காலா ரிலீசுக்கு முன்பே ரூ. 125 கோடி கல்லா கட்டிய தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி படத்தை அடுத்து ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் ரஜினிகாந்த்.

இதனிடையில் கபாலி இயக்குனர் ரஞ்சித்துக்கு மற்றொரு படமான காலா பட வாய்ப்பை வழங்கினார் ரஜினி.

இரண்டு படத்தின் சூட்டிங் மற்றும் டப்பிங் பணிகள் நிறைவு பெற்றுவிட்டது.

இதில் லைகா தயாரித்து வரும் 2.0 படத்தில் நிறைய கிராபிக்ஸ் பணிகள் இருப்பதால் பட வெளியீடு தள்ளிக் கொண்டே போக, காலா படத்தை வெளியிட முடிவு செய்தார் தயாரிப்பாளர் தனுஷ்.

எனவே அப்படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றது லைகா நிறுவனம்.

ரூ. 75 கோடியில் தயாரிக்கப்பட்ட காலா படத்தின் வெளியீட்டு உரிமை மட்டும் ரூ. 125 கோடியை தொட்டது.

வருகிற ஏப்ரல் 27ஆம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்தனர்.

இந்நிலையில் காலா படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி (ஸ்டார் குரூப்) நிறுவனம் ரூ. 75 கோடிக்கு பெற்று உள்ளது.

விரைவில் ஐபிஎல் 2018 போட்டிகள் தொடங்கவிருப்பதால், காலா படத்தின் விளம்பரங்களை அத்துடன் ஒளிப்பரப்ப திட்டமிட்டுள்ளதாம் ஸ்டார் குழுமம்.

ஆக மொத்தம் காலா படம் இதுவரை ரூ. 200 கோடிக்கு விற்பனையாகி விட்டது.

படத்தின் பட்ஜெட்டான ரூ. 75 கோடியை கழித்தால் இதுவரை ரூ. 125 கோடி வரை லாபத்தை பெற்றுள்ளார் தயாரிப்பாளர் தனுஷ்.

படத்தின் பட்ஜெட்டில் ரஜினிகாந்தின் சம்பளம் சேர்க்கப்படவில்லை என்கின்றனர் கோலிவுட் வல்லுனர்கள்.

Rajinis Kaala got nearly Rs 125 Crores profit before release

மெர்லின் படத்தில் பெண்களுக்கு எதிரான காட்சியை நீக்க கோரி மனு; படக்குழு விளக்கம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெர்லின் திரைப்படத்தில் உள்ள பெண்களுக்கு எதிரான அவதூறான காட்சியை நீக்க கோரிய மனுவிற்கு ஒரு வாரத்தில் பதில் அளிக்க படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘மெர்லின்’ என்ற திரைப்படம் கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி வெளியானது.

இந்த திரைப்படத்தில் விஷ்ணுபிரியன், அஸ்வினி சந்திரசேகர் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த பேய் படத்தில வரக்கூடிய் ஒரு காட்சியில் சாமியார் வேடத்தில் வரும் கயல் தேவராஜ் அவர்கள் பெண்களுக்கு மட்டும் தான் அதிக அளவில் பேய் பிடிக்கும். அதற்கு காரணம் செக்ஸ் தான் என்று கூறுவது போல் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த காட்சியும், வசனமும் பெண் இனத்தையே இழிவுப்படுத்தும் விதமாக உள்ளதால் அந்த காட்சியை நீக்க தயாரிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்சார் போர்டுக்கு மனு அனுப்பியும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, பெண்களுக்கு எதிரான இந்த காட்சியை அகற்ற சென்சார் போர்டுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை பெரவல்லூரை சேர்ந்த பிரவீணா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.சிலம்புச்செல்வன், இந்த படத்தில் உள்ள காட்சிகள் பெண்களை தவறாக சித்தரிக்கும் வகையில் உள்ளது.

