தியேட்டரில் படம் பார்க்கும் யாரையும் *ராட்சசன்* ஏமாற்றாது… : ராம்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முண்டாசுப்பட்டி படத்தின் வெற்றியை தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு பிறகு ராம்குமார் இயக்கியுள்ள படம் ‘ராட்சசன்’.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தில் முதன்முறையாக
இபடத்தில் விஷ்ணு விஷால், அமலா பால் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் டைரக்டர் ராம்குமார் பேசியதாவது…

ராட்சசன் படத்தின் டீசர், டிரைலர் பார்த்து விட்டு எல்லோரும் சொன்ன கமெண்ட்ஸ் பார்த்து படத்தின் மீதான நம்பிக்கை அதிகரித்திருக்கிறது.

முண்டாசுப்பட்டி படத்துக்கு பிறகு இந்த கதையை கிட்டத்தட்ட 20 தயாரிப்பாளர்கள் மற்றும் 17 ஹீரோக்களிடம் சொல்லி விட்டேன்.

சீரியஸ் படம் என்ற உடனே அவர்கள் யோசித்து சொல்கிறேன் என சொல்லி விட்டார்கள். ஆனால் டில்லி பாபு சார் தான் என் மீது முழு நம்பிக்கை வைத்து இந்த படத்தை தயாரிக்க முன் வந்தார்.

விஷ்ணு என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். படத்தை பார்க்கும்போது இந்த குழுவின் உழைப்பை நீங்கள் உணர்வீர்கள். ராதாரவி, நிழல்கள் ரவி சார் ஆகியோரின் குரலுக்காகவே இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறோம்.

அமலா பால் ரீ-டேக் வாங்கவே மாட்டார். அவருக்கு காட்சிகள் குறைவு என்றார்கள், ஆனால் அழுத்தமான கதாபத்திரமாக இருக்கும்.

காளி வெங்கட், ராமதாஸ் இருவருமே நல்ல நடிகர்கள். இந்த படத்தின் வெற்றியில் இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு பாதி பங்கு உண்டு, பின்னணி இசை மிகச்சிறப்பாக வந்திருக்கிறது.

மனதளவிலும், உடலளவிலும் சோர்ந்து போனாலும் எனக்கு சிறந்த பங்களிப்பையே செய்தார் எடிட்டர் ஷான் லோகேஷ். பிவி சங்கர் ஒளிப்பதிவு மிகவும் பேசப்படும். இந்த படம் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தார் அருண்ராஜா காமராஜ்.

திரையரங்கில் போய் பார்க்கும் யாரையும் இந்த படம் ஏமாற்றாது என்றார் இயக்குனர் ராம்குமார்.

இந்த விழாவில் நடிகர் காளி வெங்கட், படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ், கலை இயக்குனர் கோபி ஆனந்த், ஒளிப்பதிவாளர் பிவி சங்கர் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

Ratsasan will not cheat any audience says Director Ramkumar

ரூ. 80 கோடி சொத்தை ஏழுமலையானுக்கு எழுதிய *அர்ஜுன் ரெட்டி* நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1960 மற்றும் 70 -களில் தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் 150–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்தார் நடிகை காஞ்சனா.

இப்போது அவருக்கு 80 வயதாகிறது.

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு பாட்டியாகவும் நடித்து இருந்தார்.

இந்நிலையில் தனது சினிமா வாழ்க்கையை பற்றி அவர் கூறியுள்ளதாவது…

‘‘நான் சினிமாவுக்கு வருவதற்கு முன் ஏர் ஹோஸ்ட்டராக இருந்தேன். பின்னர்தான் காதலிக்க நேரமில்லை படத்தில் என் பெயரை காஞ்சனா என மாற்றி நாயகியாக்கினார் ஸ்ரீதர்.

அதன்பின்னர் நிறைய மொழிகளில் 46 ஆண்டுகள் ஓய்வே இல்லாமல் தொடர்ந்து நடித்தேன்.

எனக்கு திருமணம் செய்து வைப்பதைக்கூட பெற்றோர்கள் மறந்துவிட்டனர். எனவே நானும் திருமணம் செய்துகொள்ளாமலேயே இருந்துவிட்டேன்.

நான் சம்பாதித்த பணத்தில் சென்னை தி.நகரில் சொத்துக்கள் வாங்கினேன். ஆனால் எனது உறவினர்கள் அந்த சொத்துக்களை அபகரித்துக் கொண்டனர்.

எனவே அவற்றை மீட்க கோர்ட்டு வழக்கு என பல வருடங்கள் போராடி அலைந்தேன்.

சொத்துக்கள் மீண்டும் கிடைத்தால் திருப்பதி வெங்கடாஜலபதிக்கு எழுதிவைப்பதாக அப்போது வேண்டிக்கொண்டேன்.

தற்போது என் வேண்டுதலின்படி சொத்துக்கள் கிடைத்துவிட்டன.

உடனே ரூ.80 கோடி மதிப்புள்ள சொத்துக்களை ஏழுமலையானுக்கு எழுதி வைத்துவிட்டேன்.

