சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிடும் ரவிக்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இன்று நேற்று நாளை படம் வசூல் வேட்டையாடியது.

இது வெளியாகி இன்றோடு மூன்றாண்டுகளை கடந்துள்ளது.

இதுகுறித்து பட இயக்குனர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது…

மூன்றாண்டுகளில் தமிழ்நிலப்பரப்பு தாங்கிவரும் அதிர்வுகளுக்கு காலப்பயணமே சாலச்சிறந்தது என்று தோன்றுகிறது! நிஜத்தில் அதற்கு வாய்ப்பில்லை.

நிச்சயம் நாளையை நமதாக்குவோம்! எனது அடுத்த திரைப்படத்தின் மகிழ்ச்சியான அறிவிப்பை நாளை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்!” என்று தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயனை வைத்து விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையை இயக்கவுள்ளார் ரவிக்குமார்.

24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்க, கருணாகரன் முக்கிய ரோலில் நடிக்கிறார்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளையும், முத்துராஜ் கலை பணிகளையும் மேற்கொள்ளவுள்ளனர்.

ஃபர்ஸ்ட் கிளாப் சீசன்2-வில் தேர்ந்தெடுக்கப்பட்ட குறும்படங்களை தியேட்டரில் பார்க்கலாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மூவிபஃப் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் என்ற இரண்டு நிறுவனங்களும் இணைந்து இரண்டாம் ஆண்டிற்கான ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 என்ற குறும் பட போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து குறும்படங்கள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.

இதற்கான விழா சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது. இதன் போது தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், கியூப் சினிமா நிறுவன தலைமை செயலதிகாரி அரவிந்த் ரங்கநாதன், தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து குறும்படங்களை இயக்கிய இயக்குநர்கள் மற்றும் அந்த ஐந்து குறும்படங்களில் பணியாற்றிய கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக மூவி பஃப் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது..

மூவி பஃப் பர்ஸ்ட் கிளாப் சீஸன் -2 வின் போட்டிகள் ஜனவரி மாதம் இருபதாம் தேதியன்று தொடங்கியது. இந்த போட்டியில் முதல் சீஸனை விட மும்மடங்கு அளவில் அதாவது 750க்கும் மேற்பட்ட படைப்பாளிகள் போட்டியாளர்களாக பங்குபெற்றனர்.

போட்டியில் கலந்து கொண்ட அனைத்து குறும்படங்களையும் தேர்வு குழுவினர் பார்வையிட்டனர். தேர்வு குழுவில் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரம்ஹாம்ச, இயக்குநர்கள் ராம் சுப்ரமணியன். விக்னேஷ் சிவன், கார்த்திக் நரேன், நித்திலன் சுவாமிநாதன், அருண் பிரபு, ஒலிப்பதிவு பொறியாளர் உதயகுமார், படத்தொகுப்பாளர் ரூபன், தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், விமர்சகர் சதீஷ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்த குழுவினர் ஐம்பது குறும்படங்களை முதல் கட்டமாகவும்,பிறகு அதிலிருந்து ஐந்து குறும்படங்களையும் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து குறும்படங்கள்

குக்கருக்கு விசில் போடு (இயக்கம் ஷியாம் சுந்தர்)

கல்கி (இயக்கம் விஷ்ணு எதவன்)

கம்பளிப்பூச்சி (இயக்கம் V.G. பாலசுப்ரமணியன்)

மயிர் (இயக்கம் லோகி)

பேரார்வம் (இயக்கம் சாரங்கு தியாகு)

இந்த ஐந்து படங்களையும் ஜுன் 29 ஆம் தேதி முதல் தமிழகத்தில் கியூப் சிஸ்டம் உள்ள 200 திரையரங்குகளில் ஐந்து வாரங்களுக்கு சுழற்சி முறையில் திரையிடப்படுகிறது. இதன் மூலம் இந்த ஐந்து குறும்படங்களையும் ஐம்பது லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பெரிய திரையில் கண்டு ரசிக்கும் வாய்ப்பு உருவாகிறது.

