தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடக்கோரி 100 நாட்களாக பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தினர்.
கடந்த மே மாதம் 22 நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர்.
இது தமிழகமெங்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
கிட்டதட்ட 5 நாட்களுக்கு பின்னர், அங்கு இயல்பு நிலை திரும்பிய பின்னர், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் காயமடைந்தவர்களை சந்தித்து இன்று ஆறுதல் கூறினார்.
அங்குள்ள மக்கள் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு இன்று மாலை அரசாணை வெளியிட்டது.
அரசாணை வெளியிடப்பட்ட சிலமணி நேரங்களில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆலைக்கு வெளியில் அரசின் நோட்டீஸை ஒட்டி, சீல் வைத்தார்.
இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வாய்ஸ் ஆடியோ பதிவிட்டுள்ளார்.
அதில்… ‘போராட்டத்தில் உயிரிழந்த ஆத்மாக்களுக்கு ஸ்டெர்லைட் வெற்றி சமர்ப்பணம். அப்பாவி மக்களின் இரத்தம் குடித்த இந்த மாதிரி போராட்டங்கள் வருங்காலத்தில் தொடரக்கூடாது என்று இறைவனை வேண்டுகிறேன்’ என பேசியுள்ளார்.
இதே சமயத்தில்தான் ரஜினியின் காலா பட ட்ரைலரும் இணையத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
Rajinikanth voice reaction to Tuticorin Sterlite factory closed