தமிழ் புத்தாண்டு பிறப்பதற்குள்.. ரஜினிக்காக நெல்சன் போட்ட திட்டம்

தமிழ் புத்தாண்டு பிறப்பதற்குள்.. ரஜினிக்காக நெல்சன் போட்ட திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ‘ஜெயிலர்’.

இப்படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘ஜெயிலர்’ படப்பிடிப்பை ஏப்ரல் 15, 2023க்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இன்னும் 15 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், ரஜினிகாந்த் படக்குழுவுடன் சுமார் 10 நாட்கள் படப்பிடிப்பில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Rajinikanth’s ‘Jailer’ shooting to be wrapped up soon

அம்மு அபிராமி & ‘விருமாண்டி’ அபிராமியுடன் இணைந்த மதுரை முத்து

அம்மு அபிராமி & ‘விருமாண்டி’ அபிராமியுடன் இணைந்த மதுரை முத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரோமியோ பிக்சர்ஸ் சார்பில், யூடுயூப் புகழ் இயக்குநர் ராஜ்மோகனின் அறிமுக இயக்கத்தில், பள்ளி குழந்தைகளின் வாழ்வை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்படம் “பாபா பிளாக்‌ ஷீப்”.

இப்படத்தின் மூலம் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் திரையில் தோன்றியுள்ளார் விருமாண்டி புகழ் நடிகை அபிராமி.

பள்ளிக் குழந்தைகளின் மழலைத்தனம், விளையாட்டுத்தனம், சேட்டைகள், அவர்களின் இன்பங்கள், துன்பங்கள் எல்லாம் இணைந்த ஒரு அழகான திரைக்கதையாக, உணரச்சிகரமான டிராமாவாக “பாபா பிளாக்‌ ஷீப்” உருவாகிறது.

இப்படத்தில் ஒரு அன்னையாக மிக முக்கிய வேடத்தில், நடிகை அபிராமி நடிக்கிறார். ஒரு உணர்ச்சிகரமான காட்சியில் மொத்த படக்குழுவும் அவரது நடிப்பை கண்டு கண்கலங்கியுள்ளது.

இது குறித்து இயக்குநர் ராஜ்மோகன் கூறியதாவது…

“பாபா பிளாக்‌ ஷீப்” பள்ளிக்குழந்தைகளின் வாழ்வை சொல்லும் ஒரு அழகான டிராமா. இப்படத்தில் ஒரு குழந்தையை பிரசவம் முதல் பள்ளிக்கூடம் வரை சுமக்கும் அன்னை கதாபாத்திரம் இருந்தது.

இப்பாத்திரத்திற்காக நடிகை அபிராமி அவர்களை அணுகினேன், கதையை கேட்டவுடன் அவருக்கு மிகவும் பிடித்து, நான் நடிக்கிறேன் என்றார்.

படப்பிடிப்பில் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு அறிமுக நடிகை போல், என்னிடம் கருத்து கேட்டு, அவரது கதாபாத்திரத்தை அட்டகாசமாக திரையில் கொண்டு வந்துள்ளார். மிகவும் உணர்ச்சிகரமான ஒரு காட்சியில் அவரது நடிப்பை பார்த்து, மொத்த படக்குழுவும் கண்கலங்கி எழுந்து கை தட்டியது.

அந்த காட்சியை ரசிகர்கள் திரையில் பார்க்கும் போது, கண்டிப்பாக அவர்களும் கண்கலங்குவார்கள். இப்படம் நடிகை அபிராமிக்கு மீண்டும் திரையில் ஒரு திருப்புமுனை படமாக இருக்கும். படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டோம்.

இந்த படத்தில் மதுரை முத்து, RJ விக்னேஷ்காந்த், சுப்பு பஞ்சு, சுரேஷ் சக்ரவர்த்தி, போஸ் வெங்கட் போன்ற பல முன்னணி நடிகர்கள் அட்டாகாசப்படுத்தியுள்ளார்கள்.

படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடந்து வருகிறது விரைவில் டீசரோடு சந்திக்கிறேன் என்றார்.

நடிகர்கள்
அயாஸ்
நரேந்திர பிரசாத்
அம்மு அபிராமி
‘விருமாண்டி’ அபிராமி
RJ விக்னேஷ்காந்த்
சுப்பு பஞ்சு
சுரேஷ் சக்ரவர்த்தி
போஸ் வெங்கட்
வினோதினி வைத்தியநாதன்
சேட்டை ஷெரீப்
மதுரை முத்து
கேபிஒய் பழனி
ஓஏகே சுந்தர்
நக்கலைட்ஸ் பிரசன்னா
நக்கலைட்ஸ் தனம்

தொழில்நுட்ப வல்லுநர்கள்

ஒளிப்பதிவு – சுதர்சன் சீனிவாசன்
இசை சந்தோஷ் தயாநிதி
எடிட்டர் – விஜய் வேலுக்குட்டி
கலை இயக்கம் – MSP. மாதவன்
ஸ்டண்ட் – ‘உறியடி’ விக்கி
நடன அமைப்பு – அஸார், லீலாவதி குமார்.
விளம்பர வடிவமைப்புகள் – கோபி பிரசன்னா
பாடல் வரிகள் – யுகபாரதி, A.Pa.ராஜா, RJ விக்னேஷ்காந்த்.
ஸ்டில்ஸ் – வேலு
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

தயாரிப்பு நிறுவனம் – ரோமியோ பிக்சர்ஸ்
தயாரிப்பாளர் – ராகுல்
இயக்கம் – ராஜ்மோகன் ஆறுமுகம்

Madurai Muthu and Virumandi Abirami joins for Baba Blacksheep

BREAKING காமெடியனும் மிமிக்ரி கலைஞருமான கோவை குணா மரணம்

BREAKING காமெடியனும் மிமிக்ரி கலைஞருமான கோவை குணா மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கோவை குணா.

இவர் பல்வேறு பிரபலங்களின் குரல்களை மிமிக்கிரி செய்வார். சிவாஜி, கவுண்டமணி, பாக்யராஜ், விஜயகாந்த் உள்ளிட்ட பலரின் குரல்கள் பேசும் திறன் பெற்றவர்.

மேலும் சென்னை காதல் உள்ளிட்ட சில படங்களில் காமெடி நடிகராகவும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நகைச்சுவை நடிகரும் மிமிக்ரி கலைஞருமான கோவை குணா உயிரிழப்பு.

உடல் நலக்குறைவால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திற்கு முன்பு உயிரிழந்தார்.

Mimicry artists kovai guna passed away

‘மார்க் ஆண்டனி’ படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய ஸ்டண்ட் நடிகருக்கு விஷால் உதவி

‘மார்க் ஆண்டனி’ படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய ஸ்டண்ட் நடிகருக்கு விஷால் உதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா இணைந்து நடித்துள்ள படம் ‘மார்க் ஆண்டனி’.

ரிது வர்மா & அபிநயா நாயகிகளாக நடிக்க இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

இதில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா உள்ளிட்டோர் தோன்றும் கேரக்டர் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இப்பட சண்டைக் காட்சியை பூந்தமல்லியில் உள்ள ‘ஈவிபி’ பிலிம் சிட்டியில் படமாக்கினர்.

அப்போது எதிர்பாரா விதமாக பிரபா சங்கர் என்பவருக்கு தீ காயங்கள் ஏற்பட்டது.

அவர் தீக்காயத்தால் கஷ்டப்படுவதை அறிந்த நடிகர் விஷால் தனது தேவி அறக்கட்டளை சார்பில் பிரபாசங்கர் குடும்பத்திற்கு ரூபாய் 50,000 தொகையை வழங்கினார்.

விஷால் மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் திருவள்ளூர் மாவட்ட மக்கள் நல இயக்கத்தின் தலைவர் கண்ணன் ஆகியோர்கள் இந்த தொகையை நேரில் சென்று வழங்கினார்கள்.

