அலறும் ஆந்திராவும்… ரஜினியின் அசத்தல் சாதனைகளும்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த மே 1ஆம் தேதியானது ரஜினி ரசிகர்களால், கபாலி தினமாக பார்க்கப்பட்டது.

அன்றைய தினம் ‘கபாலிடீசர் வெளியாகி உலகளவில் 2 கோடி பார்வையாளர்களைக் கடந்து பல சாதனைகளைப் படைத்து வருகிறது.

அதுபோல் இப்படத்தின் தெலுங்கு டீசரும், 39 லட்சம் பார்வைகளைக் கடந்தும், 50 ஆயிரம் லைக்ஸ்களைப் பெற்றுள்ளது.

இது நேரடியான தெலுங்குப் படங்களை விட பெரிய சாதனையாம்.

பவன் கல்யாணின் ‘சர்தர் கப்பார் சிங்பட டீசரும், ஜுனியர் என்டிஆரின் ‘நன்னகு பிரேமதோ‘ ஆகிய படங்களின் டீசர் மட்டுமே இதுவரை 50 ஆயிரம் லைக்ஸ்களை பெற்றுள்ளது.

மேலும் அண்மையில் வெளியான கபாலி படத்தின் பாடல்களும் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது.

பாடலும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும்…

1.      ‘நெருப்புடா…பாடல் 50 லட்சம்

2.      ‘உலகம் ஒருவனுக்கா…பாடல் 19 லட்சம்

3.      ‘வானம் பார்த்தேன்…பாடல் 11 லட்சம்

4.      ‘வீர துரந்தரா…பாடல் 10 லட்சம்,

5.      ‘மாய நதி…பாடல் 10 லட்சம்

இவை தென்னிந்திய சினிமாவையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.

‘கபாலி’க்காக தன் ஸ்டைலையே மாற்றிய ரஜினி..! (படம் உள்ளே)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி என்றாலே அந்த ஸ்டைல்தான் நம் ஞாபகத்திற்கு வரும்.

மற்ற நடிகர்கள் என்ன செய்தாலும் அதில் ரஜினியின் சாயல் நிச்சயமாக இருந்துவிடுகிறது.

ஒவ்வொரு நடிகரின் சில விஷயங்களை ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள்.

ஆனால் 15-20 ஆண்களுக்கு முன், ரஜினியின் தலைமுடி ஸ்டைலைதான் ரசிகர்கள் பாலோ செய்தார்கள்.

இது எந்த நடிகருக்கும் இல்லாத ஒரு சிறப்பு என்றும் கூட சொல்லலாம்.

இந்நிலையில் கபாலி படத்தில் ரஜினி தன் ஸ்டைலில் சிறிது மாற்றம் செய்து இருக்கிறார்.

அவரது பெரும்பாலான படங்களில் கால்மேல் கால் போட்டு ரஜினி அமர்ந்திருப்பார்.

அவை அனைத்திலும் வலது காலின் மேல் இடது காலை போட்டு இருக்கிறார்.

ஆனால் கபாலியில் முதன்முறையாக இடது காலில் மேல் வலது காலை போட்டு இருக்கிறார்.

இதனையும் ரசிகர்கள் கவனித்து, அந்த புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதோ உங்கள் பார்வைக்கு அந்த படங்கள்…

மீண்டும் விஜய்யுடன் அட்லி… தெறி 2 நிலவரம் என்ன..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜா ராணி படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து விஜய்யின் தெறி படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் அட்லி.

இப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

எனவே, இதனை தொடர்ந்து எந்த படத்தை இயக்குவார்? நடிகர் யார்? என்ற கேள்விகள் எழுந்தன.

இதனிடையில் ஜீவா நடிக்கும் சங்கிலி புங்கிலி கதவ தொற உள்ளிட்ட இரண்டு படங்களை தயாரித்து வருகிறார் அட்லி.

இந்நிலையில் மீண்டும் விஜய்யை வைத்து தெறி 2 படத்தை விரைவில் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

பரதன் இயக்கும் விஜய் 60 படத்தை முடித்துவிட்டு இப்படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார்.

லைகா தயாரிக்கவுள்ளதாக கூறப்படும் இப்படம் தெறி முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாண்டியராஜன் மகனை கைது செய்த காவல் துறை..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தான் இயக்கிய படங்களாலும் தன் நகைச்சுவை நடிப்பாலும் ரசிகர்களை சிரிக்க வைத்து வருபவர் பாண்டியராஜன்.

இவருக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர்.

இதில் பிருத்விராஜ் என்பவர் தமிழ் சினிமாவில் நாயகனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவரது மற்றொரு மகன் பிரேமராஜன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுபற்றி விசாரிக்கையில்…

இவர் மயிலாப்பூரில் அனுமதியின்றி குட்டி விமானத்தை பறக்க விட்டுள்ளராம். எனவே கைது செய்து விசாரணைக்குப் பின் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பத்து நாட்களுக்குள் விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு டபுள் விருந்து..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரை டஜன் படங்களுக்கு மேலாக கைவசம் வைத்துக் கொண்டு தமிழ் சினிமாவில் பிஸியாக இருப்பவர் விஜய் சேதுபதி.

இறைவி படத்தை தொடர்ந்து, தர்மதுரை மற்றும் ஆண்டவன் கட்டளை படங்களில் நடித்தார்.

தற்போது றெக்க படப்பிடிப்பில் லட்சுமி மேனனுடன் டூயட் பாடிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள தர்மதுரை படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலரை இம்மாத (ஜுன்) இறுதிக்குள் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

தமன்னா, ஷிவதா நாயர் ஸ்ருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நாயகிகளாக நடித்துள்ள இப்படத்திற்கு இசை யுவன்.

மம்மூட்டியின் கையை வலுக்கட்டாயமாக பிடித்த நயன்தாரா..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மையில் பிலிம்பேர் விருதுகள் விழா பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

இதில் தென்னிந்தியாவை சேர்ந்த திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் நடிகர் மம்மூட்டி என்ன காரணத்தினாலே கொஞ்சம் சீரியஸாகவே காணப்பட்டார்.

அப்போது அவரை சந்தித்த நயன்தாரா கைகொடுக்க முன் வந்தார்.

ஆனால் நயன்தாராவுடன் கை குலுக்காமல் கையெடுத்து கும்பிட்டார் மம்மூட்டி.

இதனால் நயன்தாராவிற்கு சற்றே தர்மசங்கடம் ஆகிவிட்டதாம்.

இருந்தாலும் மம்மூட்டியை விடாமல் அவர் கையை பிடித்து வாழ்த்து தெரிவித்துவிட்டுதான் சென்றாராம் நயன்தாரா.

இவர்கள் இருவரும் பாஸ்கர் தி ராஸ்கல், புதிய நியமம் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows