கருப்பு ராஜா வெள்ளை ராஜா சூட்டிங் நிறுத்தத்திற்கு விஷால்-கார்த்திதான் காரணமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்நாடு புதுமுக நடிகர்கள் சங்கம் உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் டத்தோ ராதாரவி, மயில்சாமி, சிநேகன், எஸ்வி. சேகர், தயாரிப்பாளர் கே. ராஜன் உள்ளிட்டவர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

இதில் கலந்துக் கொண்ட மிஸ்டர் இந்தியா ராஜேந்திரன் சங்கத்தை வாழ்த்தி பேசினார்.

எம். ராஜேந்திரன் பேசியதாவது…

ஐசரி தான் என்னை முதன்முதலில் சினிமாவுக்கு அழைத்து வந்தார். அப்போது டில்லியில் இருந்த எம்.ஜி.ஆரை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

முதன்முறையாக ஐசரி தலைமையில் தான் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 3 மாதத்தில் நடந்த தேர்தலில் ராதாரவி வெற்றி பெற்றார்.

தன்னை எதிர்த்து தோல்வி அடைந்த ஐசரியை தனது காரில் ஏற்றிச் சென்ற பண்பை கொண்டவர் ராதாரவி. அவரை நடிகர் சங்கத்திலிருந்து இடைநீக்கம் செய்தது கண்டிக்கத்தக்கது.

சங்கத்து வரலாற்றைப் பற்றி தெரியுமா? விஜயகாந்த் இருந்த வரை நன்றாக இருந்தது. சரத்குமார் தலைவராக இருந்தபோது நிதி உதவி கேட்டு வரும் கடிதங்களை படித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை அனைவரும் அவரவர் பங்குக்கு செய்திருக்கிறோம்.

சங்கத்தை சரத்குமாரும், ராதாரவியும் கட்டிக் காப்பாற்றினார்கள். உறுப்பினர்களில் யாராவது இறந்துவிட்டால் இறுதி வரை உடனிருப்பார்கள்.

ஆனால் இப்போது அப்படியில்லை. 4 முறை வைத்துக் கல்லையே வைக்கிறார்கள். சங்கத்து உறுப்பினர்கள் தவறு செய்தால் நிரந்தரமாக நீக்காமல் அவர்கள் தவறை உணரும் வகையில் இடைநீக்கம் செய்யலாம். S.V. சேகர் தனக்கு சரியென்று பட்டதை கூறிவிடுவார்.

புதுமுக நடிகர்கள் வேலையில்லாமல் துன்பப்படுகிறார்கள். ஒரு நாளுக்கு 500, 1,000 கிடைத்தால் அவர்களின் அன்றாட தேவைகள் பூர்த்தியாகும். அடுத்த வருடம் எங்கள் கூட்டணி தான் வெற்றி பெறும்.

நாங்கள் நடிக்கும் கறுப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தில் வரும் சம்பளத்தை நடிகர் சங்கத்திற்கு கட்டிடத்திற்கு கொடுப்போம் என விஷாலும், கார்த்தியும் கூறினார்கள்.

ஆனால் படத்தில் தங்கள் கேரக்டர் சரியில்லை என்று இப்போது சூட்டிங்கையே நிறுத்திவிட்டார்கள்.” என்று எம்.ராஜேந்திரன் பேசினார்.

தமிழக ரசிகர்களை மிரளவைக்கும் கேரளா விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் அட்லி இயக்கியுள்ள மெர்சல் திரைப்படம் நாளை மறுநாள் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

இப்படத்திற்கு தமிழகத்தில் மட்டுமல்லாது கேரளாவிலும் நல்ல எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே கேரளாவில் விஜய்யின் மார்கெட் அதிகளவில் உயர்ந்து வருகிறது.

கேரளா திரையுலகினரே ஆச்சரியப்படும் வகையில் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் கேரளாவில் உள்ள விஜய்யின் ஆண்கள் மற்றும் பெண் ரசிகர்கள், பொது இடத்தில் மெர்சல் கட் அவுட்களை வைத்து விஜய்யின் பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளனர்.

