“பிளான் பண்ணி பண்ணனும்” படத்திற்காக ஃபோக் பாடல் பாடிய ரம்யா நம்பீசன் !

“பிளான் பண்ணி பண்ணனும்” படத்திற்காக ஃபோக் பாடல் பாடிய ரம்யா நம்பீசன் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ramya Nambeesanரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிப்பில் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கும் “பிளான் பண்ணி பண்ணனும்” படத்தலைப்பு வெளியீட்டிலிருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு கூடியிருக்கிறது. காமெடி நாயகர்கள் பலர் இணைந்திருக்கும் இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், திரையரங்கு குலுங்கும், காமெடி சரவெடிக்கு உறுதிகூறும்படி அமைந்துள்ளது. யுவன் சங்கர் ராஜாவின் இசை இளைஞர்களை உள்ளிழுக்கும் அதே நேரம் படத்திற்கும் பெரும் பலமாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுற்ற நிலையில் தற்போது போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் இப்படத்திற்காக ஒரு ஃபோக் பாடலை யுவன் சங்கர் ராஜா இசையில் நடிகை ரம்யா நம்பீசன் பாடியுள்ளார். யுவன் சங்கர் ராஜாவுடன் “பியார் பிரேமா காதல்” படத்தில் இணைந்து High on love பாடலை எழுதிய பாரதியாரின் கொள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி இப்பாடலையும் எழுதியுள்ளார். இப்பாடல் கண்ணைக்கவரும் வேகமான் நகரின் அழகிய இடங்களில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களை ஈர்க்கும் வகையில் காமெடி கலந்த கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் உடன் எம். எஸ். பாஸ்கர், சந்தான பாரதி, ரேகா, பாலசரவணன், மாரிமுத்து, விஜி சந்திரசேகர், ரோபோ சங்கர், முனீஷ்காந்த், ஆடுகளம் நரேன், பழைய ஜோக் தங்க துரை, மதுரை சுஜாதா என தமிழின் முக்கியமான கலைஞர்கள் இப்படத்தில் பங்குகொண்டுள்ளார்கள்.

ராஜேஷ் குமார் மற்றும் L. சிந்தன் இணைந்து Positive Print Studios சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். B.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஷாம் RDX படத்தொகுப்பு செய்ய, சரவணன் கலை இயக்கம் செய்துள்ளார். நடன அமைப்பை கல்யாண் அமைக்க, ஸ்டன்னர் ஷாம் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றியுள்ளார். AC கருணாமூர்த்தி கதை எழுத RK வசனம் எழுதியுள்ளார். 2020 மார்ச் மாதம் திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

“ காவல்துறை உங்கள் நண்பன் “ பட விநியோக உரிமையை Creative Entertainers சார்பில் தனஞ்செயன் கைப்பற்றியுள்ளார் !

“ காவல்துறை உங்கள் நண்பன் “ பட விநியோக உரிமையை Creative Entertainers சார்பில் தனஞ்செயன் கைப்பற்றியுள்ளார் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaval Thurai Ungal Nanbanதயாரிப்பிலும், விநியோகாத்திலும் குறிப்பிடத்தக்க வெற்றிகளை குவித்து பெருமையுடன் வலம் வரும் Creative Entertainers நிறுவனர் G தனஞ்செயன் அவர்கள் சுரேஷ் ரவி – ரவீனா நடிப்பில் உருவாகியிருக்கும் “காவல் துறை உங்கள் நண்பன்” படத்தின் விநியோக உரிமையை கைப்பற்றியுள்ளார்.

