முருகதாஸ் இயக்கும் ரஜினி படத்திற்கு இதான் தலைப்பா..? சூப்பர்ல..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த 2018 வருடத்தில் ரஜினிகாந்த் நடித்த காலா மற்றும் 2.0 படம் ஆகிய இரண்டும் திரைக்கு வந்துவிட்டது.

அடுத்த வருடம் ஆரம்பத்தில் பொங்கல் தினத்தில் பேட்ட திரைப்படமும் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த்.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பது உறுதியாகியுள்ளது.

தன் அரசியல் வருகைக்கு ஏற்ப இதில் அரசியல் பன்ச் டயலாக்குகள் அதிகம் இருக்க வேண்டும் என ரஜினி விரும்பியதாக கூறப்படுகிறது.

மேலும் படத்தில் சமூகம் சார்ந்த விஷயங்களும் தற்போதைய நாட்டு நடப்புகளும் இருக்க வேண்டும் என கூறியிருக்கிறாராம்.

இந்நிலையில் இப்படத்திற்கு நாற்காலி என தலைப்பு வைக்கலாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

தற்போது ரஜினியின் அனுமதிக்காக இந்த தலைப்பு காத்திருக்கிறதாம்.

ஒருவேளை இது முடிவானால் நிச்சயம் ரஜினி ரசிகர்களுக்கு திருவிழா கொண்டாட்டம்தான் என்பதில் ஐயமில்லை.

அடுத்த அதிரடி #தலைவர்பைலா..; பட்டைய கிளப்பும் பேட்ட பாடல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார்.

இந்த படத்தை அடுத்த வருடம் 2019 பொங்கலுக்கு வெளியிட உள்ளது தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் சிங்கிள் ட்ராக் மரண மாஸ் பாடலை டிசம்பர் 3ஆம் தேதி வெளியிட்டனர்.

இந்த பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து டியூட்பில் பட்டைய கிளப்பி வருகிறது.

மற்ற பாடல்கள் டிசம்பர் 9ஆம் தேதி பிரம்மாண்டமான நிகழ்ச்சி நடத்தி வெளியிட உள்ளனர். சர்கார் பட பாடல்களை வெளியிட்ட அதே மைதானத்தில் வெளியிட உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் படத்தின் 2வது பாடல் சிங் டிராக் நாளை (டிச.,07) வெளியிடவுள்ளனர்.

ஊலல்லலா… என இந்த பாடல் துவங்குவதாக குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் தலைவர் பைலா என ஹேஷ்டேக் போட்டுள்ளனர்.

அந்த பாடல் போஸ்டரில் ரஜினி ஆடுவது போன்று போட்டோவை டிசைன் செய்துள்ளனர்.

பிரசாந்துடன் இணைந்து தன் மகன் விக்ரம் உடன் மோதும் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் தியாகராஜனின் மகன் பிரசாந்த் நடித்துள்ள படம் ஜானி.

சிவாஜி கணேசனின் பேரனும் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு நடித்துள்ள படம் துப்பாக்கி முனை.

இந்த இரு படங்களும் அடுத்த வாரம் டிசம்பர் 14ல் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுப்பற்றிய விவரம் வருமாறு….

ஜானி படத்தில் பிரசாந்த் உடன் சஞ்சிதா ஷெட்டி, பிரபு, ஆனந்த்ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

வெற்றிச்செல்வன் இயக்கியுள்ள இப்படத்தை பிரசாந்தின் தந்தையும் நடிகருமான தியாகராஜன் தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் பாடல்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினேஷ் செல்வராஜ் இயக்கியுள்ள `துப்பாக்கி முனை’ படத்தில் விக்ரம் பிரபு மற்றும் ஹன்சிகா முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு எல்.வி.முத்துகணேஷ் இசையமைத்திருக்கிறார்.

60 வயது மாநிறம் படத்தைத் தொடர்ந்து விக்ரம் பிரபு நடித்துள்ள இந்த படத்தையும் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

இளையதிலகம் பிரபு நடித்துள்ள ஜானி படத்துடன் அவரின் மகன் விக்ரம் நடித்துள்ள துப்பாக்கி முனை மோதுவது இங்கே குறிப்பிடத்தக்கது.

Prabhu team up with Prashanth and clash with his son Vikram

ரஜினியை எவ்ளோ பிடிக்குமோ *பேட்ட* அப்படியிருக்கும்.: விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் பேட்ட.

சன் பிக்சர்ஸ் தயாரித்து இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இதில் ரஜினியுடன் விஜய்சேதுபதி, சசிகுமார், நவாசுதீன் சித்திக், சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் குறித்து நடிகர் விஜய்சேதுபதி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது….