அந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இவர்களை விட்டால் நம்மளையே மிஞ்சிவிடுவார்களே என தமிழக விஜய் ரசிகர்கள் ஆச்சயர்த்துடன் பார்த்து வருகிறார்களாம்.

கமல்-ஷங்கர் இணையும் இந்தியன் 2 கைவிடப்பட்டதா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியன் படம் வெற்றிப் பெற்றதையடுத்து அதன் இரண்டாம் பாகத்திற்காக மீண்டும் கமல் ஷங்கர் இணையவுள்ளனர் என்பதை பார்த்தோம்.

இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளார்.

இந்நிலையில் இப்படம் கைவிடப்பட்டதாக செய்திகள் வந்தன.

ஆனால் தயாரிப்பு நிறுவனம் இந்த வதந்திகளை மறுத்துள்ளது.

மெர்சலை திரையிட மாட்டோம்; தியேட்டர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய், அட்லி, ஏஆர். ரகுமான் கூட்டணியில் உருவாகியுள்ள மெர்சல் திரைப்படம் நாளை மறுநாள் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் இந்த தீபாவளியை மெர்சலாக்கி விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபலமான காசி தியேட்டரிலும் இப்படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

இங்கு ரிலீஸ் அன்று முதல் நாள் வந்து ரசிகர்களின் பல்ஸ் பார்க்கும் வழக்கம் திரைத் துறையினருக்கு உள்ளது.

ஆனால் படத்தயாரிப்பு விதித்துள்ள சில நிபந்தனைகளை ஏற்க மறுத்த தியேட்டர் நிர்வாகம் இப்படத்தை திரையிட மறுத்துவிட்டதாம்.

இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Mersal will not be screened at Chennai Kasi theater

சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தலைப்பில் டாப் ஸ்டார் பிரசாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2016ல் வெளியான சாகசம் படத்திற்கு பிறகு பிரசாந்த் நடிப்பில் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் தன் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பிரசாந்த்.

வெற்றிச் செல்வன் இயக்கும் இப்படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரித்து வருகிறார்.

இது தொடர்பான சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற உள்ளது.

இப்படத்தில் பிரசாந்துடன் நடித்துள்ள சஞ்சிதா செட்டி, பிரபு, ஆனந்த்ராஜ் சயாஜி ஷிண்டே, கலைராணி, தேவதர்ஷினி உள்ளிட்டவர்கள் இதில் கலந்துக் கொள்வார்கள் என கூறப்படுகிறது.

இப்படத்திற்கு ஜானி என பெயரிட்டுள்ளனர்.

இதே பெயரில் மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி, ஸ்ரீதேவி நடித்த ஜானி படம் கடந்த 1980 வெளியானது குறிப்பிடத்தக்கது.

Actor Prashanth in Rajini movie title Johnny

மெர்சலுக்காக விலங்குகள் நலவாரிய நடைமுறை மாற்றப்படுமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் படம் நாளை மறுநாள் தீபாவளி வெளியீடாக வருகிறது.

இப்படம் தலைப்பு வழக்கு உள்ளிட்ட பல பிரச்சினைகளை கடந்து திரைக்கு வரவுள்ளது.

ஆனால் இப்படத்தில் விலங்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் அந்த பிரச்சினையில் விலங்குகள் நலவாரியத்தின் சான்றிதழ் கிடைக்காமல் உள்ளதாம்.

இந்நிலையில் நேற்று முதல்வர் எடப்பாடியை சந்தித்த விஜய் இது குறித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.

பொதுவாக விலங்குகள் நலவாரியத்தின் சர்ட்டிபிகேட் புதன்கிழமைதான் வழங்கப்பட்டு வருகிறதாம்.

ஆனால் புதன்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாப்படுவதால் அதற்கு முன்பே சர்ட்டிபிகேட் பெற மெர்சல் படக்குழு முயற்சித்து வருவதாக சொல்லப்படுகிறது.

எனவே இதுகுறித்த அவரச கூட்டம் இன்று (அக். 16) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

Mersal movie Animal welfare department certificate issue

More Articles
Follows