விஜய் தேவரகொண்டாவுடனான டேட்டிங் கிசுகிசுக்களுக்கு ராஷ்மிகாவின் பதில்

விஜய் தேவரகொண்டாவுடனான டேட்டிங் கிசுகிசுக்களுக்கு ராஷ்மிகாவின் பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகை ராஷ்மிகா மந்தனா.

அக்டோபர் 7 திரைக்கு வரவிருக்கும் தனது ஹிந்தி படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் அவர் தற்போது பிஸியாக உள்ளார்.

இதற்கிடையில், ராஷ்மிகா பிரபல தென்னிந்திய நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்த்து அடிக்கடி வதந்திகள் பரவி வருகின்றன.

இந்த கிசுகிசுக்கு நடிகை சமீபத்தில் ஒரு பேட்டியில் பதிலளித்துள்ளார்.

நமக்கென்று ஒரு கதை இருந்தால் அதை செய்ய வேண்டும். வேடிக்கையாக இருக்கும். நாங்கள் நல்ல நடிகர்கள், இயக்குனர்களை ஏமாற்ற மாட்டோம்,” என்று கூறினார்.

OFFICIAL ரூ 100 கோடியை நெருங்கும் PS1.; மிரட்டும் ‘பொன்னியின் செல்வன்’ வசூல்

OFFICIAL ரூ 100 கோடியை நெருங்கும் PS1.; மிரட்டும் ‘பொன்னியின் செல்வன்’ வசூல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் இயக்கி தயாரித்திருந்த படம் ‘பொன்னியின் செல்வன்’.

70 ஆண்டுகளுக்கு முன் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் உலகம் என்றும் நேற்று செப்டம்பர் 30ஆம் தேதி வெளியானது.

லைக்கா தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களுக்கு சென்று படத்தை புரமோட் செய்திருந்தனர்.

எனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துக் கொண்டே சென்றது.

நேற்று படம் வெளியானது முதலே படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்த நிலையில் தற்போது இந்த படத்தில் முதல் நாள் வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.

அதன் படி ரூபாய் 80 கோடியை வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

இது தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பெருமை என்று கூறலாம். இனி வரும் நாட்களில் மேலும் ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகை விடுமுறை நாட்களில் இதன் வசூல் எகிறும் என எதிர்பார்க்கலாம்.

இந்த படத்திற்கு PS1 ப்ரீ-புக்கிங்கில் செயலிகளே கிராஷ் ஆகும் அளவிற்கு வரவேற்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Ponniyan Selvan collections in 100 crore

அஜித்தின் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் புதிய இசையமைப்பாளர்?

அஜித்தின் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் புதிய இசையமைப்பாளர்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் ‘துணிவு’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பாங்காக்கில் நடைபெற்று வருகிறது.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

சமீபத்திய செய்தி என்னவென்றால், பிரபல ஒலி பொறியாளரும் இசையமைப்பாளருமான நெரியன் வில்பர்ட் ‘துணிவு’ படத்தின் பின்னணி இசைக்காக ஜிப்ரனுடன் ஒத்துழைக்கிறார்.

அக்டோபர் மாதத்தில் முழு படப்பிடிப்பும் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் தீபாவளி முதல் சிங்கிள், டீசர் மற்றும் பிற முக்கிய அப்டேட்ஸ்களை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

“பொன்னியின் செல்வன் பாகுபலி அல்ல” – மணிரத்னம் ஓபன் டாக்

“பொன்னியின் செல்வன் பாகுபலி அல்ல” – மணிரத்னம் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்: பாகம் 1 பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செப்டம்பர் 30 அன்று திரையரங்குகளை அலங்கரித்தது.

சிலர் பொன்னியின் செல்வனை எஸ்.எஸ்.ராஜமௌலியின் பாகுபலியுடன் ஒப்பிட்டுள்ளனர்.

இது குறித்து பேசிய மணி ரத்னம் , “இராஜராஜ சோழனின் வாழ்க்கைக் கதையை கல்கி எழுதியுள்ளார்.

பாகுபலி ஒரு கற்பனை படம். அதில் ஹீரோயிசம் உள்ளது.

பொன்னியின் செல்வன் படத்திற்கும் அதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. PS Iல் அப்படி ஒரு சூப்பர் ஹீரோ இல்லை.” என்றார் அவர்.

Mani Ratnam

ஓர் இரவில் நான்கு கதைகள்.; ‘பவுடர்’ பூசிய முகங்களை தோலுரிக்கும் விஜய்ஸ்ரீ ஜி

ஓர் இரவில் நான்கு கதைகள்.; ‘பவுடர்’ பூசிய முகங்களை தோலுரிக்கும் விஜய்ஸ்ரீ ஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பல வெற்றிப்படங்களில் நடித்து தேசிய விருது பெற்று நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த சாருஹாசனை ‘தாதா 87’ திரைப்படம் மூலம் மீண்டும் கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தியவரும், பல வெள்ளி விழா படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பெற்ற நடிகர் மோகனை ரீஎன்ட்ரீ கொடுத்து ‘ஹரா’ படத்தை இயக்கி வருபவர் விஜய்ஸ்ரீ ஜி.

