‘உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு ‘காஸி’ சமர்ப்பணம்…’ ராணா

‘உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு ‘காஸி’ சமர்ப்பணம்…’ ராணா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ghazhi Rana1971ல் இந்தியாவிற்க்கும் பாகிஸ்தானிற்க்கும் இடையே நடந்த போரின் போது, இதுவரை யாரும் அறிந்திராத போர்க்கதைதான் இந்த காஸி.

ப்ளூ ஃபிஸ் என்ற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட இப்படமானது இதுவரை இந்திய சினிமாவில் எடுக்கப்பட்ட தேசப்பற்று படங்களில் தனித்துவம் பெற்ற படமாகும்.

முழுக்க முழுக்க கடலுக்கடியில் நடக்கும் யுத்தத்தினை நவீன தொழில்நுடபத்துடன் தத்ரூபமாக கண்முன் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சங்கல்ப்.

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இப்படத்தின் நாயகன் ராணா டகுபதி, இயக்குனர் சங்கல்ப், படத்தின் இசை அமைப்பாளர் கே, பி.வி.பி யின் நிர்வாக இயக்குனருமான கே.கேயும் கலந்து கொண்டார்.

படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இப்படத்தின் நாயகன் ராணா டகுபதி பேசிய போது…

என்னுடைய சிறுவயது காலங்களில் கேள்விபட்ட காஸி போர் தான் இப்படத்தின் கதை.

ப்ளூ ஃபிஸ் என்ற புத்தகத்தை எழுதிய இயக்குனர் சங்கல்ப் முதலில் இதை ஒரு குறும்படமாக இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் இப்படம் முழுநீள திரைப்படமாக தற்போது வெளிவந்துள்ளது.

இப்படமானது விசாகபட்டிணத்தில் 71 நாட்கள் நடந்த யாரும் அறிந்திராத கடலுக்கடியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது.

போர்களத்தில் நமக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு இப்படம் பெருமை சேர்க்கும் என்றும்,ஒரு நீர்மூழ்கி கப்பலில் கடலுக்கடியில் வாழும் கடற்படை வீரர்களின் வாழ்க்கையையும், அவர்களின் ஒழுக்கத்தையும் இப்படத்தில் நீங்கள் பார்க்கலாம் என்று கூறினார்.

இப்படத்தின் இயக்குனர் சங்கல்ப் பேசுகையில்…

என்னுடைய முதல் படமே ஒரு சொல்லபடாத உண்மை சம்பவத்தை சொல்வதில் பெருமை கொள்கிறேன் என்றும், இப்படத்தை நான் இயக்கியதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன் என கூறினார்.

இசையமைப்பாளர் கே பேசுகையில்…

இந்திய திரையுலக வரலாற்றில் இப்படம் முற்றிலும் மாறுபட்ட ஒரு முக்கிய திரைப்படம். முற்றிலும் புதிய களத்தை கொண்டது. படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை தனித்தன்மை கொண்ட இப்படம், என் சினிமா வாழ்க்கையில் என்னை அடுத்த இடத்திற்கு கொண்டு செல்லும் என கூறினார்.

இந்திய சினிமா வரலாற்றில் பல தேசப்பற்று படங்கள் வந்திருந்தாலும், சொல்லபடாத வரலாற்றை சொல்லிய இந்த காஸி இனி வரும் காலங்களில் சொல்லும் படியான வரலாற்றை படைக்கும்.

Rana Dagubaati shares his experience with Ghazi movie

Ghazi movie team

‘தண்டனை பெற்ற சசிகலா அதுக்கும் பதில் சொல்லனும்..’ கௌதமி

‘தண்டனை பெற்ற சசிகலா அதுக்கும் பதில் சொல்லனும்..’ கௌதமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gautamiசொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ளனர்.

இதுகுறித்து பிரபலங்கள் பலரும் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து கௌதமி கூறும்போது…

தற்போது ஊழல் செய்த குற்றத்திற்காக சசிகலாவுக்கு தண்டனை கிடைத்துள்ளது.

மறைந்த முதல்வர் அம்மா ஜெயலலிதாவின் மரணத்திற்கும் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

Gautami ‏@gautamitads
#sasikala has been convicted for corruption. She has to answer for #Amma death also Both cases don’t carry equal sentencing #JusticeForAmma

ஜெயம் ரவி-ஆர்யாவின் பிரம்மாண்ட கூட்டணியில் பிரபல நடிகை

ஜெயம் ரவி-ஆர்யாவின் பிரம்மாண்ட கூட்டணியில் பிரபல நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jayamravi aryaசுந்தர் சி இயக்கத்தில் உருவாகவுள்ள ‘சங்கமித்ரா’ படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மிகமிகப் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.

ரூ. 100 கோடிக்கும் மேல் செலவில் இப்படம் உருவாகவிருக்கிறது.

கிட்டதட்ட இது சுந்தர் சியின் கனவுப்படம் என்றே சொல்லலாம்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா இணைந்து நடிக்கின்றனர்.

இந்நிலையில் இதில் நாயகியாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறாராம்.

