தமிழுக்கு வரும் ராம்சரண் படத்தில் மீண்டும் இணைந்த பிரசாந்த்-சினேகா

தமிழுக்கு வரும் ராம்சரண் படத்தில் மீண்டும் இணைந்த பிரசாந்த்-சினேகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ram Charan Starrer Vinaya Vidheya Rama Gets Dubbed In Tamil தெலுங்கு சூப்பர் ஹீரோ ராம் சரண் நாயகனாக நடிக்கும் நடிப்பில் மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட படமான “வினயை விதேயா ராமா” தமிழில் வெளியாகிறது.

பிரபல தெலுங்கு இயக்குனர் போயப்பட்டி சீனு இப்படத்தை இயக்குகிறார்.

‘பாரத் என்னும் நான்’ என்ற படத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்களின் மனதை கவர்ந்த கியாரா அத்வானி கதாநாயகியாகவும் விவேக் ஓப்ராய் வில்லனாகவும் நடிக்கிறார்கள்.

மேலும் பிரசாந்த், சினேகா, மதுமிதா, முகேஷ் ரிஷி, ஜெபி, ஹரீஷ் உத்தமன், ஆர்யன் ராஜேஷ், ரவி வர்மன் என்று பெரிய நட்சத்திர வரிசை மற்ற முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

தமிழில் ‘விரும்புகிறேன்’, ஆயுதம், பொன்னர் சங்கர் ஆகிய படங்களில் பிரசாந்த், சினேகா இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்ப பின்னணியில் காதல், கலகலப்பு, அரசியல், செண்டிமெண்ட், வன்முறை, சாஹசம், என்று பொழுது போக்கு அம்சங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்த பிரம்மாண்ட படமாக “வினயை விதேயா ராமா” உருவாகியுள்ளது.

தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்க ரிஷி பஞ்சாபி, பண்டி ரமேஷ் ஆகியோர் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளனர். இப்படத்தின் பாடல் காட்சிகள் பிரம்மாண்ட அரங்குகளில் படமாக்கப்பட்டுள்ளது.

கிளைமாக்ஸ் சண்டை காட்சி படம் பிடிக்க/ படமாக்க மட்டும் பதினோரு கோடி ரூபாய் சிலவிடப்பட்டுள்ளது.கனல் கண்ணன் சண்டை பயிற்சி அளித்துள்ளார்.

டி வி வி என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரித்து பிரகாஷ் பிலிம்ஸ் வழங்கும் “வினயை விதேயா ராமா”பிப்ரவரி முதல் வாரம் தமிழ் நாடு மற்றும் கேரளமெங்கும் வெளியாகிறது.

Ram Charan Starrer Vinaya Vidheya Rama Gets Dubbed In Tamil

பிருத்வி-சாந்தினியின் காதல் முன்னேற்ற கழகத்திற்கு ஆர்யா ஆதரவு

பிருத்வி-சாந்தினியின் காதல் முன்னேற்ற கழகத்திற்கு ஆர்யா ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arya will be launching Prithvi starrer Kaadhal Munnetra Kazhagam first lookபிரபல இயக்குனரும் நடிகருமான பாண்டியராஜ் அவர்களின் மகன் பிருத்வி நடித்து வரும் புதிய படத்திற்கு காதல் முன்னேற்ற கழகம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

பிருத்வியுடன் சாந்தினி நாயகியாக நடிக்கிறார். ரொமான்டிக் காமெடியாக இந்தப் படம் தயாராகிறது.

இவர்களுடன் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர், நாதஸ்வரம் முனிஸ் ராஜா, அமீர் ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய கதாப்பாத்திரத்தில் சிவசேனாதிபதி நடிக்கிறார்.

மாணிக் சத்யா என்பவர் இப்படத்தை இயக்கி வருகிறார்.

நத்தம் மாரியம்மன் மூவிஸ் கோபிநாத், ப்ளு ஹில்ஸ் புரொடக்சன்ஸ் சார்பாக மலர்கொடி முருகன், ஷாலினி புரொடக்சன்ஸ் ஆனந்த் மூவரும் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

ஒளிப்பதிவு – ஹாரிஸ் கிருஷ்ணன், இசை- பி.சி.சிவன்

இப்படம் பற்றி இயக்குனர் மாணிக் சத்யா கூறியதாவது…

1980 களில் நடக்கின்ற கதை. படப்பிடிப்பு சென்னை, ஊட்டி, கடலூர் மாவட்டம், திட்டக்குடி, விருத்தாசலம், பெரம்பலூர் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை ஜனவரி 12ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடிகர் ஆர்யா வெளியிட உள்ளார்.

Arya will be launching Prithvi starrer Kaadhal Munnetra Kazhagam first look

சென்னை வசூலில் பேட்ட கட்டிய கோட்ட; வீழ்ந்தது விஸ்வாசம்

சென்னை வசூலில் பேட்ட கட்டிய கோட்ட; வீழ்ந்தது விஸ்வாசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Petta beat Viswasam collection in Chennai Box officeவருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று ஜனவரி 10ஆம் தேதி ரஜினிகாந்த் நடித்த பேட்ட மற்றும் அஜித் நடித்த விஸ்வாசம் ஆகிய இரு திரைப்படங்களும் வெளியானது.

இந்த இரண்டு படங்களுக்கும் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. எனவே இரு தரப்பு ரசிகர்களும் அதிகாலையிலேயே தியேட்டர்களில் குவிந்தனர்.

20 வருடங்களுக்கு முன் பார்த்த அதே ரஜினியை பார்த்தோம். ரஜினி தான் என்றுமே சூப்பர் ஸ்டார் என பேட்ட படத்தை பார்த்த ரசிகர்கள் தெரிவித்தனர்.

அதுபோல் விஸ்வாசம் ஒரு குடும்ப படம். முதல் பாதியை விட 2ஆம் பாதியில் அஜித் கண்கலங்க வைத்துவிட்டார் என விஸ்வாசம் பற்றி கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் முதல் நாள் சென்னை வசூல் குறித்த விவரங்கள் கிடைத்துள்ளன.

பேட்ட படம் சென்னையில் மட்டும் முதல் நாளில் ரூ. 1.10 கோடியை வசூலித்துள்ளது. ஆனால் விஸ்வாசம் ரூ. 89 லட்சங்களை மட்டுமே பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பு : தமிழக வசூல் நிலவரங்கள் இதுவரை முழுமையாக கிடைக்கவில்லை. இதுவரை வந்துள்ள தகவல்களும் உறுதியானதாக இல்லை.

Petta beat Viswasam collection in Chennai Box office

காண்டீபன்-மிதுனா இணையும் *ஓவியா* டீசரை வெளியிட்டார் பாக்யராஜ்

காண்டீபன்-மிதுனா இணையும் *ஓவியா* டீசரை வெளியிட்டார் பாக்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Bhagyaraj launched Oviya movie teaser சமீபத்தில் ஓவியா படத்தின் டீஸர் இயக்குனர் கே.பாக்யாராஜ் அவர்களால் சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் சிறப்பு தொகுப்பாக வெளியிடப்பட்டது.

அந்நிகழ்ச்சியில் அப்படத்தின் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் திரு.காண்டீபன் ரங்கநாதன், மூத்த பத்திரிகையாளர் திரு.ஸ்ரீ நாத், எடிட்டர் திரு. சூரிய நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் கடலூரில் சிறப்பாக செயல் பட்டு வரும் டி.எஸ்.மீடியா என்ற குழுமம் சார்பாக இவ்விழா மிக நேர்த்தியாக நடைபெற்றது.

‘இமாலயன் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரித்து நடிக்கும் படம் ‘ஓவியா’.புதுமுக இயக்குனர் கஜன் சண்முகநாதன் என்பவர் இயக்கியிருக்கும் இந்தப்படத்திற்கு பத்மஜன் இசையமைக்கிறார்.

நிஷாந்தன் மற்றும் விபின் சந்திரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள்.

காண்டீபன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக நடிகை மிதுனா நடிக்கிறார். சுவிக்சா ஜெயரத்னம் எனும் குழந்தை நட்சத்திரம் ‘ஓவியா’வாக நடிக்கிறார்.