இது தொடர்பாக சென்சார் போர்ட்க்கு அளித்த கோரிக்கை மனு இதுவரை பரிசீலிக்க வில்லை.

எனவே பெண்களுக்கு எதிரான வசனங்கள் வரும் குறிப்பிட்ட காட்சிகளை நீக்க பட தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

இதனையடுத்து நீதிபதி தவறான கருத்துகள் இடம் பெற்று இருக்குமேயானால் அதனை நீக்கலாம் எனவும் மனு தொடர்பாக ஒரு வாரத்தில் பதில் அளிக்க சென்சார் போர்ட், பட தயாரிப்பு நிறுவனம் ஆகியோர்க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணை அடுத்த வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைத்தனர்.

இதற்கு படக்குழுவினர் தற்போது வீடியோ பதிவில் விளக்கம் அளித்து வருகின்றனர்.

Merlin movie and Sexy ghost issue High Court case

சூர்யாவுக்கு ஜோடியாகும் ஐ-ப்ரோ அழகி ப்ரியா வாரியர்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செல்வராகவன் இயக்கும் என்ஜிகே படத்தில் தற்போது நடித்து வருகிறார் சூர்யா.

சினிமா ஸ்டிரைக் காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் சார்பாக இப்படத்தை எஸ்ஆர் பிரபு தயாரித்து வருகிறார்.

இதில் சாய்பல்லவி மற்றும் ரகுல் பிரித்தி சிங் இருவரும் நாயகிகளாக நடித்து வருகின்றனர். இசை யுவன் சங்கர் ராஜா.

இப்படத்தை அடுத்து லைகா தயாரிப்பில் கே.வி. ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் நாயகியாக நடிக்க ப்ரியா வாரியரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

ஒரு அதார் லவ் என்ற மலையாள படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலின் மூலம் தென்னிந்தியாவையே அதிர வைத்த ஐப்ரோ அழகி ப்ரியா வாரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

Priya Prakash Warrior teams up with Suriya

யுவன்-மெட்ரோ சிரிஷை அழைத்துப் பாராட்டி மகிழ்ந்த சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெட்ரோ நாயகன் சிரிஷ் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ராஜா ரங்குஸ்கி.

இந்தப் படத்தில் இடம்பெற்ற, ‘நா யாருன்னு தெரியுமா?’ என்ற பாடலை சிம்பு பாடியுள்ளார் என்பதை பார்த்தோம்.

இந்த பாடல் மார்ச் 15-ம் தேதி வெளியிடப்பட்டு அமோகமான வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதுவரை இரண்டு லட்சம் பேருக்கும் அதிகமானோரால் யு ட்யூபில் ரசிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள சிம்பு, நாயகன் மெட்ரோ சிரிஷையும், இசை நாயகன் யுவன் சங்கர் ராஜாவையும் அழைத்துப் பாராட்டியிருக்கிறார்.

’இந்த பாடல் ஹிட் ஆனதன் மூலமாக படமும் ஹிட் ஆகும்’ என்று இருவரிடமும் சொல்லி மகிழ்ந்திருக்கிறார் சிம்பு.

அடுத்த ஹிட்டுக்கு ஆயத்தமாகி விட்டார் இந்த மெட்ரோ நாயகன் சிரிஷ்.

STR aka Simbu praises Yuvan and Metro Sirish

Breaking: கமல் கிண்டல்; பின்னணியில் பாஜக; கட்சி பெயர்.. ரஜினியின் அதிரடி பதில்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஜினிகாந்த் பற்றிய செய்திகள் என்றால் மீடியாக்களுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரிதான்.

அதுவும் அவர் அரசியலுக்கு வருகிறார் என்ற அறிவித்தவுடன் அவரின் கருத்துக்கள்பற்றிய விவாதங்களை வாரத்திற்கு 2 முறையாவது அரங்கேற்றி வருகின்றனர்.

