படத்தலைப்பில் ரஜினி-விஜய் இருவரையும் கனெக்ட் செய்யும் அட்லி?

படத்தலைப்பில் ரஜினி-விஜய் இருவரையும் கனெக்ட் செய்யும் அட்லி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay atleeஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தில் விஜய்யுடன் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்திற்கு தளபதி என்றே பெயரை படக்குழு தேர்வு செய்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் ரஜினிகாந்த்-மம்மூட்டி நடித்திருந்தனர். இப்படம் 1991 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

மேலும் விஜய்யை ரசிகர்கள் தளபதி என்று அழைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

எனவே தளபதி என்று பெயர் பொருத்தமாக இருப்பதாக படக்குழுவினர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

Rajinis hit movie Thalapathy may be title for vijay 61

ரஜினி-தனுஷ் கூட்டணியில் வித்யாபாலனுக்கு பதிலாக பிரபல நடிகை

ரஜினி-தனுஷ் கூட்டணியில் வித்யாபாலனுக்கு பதிலாக பிரபல நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini deepika padukoneகபாலி படத்தை தொடர்ந்து மீண்டும் ரஜினியை வைத்து புதிய படத்தை இயக்கவிருக்கிறார் ரஞ்சித்.

இப்படத்தை தனுஷ் தன் வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பாக தயாரிக்கவிருக்கிறார் என்பது நாம் அறிந்ததே.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இப்படத்தில் நாயகியாக வித்யாபாலன் நடிக்கக்கூடும் என தகவல்கள் வந்தன.

ஆனால் தற்போது தீபிகா படுகோன் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த ஜோடி ஏற்கெனவே சௌந்தர்யா ரஜினி இயக்கிய கோச்சடையான் படத்தில் இணைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

விரைவில் இதன் சூட்டிங் தொடங்கவிருக்கிறது.

Deepika Padukone likely to join in Rajini Dhanush Ranjith Project

deepikarajinikanth

‘வாரணம் ஆயிரம் பட வரிசையில் கடுகு இருக்கும்..’ சூர்யா நெகிழ்ச்சி

‘வாரணம் ஆயிரம் பட வரிசையில் கடுகு இருக்கும்..’ சூர்யா நெகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor suriyaஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கி தயாரித்துள்ள படம் கடுகு.

இதில் டைரக்டரும் நடிகை தேவயாணியின் கணவருமான ராஜகுமாரன் நாயகனாக நடித்துள்ளார்.

முக்கிய கேரக்டரில் பரத், சுபிக்ஷா மற்றும் ஏ.வெங்கடேஷ் நடித்துள்ளனர்.

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள சூர்யா, இதன் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

அப்போது பேசும்போது…

நிறைய படங்களில் நாம் பணிபுரிந்தாலும் சில படங்கள் நம் மனசுக்கு பிடித்த படமாக இருக்கும்.

கதாபாத்திரத்தை முன் வைத்து கதை சொல்வது எனக்கு பிடிக்கும்.

அப்படி சொன்னால் எனக்கு உடனே ஈர்ப்பு வரும். அப்படித்தான் நந்தா. வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் நடித்தேன்.

தற்போது இந்த கடுகு படமும் நிச்சயம் அந்த வரிசையில் சேரும்.

படம் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.” என்றார்.

சிவகார்த்திகேயன் மனதோடு ஒன்றிய ‘மரகத நாணயம்’

சிவகார்த்திகேயன் மனதோடு ஒன்றிய ‘மரகத நாணயம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyanஆதி, நிக்கி கல்ராணி நடித்துள்ள ‘மரகத நாணயம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் படக்குழுவினருடன் சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குநர் ராம்குமார், இயக்குநர் ரவிக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இவர்களுடன் ஐந்து சிறந்த அறிமுக இயக்குநர்கள் – விஜயக்குமார் (உறியடி), இயக்குநர் நெல்சன் (ஒரு நாள் கூத்து), இயக்குநர் கார்த்திக் நரேன் (துருவங்கள் 16), இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் (ரெமோ) மற்றும் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி (சைத்தான்) ஆகியோருக்கு ‘மரகத புதையல்’ ஒன்றை அளித்து, அவர்களை கௌரவித்தார் தயாரிப்பாளர் ஜி டில்லிபாபு.

