தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இதில் டத்தோ ராதாரவி, மயில்சாமி, சிநேகன், எஸ்வி. சேகர், தயாரிப்பாளர் கே. ராஜன் உள்ளிட்டவர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.
இதில் கலந்துக் கொண்ட மிஸ்டர் இந்தியா ராஜேந்திரன் சங்கத்தை வாழ்த்தி பேசினார்.
எம். ராஜேந்திரன் பேசியதாவது…
ஐசரி தான் என்னை முதன்முதலில் சினிமாவுக்கு அழைத்து வந்தார். அப்போது டில்லியில் இருந்த எம்.ஜி.ஆரை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
முதன்முறையாக ஐசரி தலைமையில் தான் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 3 மாதத்தில் நடந்த தேர்தலில் ராதாரவி வெற்றி பெற்றார்.
தன்னை எதிர்த்து தோல்வி அடைந்த ஐசரியை தனது காரில் ஏற்றிச் சென்ற பண்பை கொண்டவர் ராதாரவி. அவரை நடிகர் சங்கத்திலிருந்து இடைநீக்கம் செய்தது கண்டிக்கத்தக்கது.
சங்கத்து வரலாற்றைப் பற்றி தெரியுமா? விஜயகாந்த் இருந்த வரை நன்றாக இருந்தது. சரத்குமார் தலைவராக இருந்தபோது நிதி உதவி கேட்டு வரும் கடிதங்களை படித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை அனைவரும் அவரவர் பங்குக்கு செய்திருக்கிறோம்.
சங்கத்தை சரத்குமாரும், ராதாரவியும் கட்டிக் காப்பாற்றினார்கள். உறுப்பினர்களில் யாராவது இறந்துவிட்டால் இறுதி வரை உடனிருப்பார்கள்.
ஆனால் இப்போது அப்படியில்லை. 4 முறை வைத்துக் கல்லையே வைக்கிறார்கள். சங்கத்து உறுப்பினர்கள் தவறு செய்தால் நிரந்தரமாக நீக்காமல் அவர்கள் தவறை உணரும் வகையில் இடைநீக்கம் செய்யலாம். S.V. சேகர் தனக்கு சரியென்று பட்டதை கூறிவிடுவார்.
புதுமுக நடிகர்கள் வேலையில்லாமல் துன்பப்படுகிறார்கள். ஒரு நாளுக்கு 500, 1,000 கிடைத்தால் அவர்களின் அன்றாட தேவைகள் பூர்த்தியாகும். அடுத்த வருடம் எங்கள் கூட்டணி தான் வெற்றி பெறும்.
நாங்கள் நடிக்கும் கறுப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தில் வரும் சம்பளத்தை நடிகர் சங்கத்திற்கு கட்டிடத்திற்கு கொடுப்போம் என விஷாலும், கார்த்தியும் கூறினார்கள்.
ஆனால் படத்தில் தங்கள் கேரக்டர் சரியில்லை என்று இப்போது சூட்டிங்கையே நிறுத்திவிட்டார்கள்.” என்று எம்.ராஜேந்திரன் பேசினார்.