அத்துடன் நில்லாமல் இதனை கண்டு ரசிக்கும் மக்கள் தங்களுக்கு விருப்பமான குறும்படங்களை எஸ் எம் எஸ் முறையில் பதிவிட்டு வாக்களிக்கலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களை www.moviebuff.com என்ற இணைய தளத்தினை பார்வையிட்டு விளக்கம் பெறலாம்.

அதிக வாக்குகளை பெறும் குறும்படங்களை தேர்வு குழு பரிசீலனை செய்து முடிவுகளை அறிவிக்கும்.

முதல் பரிசு மூன்று லட்சம்

இரண்டாம் பரிசு இரண்டு லட்சம்

மூன்றாம் பரிசு ஒரு லட்சம்

இது தவிர தேர்வு பெற்ற இயக்குநர்கள் 2டி நிறுவனத்தில் கதைசொல்லும் வாய்ப்பும், ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பும் அளிக்கப்படும்.
என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து 2டி நிறுவனத்தை சார்ந்த தயாரிப்பாளர் ராஜசேகர் பேசும் போது, ‘இந்த குறும்பட போட்டியில் கலந்து கொண்டு தேர்வு பெற்ற ஐம்பது படைப்பாளிகளையும் நான் ஒரு முறை சந்தித்து கலந்துரையாடவிருக்கிறேன்.

தேர்தெடுக்கப்பட்ட இந்த ஐந்து இயக்குநர்களும் வெற்றிப் பெற வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

திறமையான படைப்பாளிகளை இனம் கண்டு அவர்களின் திறமைக்கேற்ப வாய்ப்புகளை உருவாக்கி தரும் இந்த அரிய முயற்சியை மூவி பஃப் தொடரவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இதற்கு பேருதவியாக இருந்த நாக் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கும், லிட்டில் ஷோஸ் நிறுவனத்திற்கும், மூவி பஃப் நிறுவனத்திற்கும் என்னுடைய நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்.’ என்றார்.

First clap Season 2 Short listed 5 films will be screened in Theatres

 

சுரேஷ் இயக்கத்தில் ஆண் விபச்சாரி(ரன்)களை பற்றிய படம் *போத*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெரும்பாலும் போதை என்றாலே சரக்கு அடித்துவிட்டு வரும் போதையை தான் பலரும் கூறுவார்கள்.

ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான போதை இருக்கும். சிலருக்கும் பெண்கள் மீது இருக்கும் போதை. சிலருக்கு பணம் மீது போதை இப்படி பல வகை உண்டு.

தற்போது பண போதையை மையப்படுத்தி போத என்ற பெயரில் ஒரு படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் போஸ்டர்களே இதன் மீதான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது எனலாம்.

அறிமுக இயக்குனர் சுரேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் விக்கி என்பவர் நாயகனாக நடித்துள்ளார்.

சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அப்போது பேசிய படக்குழுவினர் இப்படம் ஆண்கள் விபச்சாரத்தை பற்றிய படம் என தெரிவித்தனர்.

பெரும்பாலும் தமிழ் சினிமாவில் இது போன்ற படங்கள் வருவதில்லை. எனவே இதுதான் முதல்முறை எனலாம்.

ஆங்கிலத்தில் ஆண் விபச்சாரியை GIGOLOS என்பார்கள்.

Bodha aka Botha tamil movie based on GIGOLOS

லைகா தயாரிக்கும் சூர்யா 37 பட சூட்டிங்கை ஆரம்பித்தார் கே.வி.ஆனந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

`என்ஜிகே’ படத்தை முடித்துவிட்டு சூர்யா 37 படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.

கே.வி.ஆனந்த் இயக்கும் இப்படத்தில் சூர்யாவுடன் மோகன் லால், அல்லு சிரிஷ், சமுத்திரக்கனி, சாயிஷா, பொம்மன் இரானி நடிக்கின்றனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்திற்கு கேவ்மிக் யு அரி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். ஆண்டனி படத்தொகுப்பை கவனிக்கிறார்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரிக்கிறது.