தயாரிப்பாளர் G. தனஞ்செயன் கூறியதாவது…

நாங்கள் Creative Entertainers சார்பில் தரமான கதைகள் கொண்ட படங்களையே தயாரிப்பதையும், விநியோகிப்பதையும் முதல் நோக்கமாக கொண்டு இயங்கி வருகிறோம். ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெறும் அதே நேரம் அவர்களுக்கு தரமான கதைகளை தரவேண்டும் என்பதை முக்கிய குறிக்கோளாக கொண்டிருக்கிறோம். இந்த நோக்கம் 2020 ஆம் வருடத்தில் பல நல்ல தரமான படங்களை விநியோகிக்கும் பயணத்தில் எங்களை கொண்டுவந்திருக்கிறது. இப்பயணத்தில் “காவல்துறை உங்கள் நண்பன்” படம் ஒரு அற்புதமான தேர்வாக எங்கள் முன்னால் வந்தது. இப்படத்தை பார்த்தபோது தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் எங்கள் நிறுவனத்திற்கு பெருமை சேர்க்கும் படைப்பாக இப்படம் விளங்கும் என்று தோன்றியது. மிக வலுவான கதையும், திரைக்கதையும் கொண்ட இப்படம் இயக்குநர் RDM ன் இயக்கத்தில் எதார்த்தமான பாணியில் வெகு அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகர்களை ஒரு நொடி அசைய விடாமல் கட்டிப்போடும் தன்மையில் அசத்தலாக படத்தை தந்துள்ளார் இயக்குநர் RDM. படத்தின் ஒவ்வொரு பாத்திரத்தையும் ஏற்றிருக்கும் சுரேஷ் ரவி, ரவீனா, மைம் கோபி, சரத் ரவி, RJ முன்னா, சூப்பர் குட் சுப்பிரமணி ஆகியோர் மிக அற்புதமான நடிப்பை தந்துள்ளார்கள். படத்தின் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் பிரமிப்பான பங்களிப்பை தந்துள்ளார்கள். இத்திரைப்படத்தை பிரமாண்டமாக வெளியிட, திரையரங்கு எண்ணிக்கை உட்பட விநியோக திட்டங்களை வகுத்து வருகிறோம். மிக விரைவில் வெளியீட்டு தேதி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளோம் என்றார்.

ஆதித்யா, சூர்யா இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். விஷ்ணு ஶ்ரீ ஒளிப்பதிவு செய்ய, வடிவேல் மற்றும் விமல் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளனர். ராஜேஷ் கலை இயக்கம் செய்ய ஓம் பிரகாஷ் சண்டைப்பயிற்சி இயக்கம் செய்துள்ளார். வசனத்துடன் பாடல்களையும் எழுதியுள்ளார் ஞானகர்வேல்.

B. பாஸ்கரன், P. ராஜ பாண்டியன் மற்றும் சுரேஷ் ரவி BR Talkies Corporation சார்பில் White Moon Talkies நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்கள். Creative Entertainers நிறுவனம் சார்பில் G.தனஞ்செயன் இப்படத்தை விநியோகம் செய்கிறார்.

அருண் விஜய் நடிப்பில் “சினம்” மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம் !

அருண் விஜய் நடிப்பில் “சினம்” மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sinam Arun Vijayஉழைப்பிற்கான பலன் ஒரு நாள் கிடைத்தே தீரும். திறமை எப்போதும் கவனிக்கபடாமல் போகாது என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குபவர் நடிகர் அருண் விஜய். சமீபமாக வெகு வித்தியாசமான படங்களில், மிகத்தேர்ந்த நடிப்பை வழங்கி ரசிகர்களின் மனங்களை அள்ளியிருக்கும் அருண் விஜய், 2020 ஆம் ஆண்டில் எதிர்பார்ப்பை எகிறச்செய்யும் படங்களில் வரிசையாக நடித்து வருகிறார்.

அறிவழகன் – அருண் விஜய் கூட்டணி மீண்டும் இணைகிறது

அவர் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “மாஃபியா” படம் 2020 பிப்ரவரி 21 ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. இன்னொரு பக்கம் நடிகர் விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடிக்கும் “அக்னி சிறகுகள்” படம் முடியும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் காவல் அதிகாரியாக அவர் நடிக்கும் “சினம்” படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது.

