ரஜினி, சூர்யாவை அடுத்து விஜய், அதர்வாவுடன் இணையும் ரஞ்சித்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி படம் நன்றாக கல்லா கட்டி வருவதால் ரஞ்சித் உள்ளிட்ட படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இப்படத்தின் க்ளைமாக்ஸில் அடுத்த பாகத்தின் தொடர்ச்சி இருந்த நிலையில் கபாலி 2 உருவாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனிடையில் சூர்யா நடிக்கவுள்ள படத்தை இயக்கவிருக்கிறார் ரஞ்சித். வடசென்னை பாக்ஸர்களை பற்றி இப்படம் தயாராகவுள்ளது.

இதற்கிடையில் தனது உதவியாளர் ஒருவர் இயக்கும் படத்தை தயாரிக்க இருக்கிறாராம் பா. ரஞ்சித்.
இதில் அதர்வா நாயகனாக நடிக்கிறார்.

இதனிடையில் விஜய்யை சந்தித்து அவரிடமும் ஒரு கதையை சொல்லியிருக்கிறார் ரஞ்சித்.

தற்போது விஜய்யின் க்ரீன் சிக்னலுக்காக அறிவிப்பு வெயிட்டிங்.

மீண்டும் ரஜினி-கமல் ரசிகர்கள் மோதல் உருவாகுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

20 வருடங்களுக்கு முன்பு ரஜினி-கமல் ரசிகர்களின் மோதல் பட்டி முதல் சிட்டி வரை பரவி இருந்தது.

சமீபகாலமாக ரஜினி-கமல் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவது இல்லை என்பதால் மோதலுக்கான சூழலும் குறைந்துள்ளது.

இந்நிலையில் மீண்டும் அந்த சூழ்நிலை உருவாகிறதா? என்கிற அளவுக்கு சமீபத்திய ஒரு படத்தின் டீசர் இடம் பிடித்துள்ளது.

எங்கிட்ட மோதாதே படத்தில் நட்டி ரஜினி ரசிகராகவும் மற்றும் ராஜாஜி கமல் ரசிகராகவும் நடித்துள்ளனர்.

இந்த டீசரில் ரஜினி, கமலை விட அவர்களது ரசிகர்களுக்கு பவர் அதிகம் என்ற வசனங்களும் இடம்பிடித்துள்ளது.

இப்படம் பார்க்கையில் இவர்களது ரசிகர்கள் மோதிக் கொள்வார்களோ என்ற அச்சமும் கூடவே வளர்கிறது.

ராமு செல்லப்பா இயக்கியுள்ள இப்படத்தில் பார்வதி நாயர், சஞ்சிதா ஷெட்டி, ராதாரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ள இப்படத்தை ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

செல்வராகவனை அடுத்து, கௌதம் மேனனுடன் சந்தானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தில்லுக்கு துட்டு படத்தை தொடர்ந்து, சர்வம் சுந்தரம் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் சந்தானம்.

இதனிடையில் ராஜேஷ் இயக்கத்தில் கடவுள் இருக்கான் குமாரு படத்தில் கௌரவ தோற்றத்தில் நடிக்கிறார்.

இதன்பின்னர் மீண்டும் ஹீரோவாக செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில நடிக்கும் போதே கௌதம் மேனன் இயக்கும் ஒரு குறுகிய கால படத்திலும் நாயகனாக நடிக்கிறாராம்.

காமெடியான ஜொலித்த சந்தானம் தற்போது முன்னணி இயக்குனர்களின் படங்களில் ஹீரோவாக நடிப்பது திரையுலகை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

60 நாட்களில் விஜய்சேதுபதியின் 3 படங்கள்; சூப்பர் ஜி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இரண்டு வருடங்களுக்கு விஜய்சேதுபதியின் கால்ஷீட் டைரி நிரம்பி வழிகிறது.

அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி விறுவிறுப்பாக முடித்து கொடுத்து வருகிறார்.

வருகிற ஆகஸ்ட் 12ஆம் தேதி சீனுராமசாமி இயக்கத்தில் நடித்துள்ள தர்மதுரை படம் ரிலீஸாகவுள்ளது.

இதனையடுத்து செப்டம்பர் இரண்டாம் வாரத்தில், மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆண்டவன் கட்டளை படம் வெளியாகிறது.

அக்டோபர் 7ஆம் தேதி, ரத்னசிவா இயக்கியுள்ள றெக்க படம் ரிலீஸ் ஆகிறது.

கிட்டதட்ட 60 நாட்களில் விஜய்சேதுபதியின் 3 படங்கள் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜி.வி.பிரகாஷின் அம்மா தயாரிக்கும் படத்திற்கு இப்படியொரு பெயரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியும், ஜி.வி.பிரகாஷின் அம்மாவுமான ரஹைனா தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கிறார்.

‘யோகி அண்ட் ஃபிரெண்ட்ஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி முதல் படமாக ‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’ என்ற படத்தை தயாரிக்கிறார்.

இவருடன் சுபா மற்றும் வாசுகி ஆகியோரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

அசார் ஹீரோவாக நடிக்க, சஞ்சிதா ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். விஜய் டிவி புகழ் விக்னேஷ் கார்த்திக் இயக்கவுள்ளார்.

இவர்களுடன் யோகி பாபு, மன்சூர் அலிகான், ‘வழக்கு என் 18/9’ புகழ் முத்துராமன், உமா பத்மநாபன், ‘இருக்கு ஆனா இல்ல’ புகழ் ஏதேன், சிங்கப்பூர் தீபன், விஜய் டிவி ராமர், டாக்டர் ஷர்மிலி மற்றும் விஜய் டிவி அர்ச்சனா ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு ஏ.ஆர். ரெஹானாவே இசையமைக்கிறார். படத்தொகுப்பை பிரேம் குமார் கவனிக்க, ஒளிப்பதிவாளராக வம்ஷிதரன் பணிபுரிய இருக்கிறார்.

தலைக்கு எண்ணெய் வைக்காததால், படத்தின் நாயகன் ஒரு பிரச்சனையில் மாட்டி கொள்கிறாராம். அதிலிருந்து தப்பிக்க அவர் என்ன செய்கிறார்? என்பதை படத்தின் ஒருவரிக் கதை என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தன் மகன் ஜிவி. பிரகாஷ் நாயகனாக நடிக்கவுள்ள படத்தை தயாரிக்கிறாராம் ஏ.ஆர்.ரஹைனா.

அருண் விஜய்யுடன் இணைந்த த்ரிஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹீரோவாக பல படங்களில் நடித்து வந்த அருண் விஜய்க்கு ‘என்னை அறிந்தால்’ படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

இதில் அஜித்-த்ரிஷா நாயகன் நாயகியாக நடிக்க, வில்லனாக அசத்தியிருந்தார் அருண்விஜய்.

தற்போது மீண்டும் ஹீரோவாக அறிவழகன் இயக்கியுள்ள ‘குற்றம் 23’ படத்தில் நடித்துள்ளார்.

மெடிக்கல் க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் நாயகியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார்.

ஐஸ் இன் சினிமாஸ் என்டர்டெயின்மென்ட் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார் அருண் விஜய். இசை விஷால் சந்திரசேகர்.

இந்நிலையில் என்னை அறிந்தால் படத்தின் மூலம் கிடைத்த நட்பினால், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை த்ரிஷா வெளியிட்டுள்ளார்.

More Articles
Follows