ரஜினி-தனுஷ் கூட்டணியில் இணைந்தது பற்றி ரஞ்சித் கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய திரையுலகமே எதிர்பாராத வண்ணம் நேற்று நள்ளிரவு பெரும் இன்ப அதிர்ச்சி ரசிகர்களுக்கு வந்தது.

கபாலியை தொடர்ந்து, மீண்டும் ரஜினி படத்தை ரஞ்சித் இயக்குகிறார்.

இப்படத்தை தனுஷ் தன் வுண்டர்பார் பேனரில் தயாரிக்கிறார் என்ற தகவல்கள் காட்டுத் தீயாய் பரவியது.

இதுகுறித்து ரஞ்சித் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது…

“ரஜினி சாரிடம் ஒன்லைன் கதை சொன்னேன். அவருக்கு அது மகிழ்ச்சியை கொடுத்தது.

இது வேறு ஒரு ஜேனர் கதை. நிச்சயமாக இது கபாலி 2 இல்லை. விரைவில் எல்லாம் தகவல்களும் வரும்” என்றார்.

மீண்டும் ஆர்யா பக்கம் சாயும் நயன்தாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மஞ்சப்பை படத்தை தொடர்ந்து ராகவன் இயக்கும் கடம்பன் படத்தில் நடித்து வருகிறார் ஆர்யா.

இதனையடுத்து, அமீர் இயக்கவுள்ள பீரியட் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்திற்கு சந்தன தேவன் என்ற பெயர் வைக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆர்யாவுக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க இருக்கிறார்களாம்.

ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் நயன், கொஞ்சம் கால அவகாசம் கேட்டு இருக்கிறாராம்.

அவர் ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் மீண்டும் ஆர்யா தோளில் சாய்ந்து டூயட் பாடுவார் என்று எதிர்பார்ப்போம்.

செப்டம்பர் முதல் வாரம் இதன் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

இதற்கு முன்பே, பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களுக்கு விருந்தளிக்க செப்டம்பரில் ஒரு டஜன் படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்னும் ஓரிரு தினங்களில் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது.

செப்டம்பர் மாதம் தொடங்கி விட்டாலே நிறைய பண்டிகைகள் வரும். எனவே அதனை முன்னிட்டு நிறைய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி விட்டன.

இதில் வருகிற செப்டம்பர் 2ஆம் தேதி சசிகுமாரின் கிடாரி மற்றும் காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டனின் குற்றமே தண்டனை படங்கள் வெளியாகவுள்ளன.

இதனையடுத்து யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள விக்ரமின் இருமுகன் செப்டம்பர் 8ஆம் தேதி வெளியாகிறது.

மற்ற படங்களின் வெளியீட்டு தேதிகள் இதுவரை வெளியாகவில்லை என்பதால் படங்களின் பெயர்களை கொடுத்துள்ளோம்….

  • தனுஷ் நடித்துள்ள தொடரி
  • விக்ரம் பிரபு நடித்துள்ள வீரசிவாஜி
  • அருண்விஜய் நடித்துள்ள வா டீல்
  • பிரபு நடித்துள்ள மீன் குழம்பும் மண் பானையும்
  • விஜய் சேதுபதி நடித்துள்ள ஆண்டவன் கட்டளை
  • த்ரிஷா நடித்துள்ள நாயகி
  • சிம்பு நடித்துள்ள அச்சம் என்பது மடமையடா

இவையில்லாமல் அச்சமின்றி உள்ளிட்ட மற்ற படங்களும் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன.

உலக நாயகனை பாலோ செய்யும் இளைய தளபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கத்தில் தன் 60வது படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இதுவரை இதன் படப்பிடிப்புகள் 75% முடிவடைந்துள்ளது.

அடுத்த வருடம் பொங்கலை குறிவைத்து, இதன் பணிகளை விறுவிறுப்பாக முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் முதன்முதலாக நெல்லைத்தமிழில் பேசி நடிக்கவிருக்கிறாராம் விஜய்.

இவருடன் டேனியல் பாலாஜியும் நெல்லை தமிழில் பேசவிருக்கிறாராம்.

அண்மையில் வெளியான பாபநாசம்’ படத்தில் கமலும் நெல்லைத் தமிழ் பேசி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

அஜித் அன்பினால் மீண்டும் அசந்து போகும் அப்புக்குட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த அப்புக்குட்டிக்கு இளையராஜாவின் இசையில் உருவான ‘அழகர்சாமியின் குதிரை’ தேசிய விருதை பெற்றுத் தந்தது.

தொடர்ந்து, சுந்தர பாண்டியன், வீரம், வேதாளம் படங்களில் நடித்து அஜித்தின் அன்பை பெற்றார்.

இதன் பின்னர் அவருக்காக ஒரு போட்டோ சூட் நடத்தி, இவரின் இயற்பெயரான சிவபாலன் பெயரில் இனி நடிக்க வேண்டும் என அஜித்தும் வலியுறுத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது ‘தல 57’ படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

முதலில் அப்புக்குட்டியின் காட்கிளை சென்னையில் படமாக்க முடிவு செய்திருந்தார்களாம்.

ஆனால் தற்போது அந்தக் காட்சிகளை அமெரிக்காவில் படமாக்க முடிவு செய்துள்ளனர்.

இதற்கு பின்னணியில் அஜித் இருந்திருப்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆகமொத்தம் அஜித்தின் அன்பை முழுவதுமாக பெறப்போகிறார் அப்புக்குட்டி.

ரஜினி-விஜய்-சூர்யா வரிசையில் இணைந்த விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் நடித்துள்ள இருமுகன், செப்டம்பர் 8ஆம் ரிலீஸ் ஆகும் என கூறப்படும் நிலையில், இப்படத்தின் புரேமோஷன் பணிகளுக்காக தற்போது கேரளாவில் உள்ளார் விக்ரம்.

இதற்காக தனி ஹெலிகாப்டரையும் ஏற்பாடு செய்துள்ளார் இதன் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ்.

இந்நிலையில் இப்படத்தின் அமெரிக்க வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனமான சினி கேலக்ஸி பெற்றுள்ளதாம்.

இப்படத்தின் தெலுங்கு உரிமையை இந்நிறுவனம் பெற்றுள்ளது.

ரஜினியின் கபாலி, விஜய்யின் தெறி மற்றும் சூர்யாவின் 24 படங்களை இந்நிறுவனம் வெளியிட்டு நல்ல லாபத்தை ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows