தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பொங்கல் திருவிழாவையொட்டி பொள்ளாச்சியில் பலூன் திருவிழா நடைபெற்று வருகிறது.
சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக, சுற்றுலாத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த சர்வதேச பலூன் திருவிழாவை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், 4-வது சர்வதேச பலூன் திருவிழா, பொள்ளாச்சியில் நேற்று மாலை தொடங்கியது.
பொள்ளாச்சி சப் கலெக்டர் காயத்திரி கிருஷ்ணன் இதைத் தொடங்கி வைத்தார்.
இதில், அமெரிக்கா, மெக்ஸிகோ, ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 12 பலூன்கள் பறக்கவிடப்பட்டுள்ளன. பொள்ளாச்சி, சக்தி மில்ஸ் மைதானத்தில் தொடங்கியுள்ள இந்தத் திருவிழா, வரும் 16-ம் தேதி வரை நடக்கிறது.
சுற்றுலாத்துறையின் பிரமாண்ட தேசியக்கொடி வடிவிலான பலூன், ரஜினியின் எந்திரன் 2.0 பலூன், ஆங்ரி பேர்டு பலூன் ஆகியவை 12 பலூன்களில் முக்கியமானவையாகக் கருதப்படுகிறது.
இந்த பலூனில் பறக்க ஒரு நபருக்கு ரூ.15,000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஒரு பலூனில் 4 நபர்கள் அமரலாம். இந்த பலூன் ஒரு சுற்றுக்கு 3 கிமீ வரை செல்கிறதாம்.
Rajinis 2point0 promo balloon in Pollachi International Balloon festival