தம்பிக்கு ஜோடியாக நடித்தவரை அண்ணனுக்கும் ஜோடியாக்கும் பாண்டிராஜ்..?

தம்பிக்கு ஜோடியாக நடித்தவரை அண்ணனுக்கும் ஜோடியாக்கும் பாண்டிராஜ்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.

இப்படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இதில் சூர்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளாராம்.

ரஷ்மிகா மந்தனா சமீபத்தில் கார்த்தி நடிப்பில் சுல்தான் படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்க எஸ்ஆர். பிரபு தயாரித்து வருகிறார்.

Rashmika Mandanna to play female lead in Suriya’s next film

rashmika mandanna

அ இ த வி ம இ கட்சியை பதிய வேண்டாம்.; தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்… எஸ்கேப்பாகும் எஸ்ஏசி

அ இ த வி ம இ கட்சியை பதிய வேண்டாம்.; தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்… எஸ்கேப்பாகும் எஸ்ஏசி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SA chandrasekharஅண்மையில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை’ அரசியல் கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார்.

இந்த தகவல் வெளியான சில மணி நேரத்திலேயே கட்சிக்கும் தனக்கும் சம்மந்தமில்லை என அறிக்கை விட்டார் நடிகர் விஜய்.

தன் ரசிகர்கள் யாரும் இந்த கட்சியில் சேர வேண்டாம். என் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது என அறிக்கை வெளியிட்டார்.

பின்னர் கட்சியிலிருந்து (பொருளாளர் பதவியில்) விலகுவதாக விஜய் அம்மா ஷோபாவும் அறிவித்தார்.

எனக்கு பிடித்த நடிகர் பெயரில் மக்களுக்கு நல்லது செய்ய கட்சித் தொடங்கி இருக்கிறேன்.

தற்போது விஜய் ஆபத்தான வலையில் சிக்கியுள்ளார் என பரபரப்பாக பேட்டியளித்தார் எஸ்ஏசி.

இதன் பின்னர் கட்சியின் தலைவர் பத்மநாபனுக்கு மிரட்டல்கள் வருவதாக தெரிவித்த அவர், எஸ்.ஏ.சிக்கு ராஜினாமா கடிதம் அனுப்பினார்.

யார் விலகினாலும் கட்சி நடக்கும்… தன்னுடைய பயணம் தொடரும் என்றார் எஸ்ஏசி.

இந்த நிலையில்… தற்போது கட்சியை பதிவு செய்ய வேண்டாம் என அவர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறாராம் எஸ்ஏ சந்திரசேகர்.

SAC withdraw new political party ?

காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை..; கமல்ஹாசன் வரவேற்பு

காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை..; கமல்ஹாசன் வரவேற்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Haasanதமிழக காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்கவுள்ளது தமிழக அரசு.

இது குறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது…

“காவல்துறையினருக்கு மட்டும் திட்டவட்டமான பணி நேரமோ ஓய்வு ஒழிச்சலோ கிடையாது.

இதை மாற்ற வேண்டுமென்று பேச்சு எழுந்திருக்கிறது. கடமையைச் செய்பவர்களுக்கு ஓய்வு கொள்ளவும், உழைப்பைக் கொடுப்பவர்களுக்கு இளைப்பாறவும் உரிமை உண்டு.

சுழற்சி முறையிலோ வேறு விதத்திலோ பிற அரசு ஊழியர்கள் போல் காவல் துறையினருக்கும் ஓய்வு கொடுக்க முன் வந்துள்ளது பாராட்டுக்குரியது.

வெறும் பேச்சாய் இல்லாமல் இது நடைமுறைப் படுத்தப்படவும் வேண்டும்.

One day leave for TN police MNM leader Kamal praised

பாலிவுட்டிற்கு செல்லும் தென்னிந்திய பெண் அம்ரின் குரேஷி

பாலிவுட்டிற்கு செல்லும் தென்னிந்திய பெண் அம்ரின் குரேஷி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செகுந்திராபாத்தில் உள்ள சிவன் சிவானி பப்ளிக் பள்ளியில் படித்த ஹைதராபாத் பெண், அம்ரின் குரேஷி இரண்டு பெரிய இந்தி படங்களில் நடித்ததன் மூலம் சினிமாத் துறையில் பரபரப்பாக பேசப்பட்டவர். இந்த இரண்டு இந்தி படங்களும் ‘சுபிஸ்டா மாவா’ மற்றும் ‘ஜூலாயின்’ என்ற பெயரில் தெலுங்கில் மறு உருவாக்கத்தில் வெளியானது. கவர்ச்சி பாத்திரமாக இருந்தாலும் சரி, பாரம்பரிய பாத்திரமாக இருந்தாலும் சரி, அம்ரின் மிகவும் பொருந்தி விடுகிறார். ஆகையால், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார். அம்ரின் தனது இந்தி திரைப்படங்கள் நிறைவடைவதற்கு முன்பே கிளவுட் நைன் மூலம் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பெரிய வாய்ப்பை பெற்றுவிட்டார்.

இந்தியில் தன்னை சிறந்த நடிகையாக நிரூபித்து, தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெற்றிகரமான கதாநாயகியாக மாறுவதே அம்ரின் குறிக்கோளாக வைத்துள்ளார். ரேகா, ஹேமமலினி, ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா, வாகீதா ரெஹ்மான், தபு போன்ற கதாநாயகிகள் தென்னிந்திய சினிமா மூலம் திரைப்படங்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டு பின்னர் பாலிவுட்டில் நுழைந்தனர். அவர்கள் தங்களுக்கென்று சிறந்த இடத்தைப் பெற்றுள்ளனர். அதுமட்டுமில்லாமல், நட்சத்திர நாயகிகள் என்ற அந்தஸ்தோடு பல பாராட்டுக்களைப் பெற்றுள்ளனர். பல பாலிவுட் நட்சத்திரங்கள் தென்னிந்திய படங்களில் நடித்து வருகிறார்கள் என்பது தெரிந்ததே. தற்போது, இதற்கு மாறாக ஒரு தென்னிந்தியாவை சேர்ந்த பெண் பாலிவுட்டில் நுழைந்துவிட்டார் என்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘புஸ்தகாம்லோ கொன்னி பேஜெலு காணவில்லை’ படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் சஜித் குரேஷியின் மகள், ராயல் பிலிம் விநியோகஸ்தர் உரிமையாளர் எம் ஐ குரேஷியின் பேத்தி அம்ரின் குரேஷி இரண்டு பாலிவுட் திரைப்பட வாய்ப்புகளைப் பெற்றுள்ளார்.

தெலுங்கில் மாபெரும் வெற்றிபெற்ற படங்களான ‘சுபிஸ்டா மாவா’ மற்றும் ‘ஜூலாய்’ இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த இரண்டு படங்களிலும் அம்ரின் குரேஷி ஹீரோயினாக நடிக்கிறார். ‘பேட் பாய்’ படத்தை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷி ‘சுபிஸ்டா மாவா’வின் மறு உருவாக்கத்தை இயக்குகிறார். சஜித் குரேஷி தனது இன்பாக்ஸ் பிக்சர்ஸ் பேனரில் இப்படத்தை தயாரிக்கிறார். கோடைகால சிறப்பு படமாக இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன், நட்சத்திர இயக்குநர் திரிவிக்ரமின் ‘ஜூலாய்’ டோனி டிசோசாவின் இயக்கத்தில் மறு உருவாக்கம் செய்யப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி முதல் ஆரம்பமாகும். கதாநாயகிகள் வடக்கிலிருந்து தெற்கிற்கு வரும் பருவத்தில், தெற்கிலிருந்து செல்லும் அம்ரின் குரேஷி பாலிவுட்டில் அறிமுகமாகிறார். அவருக்கு பிரகாசமான எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள். விரைவில் அவர் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் பரபரப்பாகி விடுவார் என்று நம்புகிறோம். அம்ரின் குரேஷிக்கு வாழ்த்துக்கள்.