பேட்ட படம் பற்றி எதுவும் சொல்லமுடியாது. ஆனால் படம் எப்படி இருக்கும் என்பதை சொல்கிறேன்.

ரஜினியிடம் ரசிக்க நிறைய விஷயங்கள். மாஸ், ஸ்டைல், ஈர்ப்பு இப்படி நிறைய. அவரை எந்தளவு பிடிக்குமோ அந்தளவு பேட்ட படம் மாஸாக இருக்கும். படம் பொங்கலுக்கு வருகிறது” என தெரிவித்துள்ளார் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.

பேட்ட படத்தில் ஜித்து என்ற கேரக்டர் பெயரில் விஜய்சேதுபதி நடித்துள்ளார். இந்த போஸ்டர் நேற்று முன் தினம் வெளியானது.

Makkal Selvan Vijay Sethupathi talks about Petta and Rajinikanth

நெல் ஜெயராமன் மரணம்; அனைத்து செலவுகளையும் சிவகார்த்திகேயன் ஏற்றார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் உள்ள திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன்.

இவருக்கு சித்ரா என்ற மனைவியும் 11 வயதில் மகனும் உள்ளனர்.

இவர் 170 அரிய வகை நெல் விதைகளை சேகரித்து வைத்திருந்தார்.

மேலும் பாரம்பரிய நெல்வகைகள காப்பாற்றுவதற்காக தேசிய, மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.

ஆண்டுதோறும் நெல் திருவிழா நடத்தி பாரம்பரிய நெல்வகைகளை பிரபலப்படுத்தினார்.

கடந்த 2 ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார்.

இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்கு பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், விவசாயிகள், திரைப்பட கலைஞர்கள் என பல்வேறு தரப்பினர் நிதியுதவி செய்தனர்.

மேலும் நடிகர் சிவகார்த்திகேயன், கார்த்தி, சத்யராஜ், சூரி உள்ளிட்டோர் சந்தித்தனர். இதேபோல தி.மு.க தலைவர் ஸ்டாலின், சீமான், திருநாவுக்கரசர், வைகோ உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர்.

இவர்களைத் தொடர்ந்து அமைச்சர்கள் விஜயபாஸ்கர், துரைக்கண்ணு, காமராஜ் உள்ளிட்டோரும் சந்தித்துப் பேசினர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 5.00 மணியளவில் காலமானார்.

அவரது உடல் சென்னையிலுள்ள தேனாம்பேட்டையில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அரசியல் பிரபலங்கள் முதல் நடிகர் கார்த்தி உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து அவரது சொந்த ஊரான திருத்துறைப்பூண்டிக்கு வேன் மூலம் கொண்டு செல்லப்பட்டு நாளை மதியம் 12 மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

இதனையறிந்த நடிகர் சிவகார்த்திகேயன் நெல் ஜெயராமனின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்வதற்கான மொத்த செலவு மற்றும் அவருக்கான மருத்துவ செலவையும் ஏற்றுள்ளார்.

இவையில்லாமல் அவரின் மகன் படிப்புச் செலவையும் ஏற்றுள்ளார் சிவகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது.

Nel Jayaraman passed away Sivakarthikeyan takes his funeral and his sons education expenses

ரூ.500 கோடியை அள்ளியது 2.0; தமிழ் சினிமாவிற்கு ரஜினி தந்த பெருமை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா ரூ. 550 கோடியில் 2.0 படத்தை தயாரித்து கடந்த நவம்பர் 29ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் 15000 தியேட்டர்களில் வெளியிட்டது.

ஷங்கர் இயக்கிய இப்படத்தில் ரஜினிகாந்த், அக்சய்குமார், எமிஜாக்சன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

ஏஆர். ரஹ்மான் இசையைமக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இப்படம் வெளியானது முதல் உலகமெங்கும் நல்ல வசூல் வேட்டை செய்து வருகிறது.

தற்போது ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் உலகமெங்கும் ரூ. 500 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் தமிழ் சினிமா வரலாற்றில் ரூ 500 கோடியை கடந்த நடிகர் என்ற பெருமையை நடிகர் ரஜினியும் இயக்குனர் என்ற பெருமையை ஷங்கர் ஆகிய இருவரும் பெற்று தந்துள்ளனர்.

இதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு உலகளவில் பெருமை தேடித் தந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Proud moment for Tamil Cinema Rajinis 2pointO collected Rs 500 crores

More Articles
Follows