முதன்முறையாக வில்லனுக்கு விழா எடுத்த *ராட்சசன்* படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணுவிஷால், அமலாபால் நடித்த ராட்சசன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

இப்படம் வெளியாகி இரண்டு வாரங்களுக்கும் மேலாகியும் தற்போது வரை தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ஆனால் ராட்சசன் படத்தில் கிறிஸ்டோபர் எனும் கேரக்டரில் சைக்கோ வில்லனாக நடித்த நடிகர் யார் என்பதுதான் பலரின் கேள்வியாக உள்ளது.

அதற்கான பதிலை, ராட்சசன் படத்தயாரிப்பாளர் ஒரு விழாவாகவே நடத்தியிருக்கிறார்.

அதில் ராட்சசன் படத்தின் வில்லனை அறிமுகம் செய்து வைத்தனர் படக்குழுவினர்.

கிறிஸ்டோபர் எனும் கேரக்டரில் நடித்த அவரின் பெயர் சரவணன். நான் படத்தில் சின்னக் கேரக்டரில் நடித்ததால், நான் சரவணன் என்று பெயர் கொண்ட அவர்தான், படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

இதுகுறித்து இயக்குநர் ராம்குமார் தெரிவித்ததாவது:

படம் பார்த்துவிட்டு பாராட்டிய அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் எல்லோருமே ‘அந்த வில்லன் கிறிஸ்டோடபர் கேரக்டர் செய்தது யார்?’ என்றுதான் கேட்டுக்கொண்டே இருந்தார்கள்.

அவரை இப்படியொரு விழா எடுத்து அறிமுகப்படுத்தலாம் என்று தயாரிப்பாளரிடம் சொன்னபோது, ரொம்ப உற்சாகத்துடன் செலவு பற்றி கவலைப்படாமல் சம்மதம் தெரிவித்தார் தயாரிப்பாளர்.

வில்லன் கிறிஸ்டோபராக நடித்தவர் சரவணன். நான் என்கிற படத்தில் நடித்ததால், நான் சரவணன் என்று எல்லோரும் சொல்லுவார்கள்.

முதலில் அவருக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். ஏனென்றால், படத்தில் அவரின் முகமே தெரியாது. மேக்கப் காரணமாக, வேறொரு முகத்துடன் படம் முழுக்க வந்தார். ஆனாலும் அந்த மேக்கப் போட்டுக்கொள்வதில் இருந்த அத்தனை சிரமங்களையும் தாங்கிக்கொண்டார்.

நான்குமணி நேரம் இந்த மேக்கப் நிற்கும். அதுவரைக்கும் உணவெல்லாம் சாப்பிடமுடியாது. திரவ உணவுதான். ஜூஸ் மாதிரிதான் சாப்பிடமுடியும். எட்டுமணி நேரமெல்லாம் கூட எதுவும் சாப்பிடாமல் இருந்து, இந்தக் கேரக்டரை சிறப்பாகப் பண்ணியிருக்கிறார்.

இப்படியொரு மேக்கப் போட்டுக்கொள்வதால், முகத்தில் அரிப்பு ஏற்படும். சின்னச் சின்ன புண்ணெல்லாம் வந்திருக்கிறது. அதையெல்லாம் தாங்கிக்கொண்டு, அப்படியொரு உழைப்பையும் நடிப்பையும் கொடுத்தார் சரவணன்.

இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணங்களில் கிறிஸ்டோபர் கேரக்டரும் ஒன்று. அதை மிகச்சிறப்பாக வெளிப்படுத்திய சரவணன், மிகப்பெரிய நடிகராக வருவார் என்பது உறுதி.

இவ்வாறு இயக்குநர் ராம்குமார் பேசினார்.

சர்கார் & பில்லாபாண்டி-யுடன் தீபாவளி கொண்டாடும் களவாணி மாப்பிள்ளை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி தினத்தன்று விஜய் நடித்துள்ள சர்கார் மற்றும் ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள பில்லா பாண்டி ஆகிய படங்கள் வெளியாகிறது.