Vishal helps the stunt actor who had an accident on the set of ‘Mark Antony’

ஐஸ்வர்யா ரஜினி வீட்டில் திருடிய பெண் கைது.; விசாரணையில் திடுக்கிடும் தகவல்

ஐஸ்வர்யா ரஜினி வீட்டில் திருடிய பெண் கைது.; விசாரணையில் திடுக்கிடும் தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இவர் 3 & வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கினார். தற்போது விக்ராந்த் விஷ்ணு விஷால் நடிக்கும் ‘லால் சலாம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இதில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டு லாக்கரில் இருந்த 60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள் மாயமானதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்த புகாரில், 2019ம் ஆண்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகை மூன்று முறை வீடு மாறியும் எடுக்கப்படவில்லை.

சென்னை செயிண்ட் மேரிஸ் சாலை வீடு, தனுஷின் சிஐடி நகர் வீடு, போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டு லாக்கர் மாறி மாறி வைக்கப்பட்டிருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாக்கரில் இருந்த நகைகள் குறித்து வீட்டில் பணிபுரியும் 3 வேலைக்காரர்களுக்கும் தெரியும் எனவும் புகார் மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த தற்போது அந்த நகைகளை திருடிய ஈஸ்வரி என்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு தன் தங்கை சௌந்தர்யாவின் திருமணத்திற்கு அந்த நகைகளை ஐஸ்வர்யா அணிந்திருந்ததாகவும் அதன் பின்னர் அதில் லாக்கரில் வைத்து விட்டதாகவும் அந்த சாவி வைத்த இடம் தன் வீட்டில் பணிபுரியும் பணியாளருக்கு தெரியும் எனஙும் தெரிவித்திருந்தார்.

இதனை வைத்து அங்கு பணிபுரிந்த பணியாளர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கடந்த சில வருடங்களாக
அந்த வீட்டில் பணிபுரிந்த ஈஸ்வரி என்ற பெண் தான் அந்த நகைகளை திருடியது தெரியவந்தது.

மூன்று வருடங்களுக்கு முன்பு சென்னை புறநகர் பகுதியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை அவர் வாங்கியது தெரிய வந்துள்ளது.

திருடிய நகைகளை விற்று அந்தப் பணத்தை தனது கணவர் வங்கியில் போட்டு உள்ளார்.. அதன் பின்னர் தான் அவர் ஒரு கோடி மதிப்பிலான வீட்டை வாங்கியது தெரிய வந்துள்ளது.

மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டில் அவர் ஐஸ்வர்யா ரஜினி வீட்டில் இருந்து வேலையை விட்டு விட்டதாகவும் தெரிய வந்தது.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில் நகைகளை திருடியது அந்தப் பெண் தான் எனவும் திருடிய 60 சவரன் நகையில் தற்போது 20 சவரன் நகைகள் மட்டுமே உள்ளது எனவும் கூறப்படுகிறது.

Aishwarya Rajinikanth jewel robbery. Police arrested maid

சிம்புவுடன் டூயட் பாடும் பான் இந்தியா நடிகை

சிம்புவுடன் டூயட் பாடும் பான் இந்தியா நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்புவின் அடுத்த படம் ‘STR 48’ கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங் பெரியசாமி இயக்குஉள்ளார். சிம்புவின் கேரியரில் அதிக பொருட்செலவில் எடுக்கப்படம் படம் இது என சொல்லப்படுகிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளது கூடுதல் தகவல்.

‘STR 48’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க வைக்க மூன்று முன்னணி இந்திய நடிகைகளான பூஜா ஹெக்டே, திஷா பதானி மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோருடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. யார் கால்ஷீட் கிடைக்கிறதோ அவர்கள் ஒப்பந்தம் செய்யப்படுவார்கள் என சொல்லப்படுகிறது.

Three pan Indian actresses in talks to pair with Simbu in ‘STR 48’

More Articles
Follows