Director Bhagyaraj launched Oviya movie teaser

Director Bhagyaraj launched Oviya movie teaser

குருவாயூரப்பனால் எடப்பாடிக்கு மட்டும் ஏற்றம்.; கிரிஷ்ணம் இசை விழாவில் பாக்யராஜ் கிண்டல்

குருவாயூரப்பனால் எடப்பாடிக்கு மட்டும் ஏற்றம்.; கிரிஷ்ணம் இசை விழாவில் பாக்யராஜ் கிண்டல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

CM Edapadi Palanisamy got blessing from Guruvayurappan says Bhagyaraj in Krishnam audio launchஎடப்பாடி பழனிச்சாமிக்கு குருவாயூரப்பன் அருள் கிடைத்து உள்ளது என்று ‘கிரிஷ்ணம்’ பட பாடல்கள் வெளியீட்டு விழாவில் கே.பாக்யராஜ் வேடிக்கையாகப் பேசிக் கலகலப்பூட்டினார். இது பற்றிய விவரம் இதோ:

தயாரிப்பாளர் வாழ்வில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப் படையில் உருவாகியுள்ள படம் ‘கிரிஷ்ணம்’. இப்படத்தை பிஎன்பி சினிமாஸ் தமிழ்,தெலுங்கு, மலையாளம் மொழிகளில் தயாரித்துள்ளது. தினேஷ்பாபு ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. பாடல்களை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்டார்.படக் குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் படத்தின் தயாரிப்பாளர் பி.என்.பலராம் பேசும் போது ,

“இது என் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம். அற்புத அனுபவம். என் மகன் அக்ஷய் கிருஷ்ணனுக்கு ஒரு நோய் வந்து பெரும்பிரச்சினையாகி அவனால் பிழைக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறினார்கள்.

அவன் பிழைப்பதற்கு ஒரு சதவிகிதம் தான் உள்ளது. ஆபரேஷன் பெயிலியர் ஆவதற்கு 99 சதவிகிதம் உள்ளது என்றார்கள்.நான் அந்த ஒரு சதவிகிதத்தை குருவாயூரப்பன் மீதுள்ள நம்பிக்கையில் முழுதுமாக நம்பினேன்.

அப்படி ஒரு நம்பிக்கை. பயப்படவே இல்லை. என் மகன் பிழைத்து விட்டான். எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள். சொன்னால் யாரும் நம்பவில்லை.

ஆனால் என் வாழ்வில் நடந்த இந்த அற்புதத்தைப் பலரும் அறிய வேண்டுமல்லவா? அதற்காகவே படமாக எடுத்து குருவாயூரப்பனின் மஹிமையை உலகிற்குக் காட்ட விரும்பினேன். இது எல்லாருக்கும் தெரிய வேண்டும் என்றே இப்படத்தை எடுத்து இருக்கிறேன்.” என்றார்.

விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும் போது ,

” இங்கே திரையிடப்பட்ட காட்சிகளையும் பாடல் காட்சிகளையும் பார்க்கும் போது தினேஷ்பாபு இயக்குநர் என்பதை விட ஒளிப்பதிவாளராக கவனிக்க வைக்கும்படி சிறப்பாகச் செய்திருக்கிறார்.

இந்த ‘கிரிஷ்ணம்’ படம் உண்மைச் சம்பவம் என்று தயாரிப்பாளர் விரிவாகக் கூறினார். இதைக் கேள்விப்பட்டது மே அந்தக் கதையின் நாயகன் அக்ஷய் கிருஷ்ணனைப் பார்க்க ஆவலாக இருந்தேன்.

நிஜமாகேவே இது அற்புதமான சம்பவம் தான். கற்பனைக் கதைக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். உண்மைக்கதை என்றால் மனசுக்கு நெருக்கமாக இருக்கும். பார்ப்பவர் தங்களையும் அதில் அடையாளப்படுத்திக் கொள்ள முடியும். அப்படி ஒரு படமாக குருவாயூரப்பன் அருள் பற்றிப் பேசும் படமாக ‘கிரிஷ்ணம்’ படமும் இருக்கும் என நம்புகிறேன்.

தமிழக மக்களுக்கு சோதனை மேல் சோதனை. திருவாரூரில் இடைத் தேர்தல் இருந்தால் அங்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள். அது ரத்தாகிவிட்டது.

ரேசன் கார்டு உள்ளவர்கள் அனைவருக்கும் 1000 ரூபாய் என்றார்கள். அதன்பின்னர் ஐகோர்ட் எல்லாருக்கும் கொடுக்ககூடாது என கூறிவிட்டது.

மக்களுக்கு எப்பவுமே சோதனைதான் ஆனால் எடப்பாடிக்கு குருவாயூரப்பன் அருள் கிடைத்துள்ளது. அதான் எப்படியோ முதல்வராகிவிட்டார்.