இத்துடன் தினேஷ் – அதிதி மேனன் நடித்துள்ள களவாணி மாப்பிள்ளை திரைப்படமும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு…

நம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் காந்திமணிவாசகம் இயக்கத்தில் “களவாணி மாப்பிள்ளை“ படத்தை தயாரித்துள்ளது.

தினேஷ் நாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக அதிதி மேனன் நடித்துள்ளார். மற்றும் ஆனந்த்ராஜ், தேவயாணி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், ஜோதி, லல்லு, கிரேன் மனோகர், நாஞ்சில் விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – சரவணன் அபிமன்யு

இசை – என்.ஆர்.ரகுநந்தன்

பாடல்கள் – மோகன்ராஜன், ஏக்நாத்

கலை – மாயா பாண்டி

எடிட்டிங் – பொன் கதிரேசன்

நடனம் – தினேஷ்

ஸ்டன்ட் – திலீப்சுப்பராயன்

தயாரிப்பு மேற்பார்வை – சிவசந்திரன்

நிர்வாக தயாரிப்பு – ஸ்டில்ஸ் ராபர்ட்

இணை தயாரிப்பு – திருமூர்த்தி

தயாரிப்பு – ராஜேஸ்வரி மணிவாசகம்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – காந்தி மணிவாசகம்.

ரசிகர்கள் குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும்படியான கலக்கல் காமெடி. படமாக உருவாக்கி உள்ளோம். படம் வருகிற நவம்பர் 6 ம் தேதி தீபாவளி திருநாள் அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

விஜய்யுடன் மோதலை தவிர்க்க விலகும் விஜய் ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் ஆண்டனி தயாரித்து நடித்த பிச்சைக்காரன் படம் மாபெரும் வெற்றி பெற்றது.

ஆனால் இதன் பின்னர் அவர் நடித்த அண்ணாதுரை, காளி ஆகிய படங்கள் சரியாக போகவில்லை. இதை விஜய் ஆண்டனியே அண்மையில் ஒரு மேடை நிகழ்ச்சியில் ஒப்புக் கொண்டார்.

எனவே விரைவில் வெளியாகவுள்ள திமிரு புடிச்சவன் படத்தைதான் பெரிதும் நம்புயிருக்கிறார் விஜய் ஆண்டனி.

கணேசா இயக்கியுள்ள இப்படத்தில் முதன்முறையாக போலீஸ் ரோலில் நடித்துள்ளார் விஜய் ஆண்டனி,

இப்படம் தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதே தினத்தில் சர்கார் படம் வெளியாகவுள்ளதால் திமிரு புடிச்சவனுக்கு போதிய தியேட்டர் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து படத்தை நவம்பர் 16ம் தேதிக்கு தள்ளி வைத்துவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு இதுவரை வெளியிடவில்லை.

வைரமுத்து படுக்க கூப்பிட்டது தப்பில்லை.; மாரிமுத்து பேச்சுக்கு சித்தார்த் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

இது திரையுலகில் பெரும் சர்ச்சை உண்டாக்கியுள்ளது.

ஒரு சிலர் வைரமுத்துக்கு ஆதரவாகவும், சிலர் சின்மயிக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.

நடிகர் சித்தார்த் ஆரம்பம் முதலே இது குறித்து பேசி வருகிறார்.

இந்நிலையில் குணச்சித்திர நடிகர் மாரிமுத்து என்பவர் த்ன் பேட்டியில், ஆண்களின் ஹார்மோன் வளர்ச்சி அப்படி. பெண்ணைத் தானே படுக்க கூப்பிட முடியும். ஆண்டுகளையா கூப்பிட முடியும்.

கவிஞர் வைரமுத்து மீது தப்பில்லை. அவரது புகழுக்கு களங்கமில்லை என அதிரடியாக பேசியுள்ளார்.

