தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இமயமலை சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.
அங்கு அவரை ஹிமாச்சல அரசியல் பிரபலங்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
அவர் விமான நிலையத்தில் இருக்கும் போது அவரை சூழ்ந்த செய்தியாளர்கள், விபத்தில் மரணம் அடைந்த திருச்சி உஷா குறித்தும், கொல்லப்பட்ட கல்லூரி மாணவி அஸ்வினி குறித்தும் கேள்விகள் கேட்டுள்ளனர்.
ஆனால் அதற்கு பதிலளிக்காமல் ரஜினிகாந்த் வணக்கம் என்று கூறிவிட்டு சென்று விட்டார்.
இதனால் பல மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டு ரஜினியை கிண்டல் செய்தனர்.
இந்நிலையில் ஏன் பத்திரிக்கையாளர்களிடம் அந்த மரணங்கள் மற்றும் அரசியல் குறித்து பேசவில்லை என்பதற்கு ரஜினிகாந்த் தற்போது பதில் அளித்துள்ளார்.
அதில் ஆன்மிக பயணமாக இமயமலைக்கு வந்துள்ளதால் அரசியல் பேச மாட்டேன்.இது புனிதமான இடம், இங்கே அரசியல் பேச விரும்பவில்லை.” என தெரிவித்துள்ளாராம்.
அவர் தற்போது இமாச்சல பிரதேசம் பாலம்பூரில் இருக்கிறார். இன்னும் ஒரு வாரம் கழித்து ரஜினிகாந்த் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Rajinikanths Himalaya Spiritual tour and Aanmiga Arasiyal updates