ஆன்மிக பயணத்தில் அரசியல் பேசாத ஆன்மிக அரசியல் தலைவர் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இமயமலை சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.

அங்கு அவரை ஹிமாச்சல அரசியல் பிரபலங்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

அவர் விமான நிலையத்தில் இருக்கும் போது அவரை சூழ்ந்த செய்தியாளர்கள், விபத்தில் மரணம் அடைந்த திருச்சி உஷா குறித்தும், கொல்லப்பட்ட கல்லூரி மாணவி அஸ்வினி குறித்தும் கேள்விகள் கேட்டுள்ளனர்.

ஆனால் அதற்கு பதிலளிக்காமல் ரஜினிகாந்த் வணக்கம் என்று கூறிவிட்டு சென்று விட்டார்.

இதனால் பல மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டு ரஜினியை கிண்டல் செய்தனர்.

இந்நிலையில் ஏன் பத்திரிக்கையாளர்களிடம் அந்த மரணங்கள் மற்றும் அரசியல் குறித்து பேசவில்லை என்பதற்கு ரஜினிகாந்த் தற்போது பதில் அளித்துள்ளார்.

அதில் ஆன்மிக பயணமாக இமயமலைக்கு வந்துள்ளதால் அரசியல் பேச மாட்டேன்.இது புனிதமான இடம், இங்கே அரசியல் பேச விரும்பவில்லை.” என தெரிவித்துள்ளாராம்.

அவர் தற்போது இமாச்சல பிரதேசம் பாலம்பூரில் இருக்கிறார். இன்னும் ஒரு வாரம் கழித்து ரஜினிகாந்த் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Rajinikanths Himalaya Spiritual tour and Aanmiga Arasiyal updates

பிரபுதேவா தயாரிப்பில் இணையும் சந்தானம்-ராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காமெடியனாக நடித்து வந்த சந்தானம் அண்மைகாலமாக ஹீரோவாக நடித்து வருகிறார்.

தற்போது இவரது நடிப்பில் சர்வர் சுந்தரம், ‘ஓடி ஓடி உழைக்கணும்’, ‘மன்னவன் வந்தானடி’, தில்லுக்கு துட்டு-2 உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன.

இதனையடுத்து ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக முதலில் கூறப்பட்டது.

சில காரணங்களால் அந்த நிறுவனம் இந்த தயாரிப்பை கைவிட தன் பிரபுதேவா ஸ்டூடியோஸ் மூலம் பிரபுதேவா தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

மே அல்லது ஜூன் மாதம் இப்பட சூட்டிங் தொடங்கவுள்ளதாம்.

Director Rajesh teams up with Santhanam in Prabudeva production

கட்டப்பாவுக்கு ராஜ மரியாதை; தமிழருக்கு பெருமை சேர்த்த சத்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் ஆகியோர் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவான படம் பாகுபலி.

இந்த இரண்டு படங்களும் இந்திய சினிமாவின் பெருமையை உலகளவில் கொண்டு சென்றது.

இதில் ராஜ விசுவாசியான கட்டப்பா பாகுபலியை கொல்வது போல காட்சி இருந்தது.

இதனால் சத்யராஜ் நடித்த கட்டப்பா கேரக்டருக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில், இதுநாள் வரை பாலிவுட் நடிகர்களுக்கு மட்டுமே கிடைத்த கவுரவம் இவருக்கு கிடைத்துள்ளது.

லண்டனில் உள்ள மேடம் துஸ்ஸாத் மியூசியம், சத்யராஜின் கட்டப்பா போன்ற மெழுகு சிலையை வைத்து கவுரவப்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னதாக தெலுங்கு நடிகர் பிரபாஸூக்கு பாகுபலி தோற்றத்தில் மெழுகு சிலை வைக்கப்பட்டது.