இது குறித்து நடிகர் அருண் விஜய் கூறியதாவது…

இந்த 2020 ஆம் வருடம் நிறைய நேர்மறை அம்சங்களை வாழ்வில் கொண்டுவந்துள்ளது. ரசிகர்களின் அன்பும் ,பேராதரவும் மட்டுமல்லாமல் எனது வரப்போகும் படங்களின் மீது அவர்கள் காட்டும் பேரார்வம் என்னை மகிழ்ச்சியில் திக்குமுக்காட செய்துள்ளது. அவர்களின் அன்பு இன்னும் கடுமையாக உழைக்க எனக்கு பெரும் ஊக்கமாக அமைந்திருக்கிறது. “சினம்” திரைப்படம் திரில்லர் ஆக்‌ஷன் விரும்பிகளுக்கு பெரு விருந்தாக இருக்கும் அதே நேரம் உணர்வுப்பூர்வமாக கவரும்படி இருக்கும். கதை சொல்லும் விதத்திலும் கதாப்பாத்திரங்களை வடிவமைப்பதிலும் இயக்குநர் குமரவேலன் வித்தகராக இருக்கிறார். மேலும் படப்பிடிப்பில் அவரது தொலைநோக்கு தன்மை பெரும் சிக்கல்களையும் எளிதாக தீர்த்துவிடுகிறது. ரசிகர்களை மனதில் வைத்து மிக அருமையாக படத்தை இயக்கி வருகிறார். மிக விரைவில் படத்தின் படப்பிடிப்பை முடிக்கவுள்ளோம். டீஸர், இசை வெளியீடு, திரை வெளியீடு பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

Movie Slides Pvt Ltd சார்பில் R.விஜய குமார் இப்படத்தை தயாரிக்கிறார். தேசிய விருது பெற்ற இயக்குநர் GNR குமரவேலன் “சினம்” படத்தை எழுதி இயக்குகிறார். அருண் விஜய் காவல் அதிகாரி பாத்திரத்தில் நாயகனாக நடிக்க பாலக் லால்வானி நாயகியாக நடிக்கிறார். காளிவெங்கட் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். “சகா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஒடு ராஜா”படப்புகழ் ஷபீர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய ராஜா முகம்மது படத்தொகுப்பு செய்கிறார். மைக்கேல் கலை இயக்கம் செய்ய சில்வா சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார். மதன் கார்கி, பிரியன் ஏக்நாத் பாடல்கள் எழுத பவன் வடிவமைப்பை மேற்கொள்கிறார்.

வடிவேலு, சந்தானத்தை தொடர்ந்து கதைநாயகனாக நடிக்கிறார் ” மன்சூரலிகான் “

வடிவேலு, சந்தானத்தை தொடர்ந்து கதைநாயகனாக நடிக்கிறார் ” மன்சூரலிகான் “

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mansoor ali khanதமிழ்சினிமாவில் தனது தனித்துவ நடிப்பால் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் நடிகர் மன்சூர் அலிகான். சென்றாண்டு ஜாக்பாட் உள்ளிட்ட பல படங்களில் அசத்தியவர் இந்தாண்டு நடிகர் சந்தானம், அதர்வா, விதார்த், விமல், ரெஜினா என நட்சத்திரங்களுடன் பத்திற்கும் மேலான படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். 2020- ஆம் ஆண்டில் பெரிய நட்சத்திரங்களோடு கூட்டணி வைத்து நடித்து வரும் அவர் ஒரு முக்கியமான பெரிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தில் கதையின் நாயகனாக தோன்றி அசத்தவுள்ளார்.

நடிப்பிற்காக தன் உடலை வருத்தி வொர்க் அவுட் செய்வதை அர்ப்பணிப்பு மிகுந்த நடிகர்கள் தான் செய்வார்கள். அதை மன்சூர் அலிகானும் செய்து வருகிறார். கதையின் நாயகனாக தோன்றவிருக்கும் படத்திற்காக தன் உடலின் எடையை கணிசமாக குறைத்திருக்கிறார். 120 கிலோ எடை இருந்த அவர் தற்போது 96 கிலோவாக குறைத்துள்ளாராம். இந்த 2020-ஆம் ஆண்டு மன்சூர் அலிகானுக்கு திரையுலகில் மகத்தான ஆண்டாக துவங்கி இருக்கிறது என்கிறார்.