Hyderabad Girl Amrin Qureshi Starring In Two Big Bollywood Films

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜுரம்.? ரசிகர்கள் அதிர்ச்சி… பிஆர்ஓ விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜுரம்.? ரசிகர்கள் அதிர்ச்சி… பிஆர்ஓ விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth with pro riazகொரோனா வைரஸ் பரவல் பிரச்சினையால் அண்ணாத்த சூட்டிங்கில் கலந்துக் கொள்ளாமல் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார் ரஜினிகாந்த்.

மேலும் தான் தொடங்கவுள்ள அரசியல் கட்சி பணிகளையும் ஒத்தி வைத்துள்ளார்.

அண்மையில் கூட தீபாவளியன்று தன் போயஸ் தோட்ட வீட்டில் இருந்த படியே ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் ரஜினிகாந்த்.

கொரோனா பிரச்னையால் தனது உடல்நலனில் அதிக அக்கறை செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ரஜினிக்கு தற்போது காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாகவும், அதற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் உலா வந்தன.

இதனால் அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அவரது மக்கள் தொடர்பாளர் ரியாஸ் கூறியதாவது… “யாரோ விஷமிகள் வதந்தியை கிளப்பி விட்டுள்ளனர்.

அவர் தனது போயஸ் கார்டன் இல்லத்தில் ஓய்வு எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

Shocking rumour about Rajinikanth’s health clarified

ஒருவழியாக ‘ஈஸ்வரன்’ பட பாம்பு காட்சியை ஏற்றுக் கொண்ட வனத்துறை

ஒருவழியாக ‘ஈஸ்வரன்’ பட பாம்பு காட்சியை ஏற்றுக் கொண்ட வனத்துறை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

eswaran snake shootingசுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் ‘ஈஸ்வரன்’ பட வீடியோ காட்சி ஒன்று லீக் ஆனது.

இதில் பாம்பு ஒன்றை சிலம்பரசன் பிடித்து இருப்பது போன்ற வீடியோ காட்சியை பார்த்து, அதில் ஒர்ஜினல் பாம்பை வைத்தே படமாக்கப்பட்டதாக வனத்துறைக்கு சந்தேகம் எழ, வன இலாகா அதிகாரிகள் படக் குழுவினருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர்.

இயக்குநர் சுசீந்திரன், வனதுறை அதிகாரி கிளமண்ட் எடிசன் அவர்களிடம் நேரில் சென்று, சிலம்பரசன் நடிக்கும் “ஈஸ்வரன்” படத்தில் ரப்பர் பாம்புவை வைத்து, எவ்வளவு நுணுக்கமாக தத்ரூபமாக படமாக்கினோம் என்பதை, கிராபிக்ஸ் செய்யப்பட்ட வீடியோ காட்சிகளுடன் வன அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்தார்.

இது தொடர்பாக வன துறை அதிகாரி கிளமண்ட் எடிசன் அவர்களிடம் கேட்டபோது…

“பொதுவாக விலங்கினங்களை வைத்து படமாக்குவதற்கு வன துறையினரிடம் முறையான அனுமதி பெற வேண்டும்.

‘ஈஸ்வரன்’ படக்குழுவினர், ரப்பர் பாம்பை வைத்து கம்பியூட்டர் கிராபிக்ஸ் துணையுடன் ( CG ) எப்படியெல்லாம் சினிமாடிக் டிரிக் செய்தோம் என்று விளக்கினார்கள்.

அதை பார்த்த பின்பு தான் அந்த காட்சியில் இடம் பெற்றது நிஜ பாம்பு இல்லை என்று புரிந்தது… உறுதியானது.

இந்த காட்சி எடுத்தது குறித்து எங்களுக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை என்று கருத்து தெரிவித்தார் அதிகாரி.

இப்படத்தை, மாதவ் மீடியா சார்பில் பாலாஜி கப்பா தயாரிக்கிறார். ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் ‘D’ கம்பெனி சார்பில் K.V.துரை தயாரித்துக் கொடுக்கிறார்.

Animal welfare board accepts Eeswaran team CGI explanations

More Articles
Follows