இதனை கண்டிக்கும் வகையில் நடிகர் சித்தார்த் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவரின் பதிவு இதோ…

Siddharth‏Verified account @Actor_Siddharth

Siddharth Retweeted Baradwaj Rangan

I wish this small-minded, disappointing man #Marimuthu was not part of my favourite Tamil film of the decade. A classic about equality and change! Unfortunately he always will be. This interview hurt me and so many others so much. Sad! Paavam yen #Karuppi. @Mari_selvaraj @beemji

அட யாராச்சும் கேஸ் போடுங்கப்பா…; ஆடம்ஸ் அடம்; பிரபு கண்டிப்பு!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிவியில் பல வருடங்களாக தொகுப்பாளராக இருப்பவர் ஆடம்ஸ்.

அவ்வப்போது மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வருகிறார்.

இவர் தற்போது உதயா தயாரித்து நடித்துள்ள உத்தரவு மகாராஜா படத்தில் சின்ன ரோலில் நடித்துள்ளார்.

இப்படத்தை வருகிற நவம்பர் 16ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது ஆடம்ஸ் பேசியதாவது…

” உத்தரவு மகாராஜா படத்தில் உதயாவின் நண்பராக நான் நடித்துள்ளேன். இத்தனை ஆண்டுகளாக சின்னத்திரையில் இருந்துவிட்டு, இந்த படத்தின் மூலம் தான் பெரிய திரைக்கு வந்திருக்கிறேன்.

விஜய்யின் சர்கார் படத்துக்கு விளம்பரமே தேவையில்லை. ஆனால் அந்த படத்தின் மீது கேஸ் போட்டு புரோமோஷன் தருகிறார்கள்.

எங்கள் படத்தின் மீதும் யாராவது கேஸ் (வழக்கு) போட்டால் எங்களுக்கும் புரோமோஷனாக இருக்கும். பாஜக. எச்.ராஜா போன்றோர் எங்கள் படம் பற்றி ஏதாவது பேசினால் ஒரு விளம்பரமாக இருக்கும்.

எங்களைப் போன்ற படங்களுக்கு புரோமோஷன் கிடைப்பதில்லை”, என அவர் கூறினார்.

அதன் பின்னர் பேசிய நடிகர் பிரபு.. “ஆடம்ஸ் சொல்வதை யாரும் சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ள வேண்டும். அவர் தெரியாமல் பேசிவிட்டார் என்பது போல கண்டித்தார்.

எந்திரன்-கோச்சடையான் படங்களுக்கு பிறகு டிவி.யில் ரஜினி பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 40 ஆண்டுகளாக வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் ரஜினிகாந்த்.

ஆனால் இவரை டிவி பேட்டிகளில் பார்ப்பது மிக அரிதான ஒன்று.

தன் படம் விளம்பரம் சம்பந்தமாக டிவி நிகழ்ச்சிகளில் கூட கலந்துக் கொள்வதில்லை.

இருந்தபோதிலும் எந்திரன், கோச்சடையான் படங்களின் ரிலீசின் போது டிவி சேனல்களுக்கு பிரத்யேகமாக பேட்டி கொடுத்திருந்தார்.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு 2.0 பட புரோமோசன் சம்பந்தமாக பேட்டி கொடுத்திருக்கிறார்.

நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி தினத்தன்று மதியம் 3 மணிக்கு ஜீ தமிழ் டிவியில் தன் படம் குறித்த அவரது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

‘2.0’ படத்தை சுமார் 110 கோடிக்கு சாட்டிலைட் உரிமையை ஜீ குழுமம் வாங்கியுள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.

ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

கிட்டதட்ட 500 கோடியில் உருவாகியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் வருகிற நவம்பர் 29ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடுகிறது.

Rajinikanth interview will telecast in Zee TV on Diwali

More Articles
Follows