தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதற்காக 50க்கும் மேற்பட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் இருந்து நாளை சென்னைக்கு வருகின்றனர்.
எனவே போலீஸ் பாதுகாப்பு கேட்டு காவல்துறைக்கு விண்ணப்பித்துள்ளனர்.
அதில் கொரோனா காலம் என்பதால் சமூக இடைவெளி, முக கவசம் உள்ளிட்ட அரசு வழிமுறைகளை கடைப்பிடிப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று மக்கள் மன்ற மாநில நிர்வாகி சுதாகருடன் தன் போயஸ் கார்டன் இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார் ரஜினி.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றது.
இது தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
தன்னுடைய அரசியல் இறுதி முடிவு தொடர்பான அறிவிப்பை தன்னுடைய மாவட்ட நிர்வாகிகளுடன் நாளை பகிர்ந்து கொள்வார் ரஜினி என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியல் கட்சி பற்றி நாளை அறிவிப்பாரா? என்பதை பார்ப்போம்.
Rajinikanth to hold discussions with district secreatries tomorrow