR’s film

‘அண்ணாத்த’ படத்தை முடித்துவிட்டு ‘ராணா’வை கையில் எடுக்கும் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ படத்தின் தமிழ் ரீமேக்கை தயாரிக்கிறார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.

தர்ஷன், லாஸ்லியா, யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்திற்கு ‘கூகுள் குட்டப்பன்’ என்று பெயரிடப்பட்டடுள்ளது.

இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.

அப்போது கே.எஸ்.ரவிக்குமாரிடம் மீண்டும் எப்போது ரஜினியுடன் படம் பண்ணுவீர்கள்? என செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த KSR.. “மாதம் ஒருமுறையாவது ரஜினியுடன் நட்பு ரீதியாக பேசி வருகிறேன்.

சமீபத்தில் ‘ராணா’ படத்தின் கதையை மீண்டும் ஒரு முறை சொல்லுங்கள் என கேட்டார்.

நானும் சொல்லிவிட்டு வந்தேன். மிகவும் நல்ல கதை என்று பாராட்டிவிட்டு இப்போது இருக்கும் உடல்நிலையில் என்னால் அதை செய்ய முடியாது. விரைவில் செய்யலாம் என்று ரஜினி சொல்லி இருக்கிறார்” என்றார் கே.எஸ்.ரவிக்குமார்.

KS Ravikumar about Rajinikanth’s Raana

சிலம்பரசன் படத்தை தொடர்ந்து நாவலை படமாக்கும் சுரேஷ் காமாட்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’, ‘மிக மிக அவசரம்’ ஆகிய படங்களைத் தயாரித்தவர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி..

இதில் ‘மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்ததுடன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகவும் வெற்றி பெற்றார்..

இந்த நிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் TR நடிக்கும் ‘மாநாடு’ என்கிற படத்தைத் தயாரித்து வருகிறார் சுரேஷ் காமாட்சி.

அரசியல் கதைக்கள பின்னணியில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது..

இதைத் தொடர்ந்து தனது தயாரிப்பில் உருவாக இருக்கும் படத்தை தானே இயக்கவுள்ளார் சுரேஷ் காமாட்சி.

ஒரு இளம் பெண் காவலர் தனது பணியில் அன்றாடம் சந்திக்கும் அவலங்களை நெற்றிப்பொட்டில் அறைந்தது போல ‘மிக மிக அவசரம்’ படத்தை இயக்கிய, சுரேஷ் காமாட்சி, தனது அடுத்த படத்திலும் அதேபோன்ற யதார்த்த வாழ்வியல் ஒன்றையே படமாக்க இருக்கிறார்.

கிராமத்துப் பின்னணியில், வெள்ளந்தி மனிதர்களின் வாழ்வியலை மையமாக வைத்து, உணர்வுப்பூர்வமான கதைகளை எழுதிவருபவர் பிரபல எழுத்தாளர் ம. காமுத்துரை. இவர் எழுதிய ‘முற்றாத இரவொன்றில்’ என்கிற நாவலை தழுவி இப்படம் உருவாக இருக்கிறது.

இந் நாவலைப் படமாக்கும் உரிமையை மா.காமுத்துரையிடம் இருந்து முறைப்படி பெற்றுள்ளார் சுரேஷ் காமட்சி..விரைவில் தொழில் நுட்பக் கலைஞர்கள் விபரம் தெரிவிக்கப்படும்.

Maanaadu producer Suresh Kamatchi next film announced

ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌சன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இயக்குனர் பா.இரஞ்சித் தான் இயக்கும் படங்கள் மட்டுமல்லாமல் தனது நீலம் புரொடக்சன்ஸ் மூலம் காலம் கடந்து பேசப்படும் படங்களையும் வழங்கியுள்ளார்.

அந்த வகையில் அவரது தயாரிப்பில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு’ ஆகிய திரைப்படங்கள் விமர்சன மற்றும் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்தது.

இந்த வெற்றியைத்தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌சன்ஸ் நிறுவனம், கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து புதிதாக ஐந்து திரைப்படங்களை தயாரிக்க உள்ளதாக, கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி அறிவித்திருந்தார்.

இதில் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ், ‘மேற்கு தொடர்ச்சி மலை’ திரைப்படத்தின் இயக்குனர் லெனின் பாரதி, மற்றும் அறிமுக இயக்குனர்கள் சுரேஷ் மாரி, அகிரன் மோசஸ், பிராங்க்ளின் ஆகிய ஐந்து இயக்குனர்களும் புதிதாக தயாரிக்க உள்ள ஐந்து திரைப்படங்களையும் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இயக்குனர் பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் ’ரைட்டர்’ என்ற படத்தில் சமுத்திரகனி நடிப்பில் அதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நீலம் புரொடக்‌சன்ஸ் நிறுவனம், கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க உள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

Maari Selvaraj and Dhruv Vikram joins for new film

குடியரசு தினத்தில் செங்கோட்டையில் வன்முறை..; விவசாய சங்க தலைவருக்கு போலீஸ் நோட்டீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தில் செங்கோட்டையில் நடைபெற்ற வன்முறையில், விவசாய சங்க தலைவர்களுக்கு பங்கு உள்ளதாக, டெல்லி காவல்துறை நேற்று அறிவித்தது.

இதில் போராட்டத்திற்கு தலைமை தாங்குபவர்களில் ஒருவரும், கிரந்திகாரி விவசாய சங்க தலைவருமான தர்ஷன் பாலிற்கு, மூன்று நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

செங்கோட்டையில் நடைபெற்ற வன்முறை இழிவான மற்றும் தேச விரோத செயல் எனவும், அதுதொடர்பாக உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மேலும், தங்கள் அமைப்பில் இருந்து வன்முறையில் ஈடுபட்டவர்களின் விவரங்களை சமர்பிக்க தர்ஷன் பாலிற்கு காவல்துறை கேட்டுக்கொண்டது.

Police issued notice to farmers head due to violence at red fort

More Articles
Follows