இந்நிலையில் இதன் சூட்டிங்கை லண்டனில் நேற்று ஆரம்பித்துவிட்டார் கே.வி. ஆனந்த்.

நியூயார்க், பிரேசில், மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் இதன் சூட்டிங் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Suriya 37 movie shoot kickstarts in London

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் வாழ்ந்தவர் கௌதம்..- சதீஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனஞ்செயன் தயாரிப்பில் நவரச நாயகன் கார்த்திக் மற்றும் அவரது மகன் கௌதம் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் மிஸ்டர் சந்திரமௌலி.

திரு என்பவர் இயக்கியுள்ள இப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா, வரலட்சுமி, மைம் கோபி, சதீஷ், சந்தோஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படம் வருகிற ஜீலை 6ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது சதீஷ் பேசியதாவது…

இப்படத்திற்கு தனஞ்செயன் எல்லா விதத்திலும் புரோமோசன் செய்து வருகிறார்.

யாராவது செல்பி எடுக்க என்னருகே வந்தால் நான் மிஸ்டர் சந்திரமௌலி படத்தை பேச ஆரம்பித்து விடுகிறேன்.

எங்கள் எல்லாரையும் அப்படி டியூன் செய்து வைத்துவிட்டார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் வாழ்ந்துவிட்டார் கௌதம் கார்த்திக். அதுதான் அவருடைய உண்மையான கேரக்டர்.

நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம். பேய்க்கு பயப்படுவார். அதைதான் அப்படி சொன்னேன்.

இப்படம் வந்த பிறகு ரெஜினா ஆர்மி என ரசிகர்கள் ஆரம்பித்துவிடுவார்கள். இந்த படத்தில் அவரது உடைகளை பார்த்த பிறகு லோ பட்ஜெட் படம் என நினைக்க வேண்டாம். படம் பிரம்மாண்டமாக எடுத்துள்ளார் தனஞ்செயன்” என கலகலப்பாக பேசினார் சதீஷ்.

Gautham character in Iruttu Araiyil Murattu Kuththu is original says Sathish

தமிழகத்தின் கறையை துடைத்தெறியவே மக்கள் நீதி மய்யம் : கமல் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மக்கள் நீதி மய்யத்தின் “இது நம்மவர் படை” பாடல்களை அக்கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன் வெளியிட்டார்.

கவிஞர் சினேகனின் வரிகளுக்கு தாஜ்நூர் இசையமைத்துள்ளார்.

இந்த ஆல்பத்தில் 6 பாடல்கள் உள்ளது.

இந்த பாடல்கள் வெளியீட்டு விழாவில் கமல் பேசியதாவது…

“மக்கள் மகாத்மாக்களை பாராளுமன்றத்தில் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த பழைய கிணற்றில் தவளைகள் தான் இருக்கின்றது.

உங்கள் தெருக்களில், உங்களைச் சுற்றித் தேடுங்கள் மகாத்மா கிடைப்பார். அப்படி தனித்தனியாக இருக்கிற அவர்கள் எல்லோருமே மக்கள் நீதி மய்யம் தான். காரணம், நாங்கள் தொண்டர்களை உருவாக்க விரும்பவில்லை, தலைவர்களை உருவாக்க ஆசைப்படுகிறோம்.

இந்த தமிழகத்தின் கறை என்பது இன்றோ, நேற்றோ உண்டானதில்லை. அது அரை நூற்றாண்டு காலமாக உண்டாக்கப்பட்ட கறை.

அவை அனைத்தையும் துடைத்தெறியவே மக்கள் நீதி மய்யம் இருக்கிறது. அதைத் தாண்டி மேலும் 50 ஆண்டுகள் மக்கள் நீதி மய்யம் நிலைத்திருக்கும். ஏனெனில் அதற்கான விதை நாம் அனைவரும் சேர்ந்து போட்டது.” என்று பேசினார்.

Makkal Needhi Maiam party is to clean Tamilnadu says Kamalhassan

More Articles
Follows