நான் வருமானம் இல்லாமல் கஷ்டப்படுவதாக சில தினங்களாக செய்திகள் வெளியானது. எனது தங்கை என்னை நன்றாக கவனித்துக்கொள்கிறார்.

இன்னொரு மனித பிறவி வேண்டாம் என்று கடவுளிடம் வேண்டியிருக்கிறேன்.’’ இவ்வாறு காஞ்சனா கூறினார்.

Famous actress Kanchana wrote her 80 Crores property to Lord Balaji

பாடல் எழுதி பாடி நடித்து அசத்திய *ஹானஸ்ட்லி* ஆண்ட்ரியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல நடிகையும் பின்னணி பாடகியுமான ஆண்ட்ரியாவின் (Honestly) “ஹானஸ்ட்லி” ஆல்பம் சாங் கடந்த வாரம் வெளியானது.

இந்த வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த பாடலை ஆண்ட்ரியாவே எழுதி பாடி நடித்தும் இருந்தார்.

இசையமைப்பாளர் லியான் ஜேம்ஸ் மற்றும் கெபா ஜெரிமியா (guitarist ) ஆகியோரும் இப்பாடலில் ஆண்ட்ரியாவுடன் இணைந்து பணியாற்றினர்.

யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற இசையமைப்பாளர்கள் இசையில் பல ஹிட் பாடல்களை ஆண்ட்ரியா பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Actress Andreas single Honestly Music Video Released

https://www.filmistreet.com/video/honestly-music-video-the-jeremiah-project/

இந்தியன்2-க்கு பிறகு தேவர்மகன்2 படத்தை தொடங்க கமல் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவில் தற்போது சீசன் 2 காலம் தொடங்கிவிட்டது.

அதிலும் முக்கியமாக தமிழ் சினிமாவில் இரண்டாம் பாக படங்கள் அதிகளவில் தயாராகி வருகிறது.

இதில் ஒரு சில 2ஆம் பாக படங்கள் வெற்றிப் பெறவில்லை என்றாலும் அந்த முயற்சியை சம்பந்தப்பட்டவர்கள் விடுவதாக தெரியவில்லை.

இந்நிலையில் கமலும் 2ஆம் பாக முயற்சியில் தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

விரைவில் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடிக்கவுள்ளார் கமல்.

கீர்த்தியிடம் காதலை சொன்ன சதீஷ்; விஷால்-25 விழா சதீஷ்-25 ஆனது

இப்படத்தை முடித்துவிட்டு மாபெரும் வெற்றிப் பெற்ற தேவர் மகன் இரண்டாம் பாகம் படத்தை தொடங்கவுள்ளாராம்.

1992ல் வெளியான இந்த படத்துக்கு அப்போது தேசிய விருது கிடைத்தது. மேலும் இது ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இவையில்லாமல் இந்தி, கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

கமல் தற்போது தீவிர அரசியலில் ஈடுப்பட்டு வருவதால் தேர்தலுக்கு முன்பே தன் கைவம் உள்ள படங்களை முடிக்க திட்டமிட்டுள்ளாராம்.

After Indian2 Kamal Haasan planning to make Thevar Magan2

கீர்த்தியிடம் காதலை சொன்ன சதீஷ்; விஷால்-25 விழா சதீஷ்-25 ஆனது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லிங்குசாமி இயக்கத்தில் உருவான சண்டக்கோழி2 படம் விஷாலின் 25வது படமாகும்.

எனவே விஷாலை வாழ்த்த அவருடன் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் மோகன்லால், ஷங்கர், குஷ்பூ உள்ளிட்ட பல பிரபலங்கள் வந்திருந்தனர்.

அப்போது விஷால், கீர்த்தி, வரலட்சுமி, சதீஷ், ஹிப் ஹாப் ஆதி ஆகியோர் மேடையேறினர்.

அப்போது விஷால் மேடையில் இருந்த அனைவரையும் கலாய்த்து பேசினார்.

ஒவ்வொரு முறையும் எப்படியாவது கீர்த்தியிடம் காதலை புரபோஸ் செய்துவிட்டார் சதீஷ். இது கிட்டதட்ட 25வது முறையாகும்.

இது விஷால் 25 விழா அல்ல. இது சதீஷ் 25 விழா என்றாகிவிட்டது” என்று கலாய்த்து பேசினார் விஷால்.

நயன்தாரா பட இயக்குனருடன் இணையும் ஜெய்-பிக்பாஸ் டேனியல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நயன்தாரா நடித்த அறம் படத்தை கோபி நயினார் இயக்கியிருந்தார்.

கடந்த ஆண்டு வெளியான அறம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனையடுத்து அறம் 2 படத்தை இயக்குவார் கோபி நயினார் என எதிர்பார்க்கப்பட்டது.

இதனிடையில் தனது அடுத்த படத்தை துவங்கியிருக்கிறார் டைரக்டர்.

இதில் நாயகனாக ஜெய் நடிக்கிறாராம்.

இது வடசென்னையில் நடக்கும் குத்துச் சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளதாம்.

பிக்பாஸ் 2-வது சீசனில் பங்கேற்ற காமெடி நடிகர் டேனியல் அனி போப் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு நேற்று துவங்கியது.

More Articles
Follows