என் வாழ்க்கையிலும் சில அற்புதங்கள் பார்த்த அனுபவம் உண்டு. எங்கள் ஊரில் பைத்தியம் போலப் பார்க்கப் பட்ட சாயம்மா என்ற பாட்டி ஒரு நாள் குறிசொல்லும் பெண்ணாக மாறிக் குறி சொல்ல ஆரம்பித்தார்.

பலருக்கும் சரியாக இருந்தது. நாங்கள் குடும்பத்துடன் அந்த ஊரை விட்டு வேறு ஊர் போனோம். மீண்டும் பல நாள் கழித்து அவரைப் பார்த்த போது என் அண்ணனுக்கு விபத்து போன்ற அசம்பாவிதங்கள் நடந்தது பற்றியெல்லாம் கூறினார்.

எங்களுக்கு ஆச்சரியம். என்னைப் பார்த்து நீ இன்னுமா இந்த ஊரை விட்டுப் போகவில்லை ? இங்கே இருக்காதே வெளியூர் போ என்றார். எனக்கு ஆச்சரியம். ஏனென்றால் நான் அப்போது சினிமா கனவில் இருந்தேன்.

பிறகு நான் சினிமாவுக்காக சென்னை புறப்பட்ட போது என் அண்ணன் ஒரு பெரிய ஜோதிடரை அழைத்து வந்தார். அவரோ எனக்குச் சினிமாவே சரிப்பட்டு வராது இரும்பு சம்பந்தப்பட்ட வேலைதான் சரி வரும் என்றார்.

நான் சினிமா தான் என்று பிடிவாதமாக இருந்தேன். என் அம்மாவிடம் சினிமாவில் கேமரா, ஸ்டாண்ட் ,டிராலி எல்லாம் இரும்புதான் என்னை நம்பு என்று சொல்லிவிட்டு புறப்பட்டேன். எங்களுக்கு ஒரு ஒர்க்க்ஷாப் இருந்தது.

அதில் என்னைப் இது என் அண்ணனின் ஏற்பாடாக இருக்குமோ என்று பிறகு நான் நினைத்தேன். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் உள்பட
கிரிஷ்ணம் குழுவினர் கேரளாவிலிருந்து வந்திருக்கிறார்கள். அவர்களை வரவேற்போம்.

நம் தமிழ் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு எங்கும் வரவேற்பு இருக்கிறது. இவர்களையும் வரவேற்போம்.” இவ்வாறு பாக்யராஜ் பேசினார்.

விழாவில் தயாரிப்பாளர் சங்கத்தின் ( கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், இயக்குநர் தினேஷ்பாபு, நாயகன் அக்ஷய் கிருஷ்ணன், பி.ஆர்.ஓ.யூனியன் தலைவர் விஜயமுரளி, செயலாளர் பெரு. துளசி பழனிவேல், மற்றும் ‘கிரிஷ்ணம்’ படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக விழாவில் செண்டை மேளம் முழங்க கதகளி நடனம்’ சிங்காரி நடனம் என நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தன.

CM Edapadi Palanisamy got blessing from Guruvayurappan says Bhagyaraj in Krishnam audio launch

Krishnam movie audio launch

பேட்ட முதல் காட்சியை பார்த்த தனுஷ்-சிவகார்த்திகேயன்-த்ரிஷா

பேட்ட முதல் காட்சியை பார்த்த தனுஷ்-சிவகார்த்திகேயன்-த்ரிஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

petta stillsகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி, திரிஷா, சிம்ரன், விஜய்சேதுபதி, சசிகுமார் ஆகியோர் நடிப்பில் உருவான பேட்ட திரைப்படம் இன்று வெளியானது.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் மட்டுமே இதுவரை வெளியாகி

எனவே ரஜினி ரசிகர்கள் இதனை திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், லதா ரஜினிகாந்த், நடிகர் தனுஷ், நடிகை திரிஷா உள்ளிட்டோர் ரோகிணி திரையரங்கிற்குச் சென்று பேட்ட திரைப்படத்தை முதல் காட்சி பார்த்தனர்.

அதுபோல் வெற்றி தியேட்டரில் சிவகார்த்திகேயன், ஆல்பர்ட் தியேட்டரில் கார்த்திக் சுப்பராஜ் & காசி தியேட்டரில் சன் & பேட்ட குடும்பத்தினர் பார்த்துள்ளனர்.

More Articles
Follows