லண்டனின் மேடம் துஸ்ஸாத் மியூசியத்தில் தமிழ் நடிகர் ஒருவரின் மெழுகுச்சிலை இடம்பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Sathyaraj is the first tamilan got his statue at Madame Tussauds London Museum

இமயமலை சென்று திரும்பியவுடன் ரஜினியின் அடுத்த திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மையில் தனியார் கல்லூரியில் நடந்த ஒரு விழாவில் என்னை தேர்ந்தெடுத்தால் ‘தமிழக அரசியலில் எம்ஜிஆர் அமைத்த ஆட்சியை கொடுப்பேன் என்றார் ரஜினிகாந்த்.

இந்நிலையில்
இன்று அதிகாலை இமயமலைக்கு புறப்பட்டுச் சென்றார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த் கூறியதாவது…

“ இமயமலையில் 10 அல்லது 15 நாட்கள் தங்க திட்டமிட்டுள்ளேன்.

அரசியல் இயக்கம் தொடங்குவது குறித்து முடிவெடுத்த பிறகு இமயமலை செல்கிறேன்.

புதிதாக எந்த வேண்டுதலும் இல்லை. தர்மசாலாவிலிருந்து இமயமலை சென்று, அடுத்து பாபா குகைக்கு சென்று வழிபட உள்ளேன் என தெரிவித்தார்.

இமயமலை சென்று திரும்பியதும்,ரஜினிகாந்த் கட்சியின் பெயரையும், கொடியையும் அறிமுகம் செய்யஇருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது .

உதயநிதி வலையில் இரண்டு மேயாத மான்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதயநிதி ஸ்டாலின் தற்போது நடித்து வரும் படம் ‘கண்ணே கலைமானே’.

சீனுராமசாமி இயக்கும் இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார்.

‘கண்ணே கலைமானே’ படத்தை தொடர்ந்து உதயநிதி இயக்குனர் அட்லியின் உதவியாளர் ஈனாக் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தில் ‘மேயாத மான்’ படப் புகழ் பிரியா பவானி சங்கர் மற்றும் இந்துஜா கதாநாயகிகளாக நடிக்க இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது என்றும் இந்த படத்தின் பூஜை வருகிற தமிழ் புத்தாண்டன்று நடக்கவிருக்கிற்து என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது

அம்பிகா மகன்-லிவிங்ஸ்டன் மகள் இணையும் கலாசல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கலைத்தாய் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பி.சி.பாலு தயாரிக்கும் படம் ‘கலாசல்’.

இதில் அம்பிகாவின் மகன் ராம் கேசவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா அறிமுகமாகிறார்.

இவர்களுடன் ராதாரவி, அம்பிகா, முருகதாஸ், மதன்பாப், அபிஷேக், பானுசந்தர், சாய்பிரியா ஆகியோர் நடிக்கிறார்கள்.

பாபுகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு நிஜாமுதீன் இசை அமைக்கிறார். கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு செய்கிறார்.

அஸ்வின் மாதவன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இவர் சுந்தர்.சி, பத்ரி ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர்.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டபோது..

சினிமாவில் சாதனை புரிந்த அம்பிகாவின் மகன், லிவிங்ஸ்டன் மகள் இருவரையும் வைத்து முதல் படம் இயக்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

மனிதனின் தேவைகள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. நமக்கு தேவை இல்லை என்று நினைக்கிற வி‌ஷயங்களை கடவுளுக்கு காணிக்கையாக செலுத்திவிட்டு, வேண்டியதை கேட்டு பெறுவது ஒரு வியாபாரம் தான்.

நாம் வேண்டாம் என்று செலுத்துகிற காணிக்கை வி‌ஷயங்கள் கார்பரேட் முதலாளிகளால் அப்பாவி மக்கள் மீது எப்படியெல்லாம் திணிக்கப்பட்டு வியாபாரமாக்கப்படுகிறது என்பதுதான் இந்த படத்தின் கதை” என்றார்.

படப்பிடிப்பு வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது.

More Articles
Follows