இவர் கடந்த 26 வருடங்களாக மக்கள் தொடர்பாளராக கேமராவிற்கு பின் இருந்த நிகில் முருகனை கேமராவிற்கு முன் ‘பவுடர்’ படம் மூலம் கதை நாயகனாக அறிமுகப்படுத்துகிறார்.

இந்த மூன்று படங்களுக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால் தன்னையும் கதையையும் நம்பி மட்டுமே இயக்குநர் விஜய்ஸ்ரீ ஜி துணிச்சலான முயற்சிகளில் ஈடுபடுவது ஆகும்.

படத்தை பற்றி விஜய்ஸ்ரீ ஜி கூறுகையில்…

“அனைவரும் வீட்டை விட்டு வெளியில் வரும்போது ஒரு முகமூடி அணிந்து கொண்டு தான் வருகிறார்கள். அதை தான் பவுடர் குறிக்கிறது.

ஒருவரின் தோற்றத்தை வைத்து தப்பாக கணிக்கக்கூடாது. பவுடர் போடுவதில் நிஜ முகங்கள் தொலைகிறது,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்…

“ஓர் இரவில் நடக்கும் இந்த கதை நமது வாழ்க்கையில் தினம்தோறும் நாம் கடந்து சென்ற நினைவுகளை ஞாபகப்படுத்தும். அதே போல ஒரு உயர் அதிகாரி தனக்கு கீழே பணிபுரிபவர்களை சரிசமமாக கருத வேண்டும் என்கிற கருத்தையும் பதிவு செய்யும்,” என்று கூறினார்.

மேக்கப் மேனாக பணிபுரியும் ஒரு சராசரி குடும்ப தலைவர் கதாபாத்திரத்தில் விஜய்ஸ்ரீ ஜி நடித்துள்ளார். பரட்டை என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.

பாசமிகு தந்தை மற்றும் மகளுக்கு இடையே நடக்கும் கதைப்பகுதிகளில் வையாபுரி மற்றும் அனித்ரா நாயர் நடிக்கின்றனர்.

உயர் அதிகாரிகளால் அவமதிக்க படும் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக நிகில் முருகன் வருகிறார்.

அரசியல்வாதிகளால் வாழ்வாதாரங்களை இழக்கும் இளைஞர்களும் கதை மாந்தர்களாக தோன்றுகின்றனர்.

இவர்கள் நால்வரும் ஒரு நேர் கோட்டில் சந்திக்கின்றனர். இந்த சந்திப்பில் என்ன ஆகிறது, என்ன தீர்வு கிடைக்கிறது என்பதை சுவாரசியமாக சொல்லும் படம் தான் பவுடர்.

மேற்கண்ட விஷயங்கள் முதல் பாகமாக உருவாகியுள்ளது. இரண்டாம் பாகத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கும். ‘பவுடர்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா அக்டோபர் 1 (நாளை) பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.

Vijay Sri G launches Nikil Murukan as protagonist in Powder

Director Vijay Sri G, who re-launched National Award winning actor Chaaru Haasan who took a break from acting after being part of many successful movies, as the protagonist with the film ‘Dhadha 87’, is directing ‘Haraa’ with actor Mohan, who has acted in many silver jubilee films and occupied a place in the hearts of the people.

ஜனாதிபதியிடம் தேசிய விருதைப் பெற்ற சூர்யா ஜோதிகா ஜிவி.பிரகாஷ் அபர்ணா

ஜனாதிபதியிடம் தேசிய விருதைப் பெற்ற சூர்யா ஜோதிகா ஜிவி.பிரகாஷ் அபர்ணா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

68-வது தேசிய விருது 2020-ஆம் ஆண்டிற்கான பட்டியல் சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

இதற்கான விருது வழங்கும் விழா இன்று செப்டம்பர் 30 டெல்லியில் நடைபெற்றது.

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கினார்.

சூரரைப்போற்று

இதில்… ‘சூரரைப்போற்று’ படத்திற்கு 5 விருதுகளும், வசந்த் இயக்கிய ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படத்திற்கு 3 விருதுகளும், யோகிபாபு நாயகனாக நடித்த ‘மண்டேலா’ திரைப்படத்திற்கு 2 விருதுகளும் வழங்கப்பட்டது.

நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா, இசையமைப்பாளர் ஜிவி. பிரகாஷ் நாயகி அபர்ணா, இயக்குனர் சுதா கொங்கரா ஆகியோருக்கு தேசிய விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

தன் கணவரும் நடிகருமான சூர்யா முதன்முறையாக தேசிய விருது பெற்றதை மனைவி ஜோதிகா தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளளார். இது தொடர்பான போட்டோ இணையத்தில் வெளியானதை தொடர்ந்து சூர்யா ரசிகர்கள் ட்விட்டரில் ஷேர் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

சூரரைப்போற்று

Soorarai Pottru team received 5 National award today at Delhi

https://youtube.com/shorts/IlC5adc8pOs?feature=share

More Articles
Follows