Shruthihassan joins with Jayam Ravi and Arya

கபாலி-வேதாளம்-பைரவா-சிங்கம்3… யார் வசூல் மன்னன்.?

கபாலி-வேதாளம்-பைரவா-சிங்கம்3… யார் வசூல் மன்னன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kabali Vedhalam Bairavaa Singam3 Who is box office Kingதமிழ்நாட்டை போன்றே மலேசியாவிலும் தமிழ் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

இதனாலேயே பெரும்பாலான படங்களில் மலேசியா காட்சிகள் அதிகம் இடம் பெற்று வருகின்றது.

இந்நிலையில் அண்மையில் வெளியான சிங்கம் 3 படத்தின் வசூல் விவரங்கள் தெரிய வந்துள்ளது.

இதில் ஓப்பனிங் வசூலாக சூர்யா நடித்த சிங்கம்-3 திரைப்படம் ரூ 5.73 கோடி வசூல் செய்துள்ளதாம்.

இது விஜய் நடித்த பைரவா படத்தை விட அதிகம் என கூறப்படுகிறது.

ஆனால் அஜித் நடித்த வேதாளம் படத்தின் வசூலை முறியடிக்கவில்லையாம்.

வேதாளம் ஓப்பனிங் வசூலில் ரூ 6 கோடியை வசூல் செய்திருந்ததாம்.

அப்படியென்றால் யாருக்கு முதல் இடம் என்று உங்களுக்கு தெரிந்திருக்குமே. சாட்சாத் கபாலிதான்.

மலேசியாவில் ஓப்பனிங் வசூலாக ரூ 7 கோடியை வசூல் செய்து என்றும் வசூல் மன்னனாக ரஜினி இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சசிகலா குற்றவாளி தீர்ப்பு; உங்க ஸ்டார்ஸ் என்ன சொல்றாங்க..?

சசிகலா குற்றவாளி தீர்ப்பு; உங்க ஸ்டார்ஸ் என்ன சொல்றாங்க..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sasikalaசொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதால், அவர் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து சினிமா பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

அவற்றில் சில…

பழைய பாட்டுத்தான் இருந்தாலும்…

தப்பான ஆளு எதிலும் வெல்லும் ஏடா கூடம்..

எப்போதும் இல்லை காலம் மாறும் ஞாயம் வெல்லும்..
— Kamal Haasan (@ikamalhaasan) February 14, 2017

 

As a citizen of Tamilnadu I am relieved n happy that my state is safe..a dark era which was threatening 2 spell a gloom of disaster is over.
— khushbusundar (@khushsundar) February 14, 2017

 

justice prevails….yahoooooooo..celebration time…
— khushbusundar (@khushsundar) February 14, 2017

 

— sripriya (@sripriya) February 14, 2017

 

Faith restored
— Srinivas singer (@singersrinivas) February 14, 2017

 

3 per Ullah …125 veliye.. patharai udan mudindhadhu yeldrai..
— arulnithi tamilarasu (@arulnithitamil) February 14, 2017

 

Mega serials have serious competition
— Radikaa Sarathkumar (@realradikaa) February 14, 2017

 

Truth wins Vaaimai Vellum Really happy for our ChiefMinister @CMOTamilNadu Sincere thanks for an honest judgement
— Shanthnu Buddy (@imKBRshanthnu) February 14, 2017

 

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்
— Seenu Ramasamy (@seenuramasamy) February 14, 2017

 

சட்டம் என் கையில்”என பணம் மார்தட்டிக்கொள்ளவிடாமல்,
சட்டம் சத்தியத்தின் பக்கமே என போராடிய நீதியின் ஆச்சாரியார்களுக்கு வணக்கமும் நன்றியும்
— R.Parthiban (@rparthiepan) February 14, 2017

 

There is actually no cause for celebration on both sides. Remember what the trial court judgement is and what it implies.
— arvind swami (@thearvindswami) February 14, 2017

 

The best day for us❤there is still law and justice left that gives us hope towards these ppl #sasikala u deserve this.a nightmare has ended
— suza kumar (@suza888) February 14, 2017

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி; கோர்ட் தீர்ப்பு முழுவிவரம்

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி; கோர்ட் தீர்ப்பு முழுவிவரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sasikala DA Case Verdictசொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை என தீர்ப்பளித்து உள்ளது.

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்தவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, பெங்களூரு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா அளித்த தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டனர்.

இந்த வழக்கில் கர்நாடக நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

குற்றவாளிகள் அனைவரும் உடனடியாக நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.

பெங்களூரு நீதிமன்ற நீதிபதி குன்ஹா உத்தரவின்படி சசிகலா உள்ளிட்ட 3 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.10 கோடி அபராதம் விதித்ததும் நடைமுறைக்கு வந்தது.

குற்றவாளிகள் அனைவரும் உடனே சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவு

குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் முதலமைச்சராகும் வாய்ப்பை இழந்தார் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா.

இதில் முதல் குற்றவாளியான ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதால், அவர் இதில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரடிப்படையினர் 200க்கும் மேற்பட்டோர் கூவத்தூர் விடுதிக்கு சென்றுள்ளனர்.

Sasikala DA Case Verdict

More Articles
Follows