கடைசி நேரத்தில் ட்விஸ்ட் .. சந்தானம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி

கடைசி நேரத்தில் ட்விஸ்ட் .. சந்தானம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

santhanamசந்தானம் நடிப்பில் “டகால்டி” மற்றும் “சர்வர் சுந்தரம்” ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் ஜனவரி 31 வெளியாகவதாக அறிவிக்கப்பட்டது. ஒரே நடிகரின் இரு படங்கள் ஒரே நாளில் வெளியானால் வசூல் பாதிக்கும் என திரையரங்கு வட்டாரம் தெரிவித்ததையொட்டி இரு தயாரிப்பாளர்கள் இடையேயும் தயாரிப்பாளர் சங்கத்தில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

இதனையடுத்து “டகால்டி” மற்றும் “சர்வர் சுந்தரம்” ஆகிய இரு படங்களின் தயாரிப்பாளர்களும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

இச்சந்திப்பில் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் பாரதி ராஜா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, பெப்சி சிவா, தயாரிப்பாளர் ராஜன் “சர்வர் சுந்தரம்” படத்தயாரிப்பாளர் செல்வகுமார் மற்றும் “டகால்டி” படத்தயாரிப்பாளர் சௌத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியது…

வரும் 31 ந்தேதி சர்வர் சுந்தரம், டகால்டி படங்கள் வருவதாக விளம்பரங்கள் வெளிவந்தன. இரு படங்களும் ஒரே நாளில் வருவதால் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பாரதிராஜா அறிவுரையை ஏற்று இப்போது டகால்டி மட்டும் 31ந்தேதி வருகிறது. சர்வர் சுந்தரம் பிப்ரவரி 14 ல் வருவதாக ஒப்புக்கொண்டனர். யாருடைய படத்தையும் இந்த தேதியில் வாருங்கள் என சொல்லும் உரிமை யாருக்கும் இல்லை. ஆனால் சினிமாவின் நலம் கருதி எங்களுக்குள் பேசி இந்த முடிவுக்கு வந்தோம். இந்த முடிவுக்கு ஒத்துழைத்த இரு தயாரிப்பாளர்களுக்கும் நன்றி.

மீண்டும் இணைந்த வெற்றி கூட்டணி: சந்தானம் – ஜான்சன்.கே – சந்தோஷ் நாராயணன்

“சர்வர் சுந்தரம்” படத்தயாரிப்பாளர் செல்வகுமார் பேசியது ….

இரண்டு வருடங்களுக்கு மேலாக போராடி இப்போது இந்தப்படத்தை ரிலீஸ் செய்ய முற்பட்டோம். சந்தானம் அவர்களின் மற்றொரு படமான “டகால்டி” படமும் அதே நாளில் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டது. இந்தப்பிரச்சனையில் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இருவருக்கும் நலம் பயக்கும் வகையில் எங்கள் படம் பிப்ரவரி 14 படத்தை ரிலீஸ் செய்ய ஒப்புக்கொண்டோம். இது சினிமாவுக்கும் நல்லது, எங்கள் இருவருக்கும் நல்லது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. படம் வெளியிடுவது சாதாரண வேலையில்லை. எங்கள் படத்தை கண்டிப்பாக பிப்ரவரி 14 திரைக்கு கொண்டு வருவோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.

“டகால்டி” படத்தயாரிப்பாளர் சௌத்ரி அவர்கள் பேசியது…

இங்கு எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை. எனக்கு இப்படம் தலைப்பிரசவம் போன்றது. எல்லோருக்கும் முதல் படம் என்பது ஒரு குழந்தை பிறப்பது போன்றது தான். சர்வர் சுந்தரம் தயாரிப்பாளர் எங்களுக்காக விட்டுக்கொடுத்துள்ளார். அவருக்கு மிக்க நன்றி. இதில் ஒத்துழைத்த தயாரிப்பாளர் சங்கத்திற்கும் மற்றும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி

தயாரிப்பாளர் சங்கத்தலைவர் பாரதிராஜா பேசியது…

இது ஒரு ஆச்சர்யமான மேடை. இந்தப்பிரச்சனையில் ஒரு பெரும் கத்திச்சண்டை நடந்து கொண்டிருந்தது. என்னதான் பிரச்சனை எனக் கேட்கலாம் என்று போனால் இருவருமே கத்தியை கீழே போட்டு விட்டார்கள். இருவர் பக்கமும் நியாயம் இருக்கிறது. இருவரும் மிகவும் கஷ்டப்பட்டு படம் எடுத்துள்ளார்கள். இக்காலத்தில் படத்தை எடுப்பதை விட அதை கொண்டு சேர்ப்பது அதை விட கஷ்டமானது. இந்தப் பிரச்சனையில் எங்கள் தீர்ப்பை விட அதை ஏற்றுக்கொண்ட அவர்கள் மனது பெருந்தன்மையானது. இருவரும் தங்கமான மனிதர்கள். சர்வர் சுந்தரம் படத்தின் மீது எனக்கு கொஞ்சம் அன்பு அதிகம். அந்த தலைப்பின் மீதிலிருந்தே எனக்கு பல மலரும் நினைவுகள் உண்டு. நாகேஷ் நடித்த அந்தப்படம் முதலில் வந்தபோது நான் உதவி இயக்குநர் கூட இல்லை. தற்போது இப்படத்தின் தயாரிப்பாளர் செல்வகுமார் விட்டுக்கொடுத்துள்ளார். தங்கமான மனிதர் அவர். இருவரும் ஒரே நேரத்தில் வந்தால் அவர்களுக்கும் நஷ்டம் சினிமாவுக்கும் நஷ்டம். இருவரும் சுமூகமாக ஒத்துக்கொண்டு இப்போது படத்தை வேறு வேறு தேதிகளில் ரிலீஸ் செய்கிறார்கள். இருவருக்கும் எனது நன்றிகள். இரு படங்களும் வெற்றி பெற எனது வாழ்த்துகள்.

BREAKING ரஜினி (எ) சிங்கத்திற்கு ஒன்னும் ஆகாது…. நாட்டையும் ஆளும் – நட்ராஜ்

BREAKING ரஜினி (எ) சிங்கத்திற்கு ஒன்னும் ஆகாது…. நாட்டையும் ஆளும் – நட்ராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nothing will happen to Lion Rajini Soon he will rule the state says Natrajமேன் Vs வைல்ட் என்ற நிகழச்சிக்காக கர்நாடகாவில் உள்ள பந்திபூர் காட்டுக்கு ரஜினிகாந்த் சென்றிருந்தார்.

இன்று ஒரு நாள் மட்டும் நடிகர் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டார்.

சூட்டிங்கை அவர் முடித்து வருவதற்குள் ரஜினிக்கு காயம் ஏற்பட்டதாகவும் உடனே சூட்டிங் கேன்சல் ஆகிவிட்டதாகவும் ஓரிரு டிவி சேனல்களில் பொய்யான செய்திகளை வெளியிட்டது.

ஆனால் சென்னை திரும்பிய ரஜினி தனக்கு ஒன்றும் ஆகவில்லை. காட்டில் உள்ள சின்ன சின்ன முட்கள் குத்தியது. அவ்வளவுதான். சூட்டிங் முடிந்துவிட்டது என செய்தியாளர்களிடம் கூறினார்.

ரஜினிக்கு விதிக்கப்பட்ட ரூ. 66.22 லட்சம் அபராதம் ரத்து; கோர்ட் அதிரடி

ஆனால் ரஜினிக்கு காயம் என்ற செய்தி காட்டுத் தீயாக பரவியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்ற நட்ராஜ் தன் ட்விட்டரில் இப்படி பதிவிட்டுள்ளார்.

N.Nataraja Subramani @natty_nataraj
ஒன்னும் ஆகாது.. போனது சிங்கம்…. காட்ட மட்டும் இல்ல நாட்டையும் ஆளும்….

Nothing will happen to Lion Rajini Soon he will rule the state says Natraj

More Articles
Follows