ரஜினி பிறந்தநாளில் இத்தனை விதமான கொண்டாட்டமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வருகிற டிசம்பர் 12ஆம் தேதி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன்னுடைய 66 பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

எனவே இவரது ரசிகர்கள் வழக்கம்போல விமரிசையாக கொண்டாட உள்ளனர்.

இதே நாளில் இவர்களின் கொண்டாட்டத்துடன் இன்னும் சில கொண்டாட்டங்களும் இணைய உள்ளன.

சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய பாட்ஷா படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.

இத்துடன் ஜி.கே. சினிமாஸில் மாலை 6.30 மணிக்கு ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த சிவாஜி படம் திரையிடப்படுகிறது.

மேலும் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் எழுதிய #StandingOnAnAppleBox புத்தகம் வெளியிடப்படுகிறது.

இதன் உரிமையை Harper Collins என்ற நிறுவனம் பெற்றுள்ளது.

இதில் ரஜினியின் மகளாகிய இவர், தனுஷின் மனைவியானது வரை எழுதியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

‘புலி-தெறி’க்கு நடந்தது ‘பைரவா’வுக்கு நடக்காதா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்த புலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை அவ்வளவு எளிதாக யாரும் மறக்க முடியாது.

இதில் கலந்துக் கொண்ட டி.ராஜேந்தர், விஜய்யே போதும் என்று சொல்லும் அளவுக்கு புகழ்ந்து தள்ளினார்.

அதன்பின்னர் தெறி படத்திற்கும் ஆடியோ வெளியிட்டு விழா நடைபெற்றது.

எனவே விரைவில் வெளியாகவுள்ள பைரவா படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் விழா எதுவும் வேண்டாம்.

இணையத்தில் வெளியிட்டு விடலாம் என விஜய் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால் என்ன செய்யலாம்? என தயாரிப்பு தரப்பில் யோசித்து வருகிறார்களாம்.

‘செலவுக்கு பணம் தரவேண்டும்…’ தனுஷின் ‘திடீர்’ பெற்றோர் வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த கதிரேசன், ஓய்வுபெற்ற பஸ் கண்டக்டர் மற்றும் இவரது மனைவி மீனாட்சி ஆகிய இருவரும் நடிகர் தனுஷை தங்கள் மகன் சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.

இதுதொடர்பாக அவர்கள் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில்…

“பிரபல நடிகரான தனுஷ் கடந்த 7.11.1985 அன்று எங்களுக்கு மூத்த மகனாக பிறந்தார். கலைச்செல்வன் என்று பெயரிட்டு அவரை வளர்த்தோம்.

பிளஸ்-1 படிக்கும்போது படிப்பை நிறுத்திவிட்டு, இயக்குனர் கஸ்தூரி ராஜாவிடம் பணிபுரிய சேர்ந்தார்.

அதன்பின்னர் கஸ்தூரி ராஜா எங்கள் மகனை எங்களிடம் இருந்து பிரித்துவிட்டார்.

பெற்றோர் என்ற முறையில் எங்களை கவனித்துக் கொள்ள வேண்டியது தனுஷ், எங்கள் மீது அக்கறை இல்லாமல் இருக்கிறார்.

எங்களின் மருத்துவச் செலவு மற்றும் இதர செலவுகளுக்கு ரூ.65 ஆயிரம் மாதந்தோறும் தேவைப்படுகிற்று.

இதனை வழங்க தனுசுக்கு உத்தரவிட வேண்டும்” என கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு தொடர்பான நடந்த விசாரணையில் ஜனவரி 12ஆம் தேதி தனுஷ் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Court summons Dhanush Sudden Parents claims Dhanush their son

அஜித்தை சூப்பர் ஸ்டாராக மதிக்கும் மாஃபியா கும்பல் தலைவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கும் தல57 என்று தற்காலிக பெயரிடப்பட்ட படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

அனிருத் இசையமைக்கும் இதன் சூட்டிங் தற்போது பல்கேரியா நாட்டில் நடந்து வருகிறது.

இதில் அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷ்ராஹாசன், கருணாகரன் ஆகியோர் நடிக்கின்றனர்.

வில்லனாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்து வருகிறார்.

இவர் ஆட்களை கடத்தும் கொடூரமான மாஃபியா கும்பல் தலைவனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட விவேக் ஓபராய் “அஜித் ஒரு சூப்பர் ஸ்டார். அவரை அன்புடன் அஜித் அண்ணா என்றே அழைக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

‘சூர்யா இடத்தில் விக்ரம்…’ கௌதம் மேனனின் அதிரடி முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முதன்முறையாக விக்ரம் நடிக்கவுள்ள படத்தை கவுதம் மேனன் இயக்கவிருக்கிறார்.

தற்போது கைவசம் உள்ள படங்களை இருவரும் முடித்துவிட்டு விரைவில் இதில் இணையவுள்ளனர்.

இது சூர்யா நடிக்கவிருந்து கைவிடப்பட்ட ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் கதை என கூறப்படுகிறது.

இப்படம் முழுக்க முழுக்க அமெரிக்காவில் உருவாகவுள்ளதாம்.

இது போர்ன் (Bourne) சீரீஸ் படங்கள் போல மிக த்ரில்லிங்காக இருக்கும் எனவும் தெரியவந்துள்ளது.

இதனை தன் ‘ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் சார்பாக தயாரிக்கவிருக்கிறார் கௌதம்.

‘அடுத்தவன் கால நக்குறவன பத்தி எனக்கென்ன.?’ – ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில நாட்களாகவே ஜி.வி. பிரகாஷுக்கும் மற்ற சில நடிகர்களின் ரசிகர்களுக்கும் இடையே இணையத்தில் மோதல் வலுத்து வருகிறது.

கடவுள் இருக்கான் குமாரு படத்தில் மற்ற நடிகர்களை கலாய்க்கும் படியான காட்சிகள் இருந்ததால், தற்போது இது தீவிரமடைந்துள்ளது.

மேலும் அஜித் ரசிகர்களோடு கடுமையாக வாக்குவாதம் செய்து வந்தார்.

எனவே அஜித் ரசிகர்கள் ஒன்றினைந்து ஜிவி. பிரகாஷ்க்கு எதிராக சில (#FrustratedPsychoGvPrakash) ஹேஷ்டேக்குகளை கிரியேட் செய்து, இந்திய அளவில் ட்ரெண்ட் செய்துள்ளனர்.

இந்நிலையில் நான் இங்கே வேலை பார்ப்பதற்காக மட்டுமே வந்துள்ளேன்.

அடுத்தவன கால நக்குறவன பத்தி எனக்கு எனக்கென்ன?

ஒருவரை பின்பற்றுவது என்னுடைய சாய்ஸ்” என கடும் கோபத்துடன் ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

G.V.Prakash Kumar ‏@gvprakash
I am here for my profession & not to whine about who licks ones foot. I follow some one & that’s my choice you can’t whine on it either

More Articles
Follows