இவ்விழாவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது…

“‘மரகத நாணயம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா என் மனதோடு எப்போதும் ஒன்றி இருக்கும். ஏனென்றால், நான், இசையமைப்பாளர் திபு நைனன் தாமஸ், அருண்ராஜா காமராஜ் ஆகிய மூவரும் ஒரே கல்லூரியில், ஒரே வகுப்பறையில் படித்தவர்கள்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணனும், பாடலாசிரியர் முத்தமிழும் எங்களுக்கு சீனியர்கள். கல்லூரி காலத்திற்கு பிறகு நாங்கள் ஐந்து பேரும் ஒன்றாக சந்திப்பது இந்த மரகத நாணயம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில்தான்.

இத்தகைய வாய்ப்பை அளித்த தயாரிப்பாளர் டில்லிபாபு சாருக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன். நிச்சயமாக திபு நைனன் தாமஸ், இசை துறையில் பெரிய வளர்ச்சியை காண்பார். அதற்கு இந்த மரகத நாணயம் தான் சிறந்த அடித்தளம்” என்று பேசினார்.

‘பேங்க் வேண்டாம்.. போஸ்ட் ஆபிஸ் போதும்.’. ஆரி ஆர்ப்பாட்டம்

‘பேங்க் வேண்டாம்.. போஸ்ட் ஆபிஸ் போதும்.’. ஆரி ஆர்ப்பாட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Aariபணம் எடுப்பதிலும், பணத்தை போடுவதிலும் பல அதிரடி அறிவிப்புகளையும் கட்டணங்களையும் வங்கிகள் வெளியிட்டுள்ளன.

இதனால் நாடு முழுவதும் இதற்கு எதிர்ப்புகள் கிளம்புகின்றன

இந்நிலையில் நாடு முழுவதும் நடக்கும் வங்கிகளின் கட்டணக் கொள்கையை எதிர்த்து “அஞ்சல் துறைக்கு மாறுவோம் வங்கிக் கொள்ளையை மாற்றுவோம்” என்ற முழக்கத்துடன் நடிகர் ஆரியின் தலைமையில் மாணவர்களின் விழிப்புணர்வு அறப்போராட்டம் இன்று அண்ணா சாலை தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்றது.

இதில் இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

‘சூர்யா-விஷால் ரெண்டு பேர்தான் ரியல் ஹீரோஸ்…’ விஜய் மில்டன்

‘சூர்யா-விஷால் ரெண்டு பேர்தான் ரியல் ஹீரோஸ்…’ விஜய் மில்டன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay miltonகோலி சோடா, 10 எண்றதுக்குள்ள ஆகிய படங்களை தொடர்ந்து விஜய் மில்டன் இயக்கியுள்ள படம் கடுகு.

இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் மில்டன் பேசும்போது…

இப்படத்தை ஆரம்பித்த போது ராஜகுமாரன் ஹீரோ என்றபோது அனைவரும் கிண்டலடித்தார்கள். அவரே ஹீரேவாக முதலில் மறுத்தார்.

ஆனால் அது கொஞ்சம் கொஞ்சமாக மாறி இப்போது படத்தை பார்த்த அனைவரும் அவர்தான் சரியாக பொருத்தமாக இருந்தார் என்றார்கள்.

அதுபோல் எந்த ஹீரோவும் ஒத்துக்க மாட்டார். அந்த வேடத்தில் பரத் நடித்துக் கொடுத்திருக்கிறார்.
இப்படத்தை பார்த்து வாங்கிய சூர்யாவுக்கு ரொம்ப நன்றி.

சினிமாவில் நடிப்பது மட்டும் ஹீரோயிசம் இல்லை. சினிமாவை தாண்டியும் ஹீரோவாக இருக்க வேண்டும்.

விஷால் எதையும் துணிந்து செய்கிறார்.

அதுபோல் சூர்யா அகரம் பவுண்டேசன் அறக்கட்டளை வைத்திருக்கிறார். இவர்கள்தான் ரியல் ஹீரோக்கள்.

அகரம் மூலம் நிறைய கல்வி உதவிகள் மற்றும் சேவைகள் செய்து வருகிறார்.

சினிமா இல்லாவிட்டாலும் அகரம் பவுண்டேசன் போதும். அவர் ஒரு ரியல் ஹீரோதான்.” என்று பேசினார்.

Suriya and Vishal are real heros says Director Vijay Milton

suriya vishal

More Articles
Follows