தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 5 நாட்களாகவே தமிழகத்தை ஒரு சொல் ஆட்டிப் படைத்தது என்றால் அது கஜா தான்.
புயல் மையம் கொண்டுள்ளது. 800 கி.மீ. தொலைவில் உள்ளது. இன்று இரவு வரும். நாளை வரும்.
வலுவடைந்துள்ளது. வலுவிழந்துவிட்டது என பல்வேறு வானிலை தகவல்கள் வந்தன.
இதனால் தமிழக மாணவர்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் ஒரு சொட்டு மழை கூட பெய்யவில்லை.
இதனால் புயல் வருமா? வராதா? என கிண்டல் செய்து பல கிரியேட்டர்கள் மீம்ஸ் செய்து வெளியிட்டனர். மீடியாக்களையும் கலாய்த்தனர்.
இந்நிலையில் இன்று நவம்பர் 16ஆம் அதிகாலை 1 மணியளவில் காரைக்கால், நாகப்பட்டினம் முதல் வேதாரண்யம், புதுக்கோட்டை வரை தன் கோரத் தாண்டவத்தை காட்டியது கஜா.
30க்கும் மேற்ப்ட்டோர் உயிர் இழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மரங்கள் வேறோடு சாய்ந்துள்ளன. மக்கள் பால், மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் போக்குவரத்து வசதிகள் இல்லாமல் அந்த பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஜினிகாந்த் தன் ட்விட்டர் பக்கத்தில் கஜா புயல் குறித்து கூறியுள்ளதாவது…
RajinikanthVerified account @rajinikanth
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது ஆறுதல்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல உதவிகளைச் செய்துவரும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை பாராட்டுகிறேன். நமது நிவாரண உதவிகள் தொடரட்டும்.” என ரஜினி தெரிவித்துள்ளார்.
Rajinis message about Gaja Cyclone and Rajini Makkal Mandram rescue activities