ஆன்மிக அரசியலே தன் பாதை என்ற அறிவித்திருந்தார்.

அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் எம்ஜிஆர் போன்ற நல்லாட்சியை கொடுப்பேன் என்றார்.

இதனிடையில் இயக்குனர் கரு. பழனியப்பன் ஒரு பேட்டியில் ரஜினியை கடுமையாக விமர்சித்திருந்தார்.

அதற்கு பல்வேறு ரஜினி ரசிகர்கள் தங்கள் பதிலடிகளை பதிவிட்டு வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக அவர் தன் ஆன்மிக பயணத்திற்காக இமயமலை சென்றிருந்தார்.

இன்று சற்றுமுன் அவர் சென்னை திரும்பினார். அவர் வருகை அறிந்த செய்தியாளர்கள் அவர் வீட்டின் முன்பு கூடியிருந்தனர்.

அப்போது நிருபர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு ரஜினிகாந்த் பதிலளித்தார்.

அவற்றை இங்கே தொகுத்துள்ளோம்..

  • ஆன்மிக பயணம் சென்று வந்த பிறகு மனது புத்துணர்ச்சியுடன் இருக்கிறது.
  • புதுக்கோட்டை ஆலங்குடியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனமானது
  • ரத யாத்திரை என்பது மத கலவரத்திற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மத கலவரம் எந்த வடிவில் வந்தாலும் அதனை அரசு தடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது
  • சினிமாத்துறையில் வேலைநிறுத்தம் செய்யக்கூடாது என்பதை நான் எப்போதுமே சொல்வேன்.
  • ஏப்ரல் 14ம் தேதி கட்சிக் கொடி அறிமுகப்படுத்தப் போவதாக வரும் செய்தியில் உண்மையில்லை.
  • என் பின்னால் பாஜக இல்லை. என் பின்னால் கடவுளும் மக்களும் தான் உள்ளனர். இதனை பலமுறை சொல்லிவிட்டேன்.
  • மீதமுள்ள  16 மாவட்ட நிர்வாகிகள் தேர்வுக்கு பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
  • காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்.
  • பல விஷயங்களில் பதிலளிக்காமல் ரஜினி நழுவுகிறாரோ என்ற கமல் பேசிய பேச்சுக்கு ரஜினி பதிலளிக்க மறுத்துவிட்டார்.

After Spiritual tour Rajini met Media and answered for questions

Breaking: ஆன்மிக பயணத்தை முடித்துவிட்டு ஆன்மிக அரசியலுக்கு திரும்பிய ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த இரண்டு வாரங்களாக இமயமலை பகுதியில் தனது ஆன்மிக பயணத்தை மேற்கொண்டார் ரஜினிகாந்த்.

அங்குள்ள ஆன்மிக தலங்களுக்கு சென்று தியானம் செய்து வந்தார்.

அங்கு அவர் சென்ற பின் பல்வேறு புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியானது.

அவர் குதிரை சவாரி செய்வது போன்ற படங்களும் வெளியானது.

அதுபோன்ற பகுதிகளில் வாகனம் செல்ல முடியாது என்பதாலேயே குதிரை சவாரி மேற்கொள்வது வழக்கம்.

இதனையும் கிண்டல் செய்து பலர் மீம்ஸ்கள் கிரியேட் செய்து பதிவிட்டனர்.

மேலும் அங்கு சென்றபின் அரசியல் கேள்விக்கு பதிலளிக்காத ரஜினியை கிண்டல் செய்தும் வந்தனர்.

தான் கட்சி ஆரம்பித்து அறிவித்த பின் முழு நேர அரசியலில் 100% ஈடுபடுவேன் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தனது ஆன்மிக பயணத்தை முடித்துவிட்டு சற்றுமுன் சென்னை திரும்பினார்.

எனவே இனி அவரின் ஆன்மிக அரசியல் குறித்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Rajinikanth returned from his spiritual tour of Himalayas

More Articles
Follows